Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Aug 12, 2009

பன்றிக்காய்சல் பாதுகாப்பு நடவடிக்கை

மின் அஞ்சலில் வந்த தகவல்;

நீலகிரி தைலத்தை (Eucalyptus oil) சில துளிகள் கைக்குட்டையில் விட்டு, மூக்கை மூடிக்கொள்வதுவும் பன்றிக்காய்சலுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் வைராலஜி தெரிவிக்கிறது.

சென்னையில் பன்றிக்காய்சல் குறித்தான தொடர்பிற்கு; 044 2432 1569 என்ற எண்ணை அழைக்கலாம்.

Cipla has launched a new drug against Swine Flu (Virenza), as an alternative option to Osetalmavir drug. Please find attached herewith the availability centers.

Swine

பன்றிக்காய்சல் பற்றிய விபரங்களுக்கு வாசிக்கவும்

பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன். - இட்லிவடை

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! - மருத்துவர் தேவா

பன்றிக் காய்ச்சல்-2 - மருத்துவர் தேவா

இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்) - பத்ரி (மருத்துவர் புருனோ - ஒலிவடிவம்)

பன்றி காய்சல் அபாயம். - எனது இடுகை

May 6, 2009

மன உளைச்சல்

மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்றுங்கள்.

உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையா?

உங்களுக்கு எப்போதும் மனக்கவலையா?

உங்கள் கை நடுக்கம் மற்றும் உள்ளங்கை வியர்வை சுரக்கிறதா?

இவை எல்லாம் மன உளைச்சலுக்கான அறிகுறிகள்.

மன உளைச்சலை கட்டுப்படுத்த முடியும், அது உங்களை கட்டுப்படுத்தும்முன்.

மன உளைச்சல் என்றால் என்ன?

அன்றாட வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் நம் உடலின் பதில் தான் மன உளைச்சல் என்பது. இதில் ஹார்மோன்கள் மற்றும் அட்ரினாலின் வெளிப்பாடும் அடங்கும். அட்ரினாலின் சுரப்பியின் விளையாக இருதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த சக்கரை அளவு கூடுகிறது. மேலும் இது, இரத்த ஓட்டத்தை செரிமான அமைப்பிலிருந்து தசைகளுக்கு மாற்றுகிறது.

மட்டுமல்லாது அதிக நாட்கள் மன உளைச்சலுடன் வாழ்வது, நமது உடல் ஆரோக்கியம், உறவு மற்றும் சந்தோசங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதும் மறுக்க முடியாதது.

மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன?

நேர் மறையான மற்றும் எதிர் மறையான நிகழ்வுகள் இரண்டுமே மன உளைச்சலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது.

பொதுவான காரணங்களாக கருதப்படுபவை;

பெரும்பாலும் வாழ்க்கை மாற்றங்கள்:

அன்புக்குறியோரின் மரணம்.

விபத்து.

சட்டப்பிரச்சனை,

இடமாற்றம்

கடன்,

உடல் நலக்குறைவு,

திருமணம்,

கர்பம்,

புதிய பணி,

விவாகரத்து,

பணியின்மை.

சுற்றுச்சூழல் நிகழ்வு;

அதிகப்படியான ஒலி,

போக்குவரத்து நெரிசல்,

நேர அழுத்தம்,

போட்டி,

தொற்று நோய்,

மன உளைச்சலின் பாதிப்புகள் என்ன?

உடலியல் பாதிப்புகள்;

தலை மற்றும் வயிற்று வலி,

தசை அழுத்தம்,

வேகமான இருதயத்துடிப்பு,

தூக்கமின்மை,

பசியின்மை அல்லது அதிக பசி,

உள்ளங்கை வியர்வை,

உணர்வியல் பாதிப்புகள்;

பதட்டம்,

எளிதில் உணர்ச்சிவசப்படுதல்,

அதிகப்படியான கவலை,

துன்பம்,

பற்றாமை எண்ணம்,

மனவியல் பாதிப்புகள்;

கவனமின்மை,

மறதி,

நம்பிக்கையின்மை

மன உளைச்சலை கட்டுப்படுத்துவது எப்படி?

