Apr 22, 2009

மதுர கைபுள்ள காமெடிக்கு கால் இல்ல...பாகம் 02

இக்கதையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'

'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...

எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'

'தல. போ. தல... போ....போ.... டேய், தூக்குடா... தலய புடிடா... கால புடிடா...'

ஸ்கார்பியோவில் ஏத்திவிட்டு, கதவை அடைக்கிறார்கள்.

ஸ்கார்பியோ கதவு திறக்கப்படுகிறது. சாருக்கான் வீட்டு வாசல், சாருக்கான் ஓடி வருகிறார், 'கைப்புள்ள, எங்க இவ்லோ தூரம்? சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே... வா வா என்ன விசயம் சொல்லு'

அண்ணே அதிர்ச்சியாகிறாப்டி, கூடவே கைப்பள்ளயும். அப்ரம்... கைப்புள்ள சிட்சுவேசன சமாளிச்சு அங்கருந்து விட்ரா….. ஜூட்.......

போர வழில அண்ணே, 'ஏன்டா கைப்புள்ள, சாருக்கான எப்புர்ரா ஒனக்கு தெரியும்?'

'க்..க்..க்...நான்தான் சொன்னேன்லண்ணே.... நீ நம்பல..'

அப்பயும் அண்ணுக்கு சின்ன டவுட்...ஏதாவது கொன்டக்க மன்டக்க உள்வேல பண்ணாலும் பண்ணிருப்பானோனு.... 'வாடா கையி.. ஜனாதிபதிய போயி பாத்துட்டு வந்துடலாம்' (அண்ணே மனசுக்குள்ள ரெண்டு திட்டம், ஒன்னு, அவனுக்கு ஜனாதிபதிய தெரிஞ்சிருந்துச்னா அடுத்த ஜனாதிபதிக்கு தம்பேர சிபாரிசு பண்ண சொல்லிடலாம்தெர்லன்னா, ஏரியாகுள்ள அலப்ர பண்ணதுக்கு... கைபுள்ளக்கு அதோ….ட ஆப்பு.)

(கை க்கும் உள்ளுக்குள்ள ஒதரல்தான், ஆனா...வெளிய காட்டிக்காம... என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு...) சரிண்ணே, வாபோலாம்...

ஜனாதிபதி வீட்ல, பாதுகாப்பு சோதனல்லாம் முடிச்சுட்டு...

வீட்ல ஒக்காந்துருக்காங்க... (கைக்கு ஏற்கனவே பேஸ்மட்டம் வீக்ல... கால்லாம் நடுங்குது....)

ஜனாதிபதி வருகிறார், ஹே... கைபுள்ள.. வா வா எப்டி இருக்கீங்கோ? (உதவியாளரிடம்) கைபுள்ளக்கு சாய் லேகிஆனா..., 2 நாள் தங்கியிருந்துட்டு போ..கைபுள்ள, தேர்தல் நேரம்ல நான் கொஞ்சம் முக்கியமான வேலையா வெளிய போறே... ஒடம்ப பாத்துக்க கைபுள்ள... மெலிஞ்சுட்டே போற... சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட

கைபுள்ள அண்ண மொரச்சு பாக்குது...அண்ணே டர்ஸ் ஆராப்டி...

கைபுள்ளக்கு எப்பவும் மூல மட்டும்தான் வேல செய்யாது, அதோட சேர்த்து இப்ப கையும் வேல செய்யல காலும் வேல செய்யல..

அண்ணே ஆஃப் ஆனத பாத்தவொட்ன, கைபுள்ள ஓவரா ஏற ஆரம்பிச்சுடுச்சு...

அண்ணே நீ என்னய போயி சந்தேகப்பட்டியேண்ணே... சர்ணே இப்ப சொல்லு.. ஒனக்கு வேற யார பாக்கனும்? சொல்ணே... இப்பசொல்லு..இப்பசொல்லு..இப்பசொல்லு..

அட...சொல்லு...சொல்லு...சொல்லு...

