Showing posts with label படம் காட்டுதல். Show all posts
Showing posts with label படம் காட்டுதல். Show all posts

Sep 7, 2009

அந்தரங்க கேள்விகள் – அதிரும் ஸ்டார்

நாம், நம் நண்பனுக்கு உண்மையாக இருக்கிறோமா? உறவினரிடத்தில்? மனைவியிடத்தில்? அட…முதலில் நாம், நமக்கு உண்மையாக இருக்கிறோமா? நமக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது, ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியின் ‘ஸச்கா சாம்னா’ என்ற தொடர், இதை 'உண்மைக்கு எதிராக' என்று தமிழிலும் படுத்தலாம்.

sackkasamna_full

இது ஒரு கேம்-ஷோ. இதில் பங்கு பெறுபவருக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, உண்மை கண்டறியும் (polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது. அவற்றில் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் 21 கேள்விகளுக்கான பதிலை நிகழ்ச்சியில் கேமரா, மனைவி, உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பாக சொல்ல வேண்டும். சொல்லப்படும் பதில், உண்மையறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த பதிலுடன் ஒத்திருந்தால் பரிசு. 21 கேள்விகளுக்கும் சரியான பதில் ‘உண்மை’ சொல்லப்பட்டால் 1 கோடியாம். மற்ற கேம் ஷோக்கள் போலத்தான் விதிமுறைகள், இடையேயும் விலகி போகலாம. கேள்விகள் எது மாதிரியாகவும் இருக்கும். பதில், இனிக்குமா? கசக்குமா? உண்மை… எப்படியிருக்கும்? தெரிந்து கொள்ள நிகழ்ச்சியில் ஒருவருக்கு கேட்கப்பட்ட கேள்விகள்.

அவர் இந்திய விமான படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிக்கு அவரது மனைவி, சகோதரன் மற்றும் அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள். கேள்விகள்…

  1. விமான படையில் தங்களுக்கென வழங்கப்படும் மது வகைகளை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறீர்களா? பதில்: ம்யூட் செய்யப்பட்டுவிட்டது.
  2. பள்ளியில் படிக்கும் போது, பாலியல் புத்தகங்கள் படித்து ஆசிரியரிடம் மாட்டியதுண்டா? பதில்: ஆம்.
  3. உங்கள் மனைவி நன்றாக சமைப்பாரா? பதில்: இல்லை.
  4. உங்களைவிட உயரமானவர்களை கண்டால், தாழ்வு மனப்பான்மை வருவதுண்டா? பதில்: ஆம்.
  5. சகோதரனை, அவருடைய மனைவிக்கு எதிராக திருப்பி விட்டதுண்டா? பதில்: ஆம்.
  6. திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் அதிகமாக பொய் சொல்வதுண்டா? பதில்: ஆம்.
  7. இராணுவத்தில் இருந்த போது, இராணுவ விசாரனையில் குற்றம் சாட்டப்படும்படியாக (மாட்டியிருந்தால்) ஏதாவது செய்ததுண்டா? பதில்: ஆம்.
  8. உங்களுடைய தாயின் மரணத்திற்கு நீங்கள் காரணமென உணர்கிறீர்களா? பதில்: ஆம்
  9. உங்களுடைய மனைவி, உங்களைவிட சிறந்த கணவரை அடைய தகுதியுடையவர் என நம்புகிறீர்களா? பதில்: ஆம்.
  10. இரயிலில் பயணம் செய்த போது, உங்கள் மனைவி அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க, வேறொருவரை உடல் ரீதியாக துன்புருத்தியதுண்டா? பதில்: ஆம்.
  11. தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் ஃபோன் செக்ஸ் செய்ததுண்டா? பதில்: ஆம்.
  12. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, கவனக்குறைவான ஏதேனும் வேலை செய்ததுண்டா? பதில்: ஆம்.
  13. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, நீங்கள் பணியாற்றிய ஏதேனும் விமானத்தின் விபத்திற்கு நீங்கள் காரணமாகியதுண்டா? பதில்: இல்லை.
  14. உங்கள் மனைவிக்குத் தெரியாத ஏதேனும் நோய் உங்களுக்கு உள்ளதா? பதில்: ஆம்.
  15. உங்கள் மனைவியை உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பதில்: இல்லை.
  16. பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.
  17. உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை முகம் தெரியாத வேறு யாருக்காவது அனுப்பியதுண்டா? பதில்: இல்லை.

தவறான பதில். அவர் வென்றிருந்த பத்து லட்சம் ரூபாயோடு வெளியேறினார்.

ஒவ்வொறு கேள்விகளுக்கும் இடையிடையே கலந்து கொண்டவருடைய கருத்தும் கேட்கப்படுகிறது. உறவினர் மற்றும் நண்பர்களுடைய கருதும் ஏதாவதிருப்பின். 15 ஆவது கேள்விக்கு அவரும் அவருடைய மனைவியும் தெரிவித்த கருத்து வியக்க வைத்தது. ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று மனைவியும். ‘விருப்பம், காதல் என்பதைவிட நான் அவளை கவனித்துக் (Care) கொள்கிறேன் என்பது தான் சரியாக இருக்கும்’ என்பதாக அவரும் சொல்கிறார்கள்.