சிலர் எதிர் மறையான நடவடிக்கைகளான புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலை சமாளிக்க முற்படுவர். இது மன உளைச்சலை கட்டுப்படுத்தியதாக முகமூடியை தந்து இவர்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமல்லாது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இத்தகைய பழக்கங்கள் முற்றிலும் தவறு மற்றும் தவிர்கப்படவேண்டியதாகும்.

மன உளைச்சலை தகர்த்தெரிய;

நேரத்தை சரியாக திட்டமிடுதல்.

தினசரி திட்டமிடல் அவசியம். மிக முக்கியமான செயல்களுக்கு முக்கியத்துவம், பெரிய தேவைகளை உடைத்து சமாளிக்க முடிந்த சிறியவைகளாக ஆக்குதல், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

செய்வதை நேர்மையாய் செய்தல்.

நமக்கு தகுதியான மற்றும் விருப்பமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல். நம்மால் செய்ய முடிந்த வேலைக்கான திட்டமிடல் மற்றும் உற்றுநோக்குதல்.

முக்கியமான வாழ்க்கை மாற்றங்களை பிரித்தல்.

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொறு மாற்றத்திற்கும் போதிய இடைவெளி, அதாவது ஒரே சமயத்தில் பணி மாற்றம், புது வீடு வாகனம் வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல்.

நமக்கிருக்கும பிரச்சனைகளை பற்றி யாரிடமாவது பேசுதல்.

உதவிகோருதல் என்பது இயலாமையின் வெளிப்பாடாகிவிடாது. நமது பிரச்சனைகளை குடும்பத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, மேற்பார்வையாளரிடமோ அல்லது மதத்தலைவரிடமோ மனம்விட்டு பேசுவதன் மூலம் உணர்ச்சிவசப்படுவது குறையும் மற்றும் உளவியல் ரீதியாக ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றியிருத்தல்.

குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நம் வாழ்க்கையின் அங்கம், அவர்களே நமக்கு அன்பு, பாசம், நட்பு மற்றும் தேவையானபோது ஆதரவு தருபவர்கள்.

நம்மை நாமே விரும்ப கற்றுக்கொள்ளுதல்.

நம்மை கண்டு நாம் முதலில் சந்தோசப்படவேண்டும். மற்றவர் முன்னிலையில் நாம் எப்படி தோன்றமளிக்கின்றோம் என்பதில் கவலை கொள்ளாமல், நம் தோற்றத்தில் மகிழ்தல். நேர் எண்ணங்களின் வகையாதல் மிக முக்கியம். அது நமக்கு காட்டித்தரும், நம்மால் எதை மாற்ற முடியும் எதை நமது வாழ்வின் மிகச்சிறந்ததாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை.

ஆரோக்கியமான வாழ்க்கை.

உடற்பயிற்சியின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு உட்கொள்ளுதலும், அளவான உறக்கமும் மிக அவசியம்.

நமக்காக நேரம் ஒதுக்குதல்.

நமக்கு விருப்பமானவற்றை செய்ய நேரம் ஒதுக்குதல், பாட்டு, நடனம், ஓவியம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் நமக்கு விருப்பமானவற்றை செய்தல். சோர்வாகும் போது சிறிது ஓய்வெடுத்தல்.

இளைப்பாற கற்றுக்கொள்ளுதல்

ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல்.

ஆழ்ந்த சுவாசம் பயிற்சி.