அண்ணே.. டக்குனு, 'ஒபாமா' ன்டாப்டி... (அண்ணனுக்கு கொஞ்ச நாளாவே ஒலக அரசியல்ல ஒரு கண்ணு)

கைபுள்ளக்கு தெகிரியம், நம்மள மதுர ஆத்தா மீனாச்சி தான் காப்பாத்துறான்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு... வாண்ணே வண்டிய எடுணே போகலாம்னுச்சு...

அண்ணே, 'கைபுள்ள மாட்ணடா மவனே.... ஒபாமா அமெரிக்கால இருக்காருடா' னுட்டு...கைபுள்ளய ஃப்ளைட்ல ஏத்தி, அமெரிக்கால போய் எரக்கி விட்டாப்டி.

கைபுள்ள அசரல, 'இவ்லோ தூரம் ஒத்தாச பண்ண ஆத்தா இனியும் பண்ணுவான்னு' ஒபாமாவ பாக்க போனா...

அவரு முக்கியமான குடியரசு கட்சி மாநாட்ல இருக்காப்டி. நம்ம ஊரு மாரி அங்க மேடைல கூட்டமால்லாம் இருக்க மாட்டங்ஞலாம்ல... ஒபாமா மட்டும் தனியா நன்னுதான் பேசிட்ருக்காப்டி.

லச்ச கணக்ல சனம் கூடி நின்னு பேச்ச கேட்டுட்ருக்கு.

கைபுள்ளயும் அண்ணணும் கடேசில நிக்கிராங்ஞ.....

கைபுள்ள ஓசிக்கிது....'இப்டி நின்னுட்டேருந்தா....ஒன்ன்னும் ஓடியடையாது, நம்மதான் ஏதாவது செஞ்சாகனும்'

'அண்ணே நீ இங்கயே நில்ணே, நான் ஒபாமா பக்கத்ல போயி கைகாட்றேனுட்டு கெளம்பிடுச்சு.

அப்டியே வெரசா போயி... அங்கிட்டு நின்னவேன் கைய கால புடுச்சு, கவுட்டுக்குள்ள போயி...... மேட ஏறிடிச்சு.

"கைபுள்ள ஒபாமா பக்கத்ல நன்னு கைய காட்டுது."

கைபுள்ள அண்ணே பக்கம் பாத்து ஒரு லுக் விடுது, (அந்த லுக் ல அண்ணணுக்கு லக் இல்ல, அன்-லக்கிலுக்)

கொஞ்ச நேரத்துல அண்ணே மயக்கம்போட்டு விழுந்துட்டாப்டி.

கைபுள்ள (பாசக்கார பயபுள்ளைல) ஓடிவந்து தண்ணிய கிண்ணிய தெளிச்சு... அண்ணன எழுப்பிவிட்டு கேட்டுச்சாம், 'ஏண்ணே இப்டி பண்ணிபுட்ட... அப்டி என்ன புதுசா பாத்துப்புட்ட? எப்பவும் நடக்றது தானணணே?' என்று கேட்க,

அண்ணே சொன்னாப்டி, 'கைபுள்ள, நீ மேடல போயி கை காட்டுனத கூட தாங்கிட்டேன்டா.... ஆனா, என் பக்கத்ல நன்ன ஒருத்தன் கேட்டான், 'ஆமா... கைபுள்ள பக்கத்ல நின்னு ஒருத்தன் மைக்ல பேசிட்ருக்கானே, யாரவன்?' னு...

2 comments:

  1. ஆகா.. நம்ம ஊருக்கார கைப்புள்ளைய்யா நீங்க.. உங்களைப் பார்த்துதல ரொம்ப சந்தோஷம்னே.. நல்லா சிரிக்கிற மாதிரி எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. அப்புறம்.. உங்களை பாலோ பண்ண ஆப்ஷன் கொடுங்க நண்பா

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி! கார்த்திகைப் பாண்டியன்,
    அடிக்கடி வருக!!!
    தங்கள் கட்டளைக்கிணங்க ஃபாலோ (நம்பினார் கெடுவதில்லை...) போட்டேன் நண்பா...

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.