Feb 7, 2016

Shame on you JEMO

கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? - ஜெயமோகன்

இவையொன்றும் ஜெமோவிற்கு புதிதல்ல, திரைப்படத்திற்கு வசன வாய்ப்பு இல்லாத போது தம் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் இஸ்லாமிய வெறுப்பை கதையெடுக்கிறார். அந்த மதவெறி இவர் கண்ணை மறைத்து நெடுந்தூரம் கொண்டு சென்றுவிட்டது. மதவெறி வாந்தி இல்லாத இவரது கட்டுரையை காண்பது அறிதாகிவிட்டது. தனக்குத்தானே கடிதம் எழுதும் இவரது சுயபிரபல வெறி எளிதில் தீ பற்றும் இஸ்லாமிய சப்ஜக்டை எப்போதும் உரசிப்பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

என் திருமணத்திற்கு வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தான் சோமு. அவர்களுக்காகவே சைவ உணவு சமைத்திருந்தோம். ஆனால் நண்பன் சித்தீக் தனியாகத்தான் வந்திருந்தான். 10 வருடத்திற்கு முன்பு என்னுடன் குவைத் அறையில் இருந்த நசீர், பாஷா இருவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. ஆனால் பெருமாள் ராஜு இப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

கடந்த ஈகைப் பெருநாளில் என் வீட்டு பிரியாணி (ஒன்றிரண்டு முஸ்லிம் நண்பர்களைத்தவிர) அனைத்தும் அக்கம் பக்கத்து இந்து, கிருத்தவ வீடுகளுக்குத்தான் சென்றது. கூடவே தினமணி ஈகைத்திருநாள் சிறப்பு மலரும், அடையாறு ஆனந்தபவன் இனிப்பும். இடப்பக்க வீட்டில் முன்பே வாய்க்கால் தகராறு இருந்தது. ஆனாலும் வீட்டுக்கதவு தட்டி உள் சென்றோம். அவர்களும் புன்னகையுடன் வரவேற்றனர். அதேபோல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீபாவளி ஸ்வீட் என் வீட்டிற்கும் வருவது வழக்கம்.

இந்துத்துவ கப்பலில் சொகுசு சவாரி செய்தாலும் சமகால தமிழின் சிறந்த எழுத்தாளரான உங்களுக்கு இத்தகைய மதம்கடந்த மனிதநேயங்கள் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.


- உங்களது ஆசான்கள் கற்றுக் கொடுத்த பிரித்தாளும் சூழ்ச்சி விசத்தை, கண்ணாடி பார்த்துக்கொண்டு விருந்தினர் மாளிகை மலக்கூடம் சென்று வெளியெடுங்கள்... இங்கு வேண்டாம். விளம்பர வெறி உங்கள் கண்ணை மறைக்கிறது, வெட்கப்பட வேண்டும், ஜெமோ.  #shameonyouJEMO 

No comments:

Post a Comment

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.