  1. ஒலிபெருக்கியில் மெல்லிய இசையை ஓடவிடுங்கள்.
  2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
  3. வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள்.
  4. கண்களை மூடிக்கொண்டு ஒரு கையை வயிற்றில் வைக்கவும்.
  5. மெதுவாக சுவாசத்தை மூக்கினூடாய் உள்ளிழுக்கவும்,
  6. பின்பு மெதுவாக வாய்வழியே வெளியிடவும்.
  7. இதே பயிற்சியை 4-5 முறை 5-10 நிமிடங்கள் செய்யவும், நீங்கள் ஆசுவாசப்படும்வரை.

விழிசார் கற்பனை பயிற்சி.

இந்த பயிற்சிக்கு 10-15 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நேரமிருந்தால் ஆழ்ந்த சுவாசப்பயிற்சியை தொடர்ந்து இதை செய்யலாம்.

  1. வசதியான இடத்தில் நல்ல அமைதியான மெல்லிசையை ஒலிபெருக்கியில் ஓட விடுங்கள்.
  2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
  3. வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
  4. கண்களை மூடிக்கொள்ளுங்கள். கவலைகளை ஒரு ஓரமாக மூட்டைகட்டி வையுங்கள்.
  5. மெதுவாக சுவாசிக்கவும்.
  6. நீங்கள் பச்சை புல்வெளியில் நடந்துகொண்டிருக்கிறீர்கள், சுற்றிலும் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது, பறவைகளின் ரீங்காரம் கேட்பதாக கற்பனை செய்யுங்கள்
  7. தென்றல் உங்களை தழுவுவதாகவும் உணருங்கள்.
  8. நடைபாதையின் முடிவில் வெள்ளை மணல் கடற்கரையும், சூரிய உதயத்தையும் பாருங்கள்.
  9. நீங்கள் ஆசுவாசப்படும்வரை இந்த பயிற்சியை தொடருங்கள்.

இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பது உங்கள் மீது கடமையாகிறது...

May 3, 2009

பன்றி காய்சல் அபாயம்

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus)

SIV என்று சொல்லப்படக்கூடிய ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus) தமிழில் பன்றி காய்சல் என்பது, ஐரோப்பிய நாடுகளிலிருந்து உலகம் முழுக்க பரவுவதற்கு சாத்தியமுள்ள நச்சுக்கிருமியாகும். (Swine Flu) பன்றி காய்சலானது (Birds Flu) பறவை காய்சலிலிருந்து மாறுபட்டு, மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது.

2009 ல் முதல் பன்றி காய்சலின் திடீர் கிளர்ச்சியானது உடைந்த H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலிருந்து வெடித்ததாக மெக்ஸிக்கோ பொது சுகாதார நிறுவனத்தால் மார்ச் 2009 ல் கண்டறியப்பட்டது. அதன் தொடற்சியாக, மெக்ஸிகோவின் எல்லைக்கு அருகாமையிலிருக்கும் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது, கனடா,ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகளிலும் இதன் பாதிப்பு சுமார் 1800 நோயாளிகளுக்கு இருக்குமென்று அறியப்படுள்ளது.

பன்றி காய்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஸ்வைன் ஃப்ளு எனப்படுகிற பன்றி காய்சலானது, அதிகப்படியான ஸ்வைன் A(H1N1) வைரஸிலிருந்து மூர்கத்தனமாக பன்றிகளுக்கு தொற்றிக்கொண்டு அவற்றை செயலிலக்கச்செய்யும் ஒரு நுண் கிருமி ஆகும். இக்கிருமியின் பாதிப்பால் பன்றிகளுக்கு திடீர் நலக்குறைவு உண்டாகுமே தவிர அதிகமான பன்றிகள் கொல்லப்படுவதில்லை

இதே H1N1 வைரஸ் தான் மனித H1N1 வைரஸா?

இல்லை இந்த H1N1 ஆனது முற்றிலும் மாறுபட்டது, எனவே மனித H1N1 வைரஸிற்கான மருந்தானது இவற்றிக்கு பாதுகாப்பளிக்காது.

மனிதற்களுக்கு இந்நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளதா?