‘ஸச்கா சாம்னா’ முதலாவது நிகழ்ச்சியின் கடைசிக் கேள்வி, திருமணமான பெண்ணிடம் கேட்கப்படுகிறது, “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?” உண்மை கண்டறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த சரியான பதில் “ஆம்” என்பது. ஆனால் “இல்லை” என்பது தான் சரியான பதிலாக இருக்கக் கூடும் அல்லது இருக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தத்தில் “இல்லை” என்று சொல்லிவிட, பரிசை இழந்தவராக வெளியேறியவருடைய திருமண வாழ்வு முறிந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(

இந்த நிகழ்ச்சிக்கு சிலரை நான் முன்மொழிகிறேன்.

  • அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
  • ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
  • வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
  • மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
  • நான், நீங்கள்: சுய துரோகம்.

Aug 24, 2009

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

OLYMPUS DIGITAL CAMERA

பதின்இரண்டு: நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று: அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து: அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது: அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு: அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு: அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து: அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு: அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று: இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு: அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று: அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

love-wallpaper24

Apr 28, 2009

ரஜினி ரசிகர்கள் ரசிக்க... மற்றவர்கள் சிரிக்க...

இந்த வீடியோவை பாருங்கள்... நிச்சயம் ரஜினி ரசிகர்கள் எல்லாம் ரசிப்பீர்கள்... மற்ற அனைவரும் சிரிப்பீர்கள்...

ஒருவேளை சுல்தான் இப்படித்தான் இருக்குமோ?

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

Apr 26, 2009

அழகிக்கு நேர்ந்த அவமானம்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங்கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்பட வேண்டியது அடக்கமாகும். அடக்கத்தை விட ஆக்கம் தரக்கூடியது வேறொன்றுமில்லை.

ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாக போற்றப்படுகிறது.

-திருக்குறள்

*************************************************************

வேறென்ன சொல்ல....

Apr 14, 2009

விடுப்பு ஊதியம் எப்படி வந்தது தெரியுமா?

விடுப்பு ஊதியம் எப்படி வந்தது தெரியுமா?

நீங்கள் 1752 செப்டம்பர் மாத நாட்காட்டி பார்த்துள்ளீர்களா?

கீழே உள்ள நாட்காட்டி படத்தை பார்க்கவும்.

ஆச்சரியம்!!! இல்லையா??? ஒரு மாதத்தில் மொத்த‌மாக‌ 11 நாட்க‌ள் காண‌வில்லை.

இது எப்படி சாத்தியம்?

1752 செப்டம்பர் மாதம் தான் இங்கிலாந்து ரோமன் நாட்காட்டியில் இருந்து க்ரெகொரியன் நாட்காட்டிக்கு மாறியது. அது சமயம் இங்கிலாந்து நாட்டு மன்னன் அம்மாதத்தின் 11 நாட்களை நாட்காட்டியில் இருந்து அழிக்கச்சொல்லிவிட்டானாம்.

சந்தேகமில்லாமல் அப்போது பணியாளர்கள் 11 நாட்கள் குறைவாக வேலை செய்திருப்பார்கள், ஆனாலும் 30 நாட்களுக்கான ஊதியம் கிடைத்திருக்கும்... J J J

Apr 11, 2009

படம் காட்டுதல் 01 - வெற்றிக்கு 10 ஆலோசனைகள்

10. முடியாதது என்று ஒன்றும் இல்லை.
09. வேலை வாங்குபவர் அருகில் இருக்கும் போது புன்னகை.
08. ஓய்வும் இளைப்பாறுதலும் 07. மழை காலத்துக்கு சேமித்தல் 06. நமது பின்புறம் காண, நம்பிக்கையான துணையை சார்ந்திருத்தல். 05. குழு வேலைக்கு பயிற்சி 04. உடல் நலம் பேண, உடற்பயிற்சி
03. செய்யும் வேலையில் குறி
02. அதிக உயரத்திற்கு இலக்கு
01. பிரச்னையில் சிக்காமை

Nov 16, 2008

அல்லாஹ்வின் அருள் அரபு நாடன் மீது...

நபி மொழி ஒன்று ஞாபகம் வருகிறது, அது மக்காவை விட்டு முஹம்மது நபி (ஸல்) மற்றும் நபிதோழர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து நாட்கள் ஆன சமயம், (மதீனா வந்தபோது நபிதோழர்கள் மிக வறுமையில் இருந்தார்கள்) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போரில் கிடைத்த பொருட்களை பகிர்ந்தளித்து கொண்டிருக்கும் போது கூறியதாக அந்த நபி மொழி வருகிறது, "இனி உங்களுடைய வாழ்வில் செல்வ செழிப்புதான். வறுமையை கண்டு அஞ்ச தேவையில்லை, நான் அஞ்சுவதெல்லாம் உங்களுக்கு கிடைக்கபோகும் அந்த செல்வத்தை எண்ணித்தான்". எத்தனை உண்மை பாருங்கள்...