பன்றி காய்சலானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனினும் சில சந்தர்பங்களில் பன்றி காய்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய தொழிலாளர் போன்றோருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

அவ்வாறு தொற்றிக்கொண்டால் அதன் அறிகுறிகள் என்ன?

காய்சல், இருமல், சோர்வு, பசியின்மை, தொண்டை புண், உடல் வலி, தலை வலி சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்படலாம்

இதே வகையான (ஸ்வைன் ஃப்ளு) பன்றி காய்சல் தான் மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தொற்றிக்கொண்டுள்ளதா?

மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பாதிப்படைந்த நோயாளிகளின் கிருமி மாதிரி ஒரே வகையானது என்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த கிருமியானது வட அமெரிக்காவிலிருந்து மனித கிருமி மற்றும் பறவை கிருமியும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆசிய நாடுகளின் பன்றி கிருமியும் சேர்ந்த கலவையாகும். அதாவது மிக்ஸ் வைரஸ்.

இதற்கு நிவாரண மருந்து?

டாமிஃப்ளு (TamiFlu) மாதிரியான 4 வகை மருந்துகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது, எனினும் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகிலுள்ள மருத்துவமனையை அனுகுவது நல்லது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் வாழ்பவர்களுக்கு ப்ரத்யேகமாக ஏதாவது?

நோய் பரவுவதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க; அடிக்கடி கைகழுவுதல், இருமல் அல்லது தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர் நீங்களாயிருந்தால் வீட்டிலேயே இருக்கவும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

இது அனைத்து நாட்டினருக்குமான பொது அறிவுரையாகவே தோன்றுகிறது

நாடு

உறுதி

செய்யப்பட்டது

மற்ற

வாய்ப்பிருப்பது

இறப்பு

தொடுப்பு

மெக்ஸிக்கோ (details)

26

1,995

149 (20)

[1][2]

அமெரிக்கா (details)

48

212+

0

[3][2][4]

கனடா (details)

6

28+

0

[2][5]

ஐக்கிய நாடுகள் (details)

2

21

0

[6]

ஸ்பெயின் (details)

1

35

0

[7][8]

நியுஸிலாந்து

0

56

0

[9]

ஆஸ்திரேலியா

0

19

0

[10][11]

கொலம்பியா

0

12

0

[12]

பிரேசில்

0

11

0

[13][14]

ஸ்விசர்லாந்து

0

5

0

[15]

டென்மார்க்

0

4

0

[16]

ஐயர்லாந்து

0

4

0

[17]

செக் குடியரசு

0

3

0

[18]

போலந்து

0

3

0

[19]

பிரான்ஸ்

0

3

0

[20]

கவுட்மாலா

0

3

0

[21]

இஸ்ரேல்

0

2

0

[22]

அர்ஜன்டீனா

0

1

0

[23]

கொஸ்டாரிகா

0

1

0

[24]

பெரு

0

1

0

[25]

ரஷ்யா

0

1

0

[26]

தென் கொரியா

0

1

0

[27]

மொத்தம்

83

2,443+

149 (20)

* Not all cases have been confirmed as being due to this strain. Possible cases are cases of influenza-like illness (ILI) that have not been confirmed through testing to be due to this strain. ‡ Deaths with confirmed presence of virus in parentheses.

இந்த தகவல்கள் யாவும் பொதுநலன் கருதி கீழே குறிப்பிட்டுள்ள வலைகளில் இருந்து திரப்பட்டது.

www.cdc.gov/travel

http://www.who.int/

http://www.mayoclinic.com/

http://en.wikipedia.org/wiki/2009_swine_flu_outbreak_in_Mexico

Apr 20, 2009

எச்சரிக்கை - எய்ட்ஸ் இப்படியும் பரவுதாங்க...

அது கர்னாடகா, பெங்கலூருவிலுள்ள மருத்துவமனை.

10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது பெற்றோர் வெளி நோயாளிகள் பரிவில் காத்திருந்து, மருத்துவரிடம் காட்டுகிறார்கள். 'டாக்டர்...பையனுக்கு பத்து நாளா ஒரே காய்ச்சல், வாந்தி, மயக்கமா இருக்கு டாக்டர்,'

மருத்துவர் சிறுவனை பரிசோதிக்கிறார். ஏதோ பொறிதட்ட, பெற்றோரிடம், சிறுவனின் இரத்தத்தை சோதிக்க பரிந்துரைக்கிறார்.

இரத்த பரிசோதனையில் தெரியவருகிறது, 'சிறுவனுக்கு எய்ட்ஸ'

பெற்றோர் அதிர்கிறார்கள், ' சான்ஸே இல்ல டாக்டர்.. குட் யு ப்ளீஸ், செக் அன் கன்ஃபம் இட் ஒன்ஸ்அகைன்?'

'இல்லம்மா, நாங்க கன்ஃபம் பண்ணிதான் சொல்றோம், அவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் ஆரம்பம் ஆகிடுச்சு'

சிறுவனிடம் விசாரனை செய்கிறார்கள், அவன் எங்கெங்கு சென்றான்? என்னென்ன சாப்பிட்டான், எனபதெல்லாம்... சிறுவன் இறுதியாய் சொன்ன, 'ரோட்டு வண்டில பைன் ஆப்பில் சாப்டேன்' மருத்துவர்களுக்கு சந்தேகத்தை கிளப்ப... விரைகிறார்கள்... அந்த தெருவோர வண்டியை நோக்கி...

பெங்கலூரு நகரின் சந்தடிமிக்க தெருவோர வண்டி, அன்னாசி பழத்தை கூர்மையான கத்தியை கொண்டு நருக்கிக்கொண்டிருக்கும் வியாபாரியின் கையில் சிறிய ஒரு காயம்... இரத்தம் கசிகின்றது

மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.

வியாபாரியும் அதுவரை அறிந்திருக்கவில்லை, தனக்கு 'எய்ட்ஸ் இருப்பதை'

இது எனக்கு இன்று வந்த மின்மடல், அதிர்ந்துவிட்டேன். இது சம்பந்தமாக (என்னைப்போன்ற சாமானியனுக்கும் விளங்கும் தமிழில் தெளிவாய் எழுதும்) மருத்துவர் புருனோ ஐயா மற்றும் பலரிடம் விசாரித்தபோது,

நான் விசாரித்த / எனக்கு விளக்கப்பட்ட வரையில், எய்ட்ஸ் நோயை தரக்கூடிய, HIV கிருமியானது உணவின் மூலமோ, காற்றின் மூலமோ, பரவக்கூடியது அல்ல. சிறிதளவு HIV பாதிக்கப்பட்ட இரத்தம் உட்கொள்ளப்பட்டாலும் அது, வயிற்றிலிருந்து சுரக்கப்படுகின்ற ஒரு அமிலத்தால் அழிக்கப்பட்டுவிடும். எய்ட்ஸ் உணவு வழியாக பரவியதாக இது வரை நிருபிக்கப்படவில்லை. HIV பாதிக்கப்பட்ட இரத்தம் உள்ள உணவை கையால் வாங்கும் போது, ஒரு வேளை சிறுவனின் கையிலும் காயமிருந்து இரத்தம் கசியுமாயின், அந்த இரத்தத்தினூடாய் HIV பரவ வாய்ப்புள்ளது. அதே நேரம் டைப்பாயிட் போன்ற நோய்கள் இப்படி பரவ வாய்ப்புள்ளது.

ஐயம்; மருத்துவம் கற்றவர்களிடம், இவ்வாறு சம்பவிக்க சாத்தியம் உள்ளதா? தயவுசெய்து விளக்கவும்...

ஆனாலும், நண்பர்களே, தெருவோர கடைகளிலிருந்து உண்பதை தவிர்த்திடுங்கள் / கவனமாயிருங்கள். 'குறிப்பிட்டு குழந்தைகள் விடயத்தில்'