Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Oct 12, 2011

கத்தார் - பறந்த எண்ணம்

Qatar-Fastest growing region in middle east என்று குவைத்தில் என் முன்னாள் சக பணியாள் ஒரு மலையாளி சொன்னதுமே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்துவிடும் எண்ணம் இல்லாத மூளையின் ஒரு மூலையில் சம்மணமிட்டுக்கொண்டது. அடுத்த சில மாதங்களில் தமிழ்பிரியன் கத்தாரைப் பற்றிச் சொன்னதும் எண்ணம் உருமாறி விமானத்தில் பறந்தது.

தோஹா சர்வதேச விமான நிலையம்.
விமானத்திலிருந்து இறங்கி நான் ஏறிய பேருந்து, விமானநிலையம் வந்து சேர 2 கிலோமீட்டராவது உருண்டு சென்றிருக்கும். புதிதாக கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய நிலையம். பரந்த இடத்தில் பரவலாக கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்த குண்டு குடிபுகு அதிகாரி'னி என்னிடம்;
'எங்கிருந்து வருகிறாய்?'
'மதுரை' 
'ம்..?' 
'இல்லை.. சென்னை'
'டங்ங்ங்ங்' நெற்றிப்பொட்டில் ஸ்டாம்ப் அடிப்பது போன்ற உணர்வு. பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். கான்வே பெல்டை ஒரு நேபாளி நாக்கால் நக்காதது தான் குறை, தேய் தேய் என் தேய்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நான் இளித்த பல் தெரிந்தது.படு சுத்தம். தாமதிக்காமல் லக்கேஜ் நகர்ந்து வந்து சேர்ந்தது. வெளியே கம்பெனி பெயரை கையில் ஏந்தி காத்திருந்த சிங்களவனுடன் அடுத்த பயணம் தொடங்கியது.

'ஆ' வென்றிருந்த சாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் ஆனால், மிகவும் உயரமில்லா பெரும்பாலும் பழைய  கட்டிடங்கள், அடிக்கடி நிறுத்திப்பார்க்கும் ட்ராஃபிக் சிக்னல், நகரத்தின் நடுநடுவே மிகப்பரவலான வெற்றிடமும் அதற்கடுத்து வரும் மாலின் சன நெரிசலும் ஏதோ இந்த நகரம் திட்டமிடாமல் தானாக அமைத்துக் கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஒன்றை சொல்லியே ஆகவேண்டும், கத்தாரில் நான் சென்ற இடங்கலெல்லாம் ரவுண்டானாக்களால் பின்னப்பட்டிருக்கிறது. நகரின் அதிமுக்கிய சாலைகளின் நெரிசல் ரவுண்டானாக்களால் கட்டுப்படுத்தப்படுவதும் சில ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டிருக்கும் ட்ராஃபிக் சிக்னலால் நெரிசல் அதிகரிப்பதை காணும் போதும் எரிச்சல் அதிகமாகும். இங்கு குறிப்பிட்டளவே பாலங்களை காணமுடிந்தது. நகருக்குள் இரண்டோ மூன்றோ பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தோஹாவின் உள்கட்டுமானம் படு மோசமாயிருந்தது.

கத்தார்-
1.6 மில்லியன் மக்கள் தொகைகொண்ட வளைகுடா நாடு. 19ம் நூற்றாண்டின் மத்தியலிருந்து அல்-தானி பரம்பரையால் ஆட்சி செய்யப்படுகிறது. இப்போது ஷேக் ஹாமத் பின் கலிஃபா அல் தானி கத்தாரின் மன்னராக இருக்கிறார். முக்கிய அரசபதவிகளில் அல்-தானி குடும்பத்தினரே அமர்த்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய தண்டனைச் சட்டம் அமலில் உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும் அமேரிக்க படையினரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்லாமிய ஆட்சி செய்வதாவது. பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும் உடைக்கட்டுப்பாடு இல்லை. குட்டை பாவாடையுடனான இருகிய உடையும், குதி நடையும் இங்கே சாதாரணம். அதே நேரம் பர்தா விற்பனையும் அமோகமாகயிருப்பது வளைகுடா நாடுகளுக்கேயான அழகிய முரண்.



2022ல் உலகக் கோப்பை நடத்த கத்தார் தேர்வான பிறகு மளமளவென உள்வேலைகள் நடக்க ஆரம்பித்தது. மேலை நாடுகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்களல்ல என்று போட்டிபோட நகர் கட்டமைக்கப்படுகிறது. நகரின் மய்யத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு மிகப்பிரமாண்ட கட்டுமானப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த பகுதியை கடக்கும் போதும் அங்கு உயர்ந்து நிற்கும் கட்டுமான இயந்திரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்த மறப்பதில்லை. நகருக்கு சற்றே வெளியே 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மால் தயாராகிறது. இது சிறு வியாபாரிகளுக்காக இருக்கலாம். தவிர, புதிய பாலங்கள், நகரம், விமான நிலையம் முக்கியமாக மைதானங்கள் அனைத்திற்குமான கட்டுமானப்பணிகளின் வேகத்தை பார்க்கையின் 2022க்கு இன்னும் 22 மாதங்களே மீதமிருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

வில்லாஜியோ மால் - வானம் தொடும் தூரம்

இவையெல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல் பந்தயத்தில் ஐக்கிய அமீரகத்தை முந்திச் செல்ல இங்கும் மதுபான விடுதிகள் திறந்துவிடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 16 விடுதிகளுக்கு அனுமதியளித்துவிட்டதாகவும் செவிவழிச் செய்தி. முன்னதாகவே நட்சத்திர விடுதிகளில் மட்டும் மதுவிற்பனை அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதையில் பயணிப்போம்.
<<<<<<<<>>>>>>>>>
அல்குர்ஆன்; நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - மாயிதா :91

Sep 4, 2011

தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்

இன்று ஆசிரியர் தினமாம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அக்கா பையன் சொல்கிறான். ஆசிரியர் என்றதும் சட்டென என் நினைவில் வரும் என் தமிழ் ஆசிரியருக்கு வேறென்ன செயதுவிட முடியும் இந்த மீள்பதிவை தவிர.

Nov 15, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்

மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?

ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?

தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.

மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.

என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?

ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு

பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)

ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.

மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்

1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!

மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.

(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)

Nov 2, 2010

ஜனநாயகம் - சாபமான வரம்


தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.  கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்.

கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம்.

மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு.

இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.

இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!

Oct 30, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்

நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................

இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...

Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,
 
My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,

contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne

அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.  அது கிடக்கட்டும்...

இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது.

நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். 

அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது.

Oct 28, 2010

ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு...


மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம்.

ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன்.

கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்-
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது.

அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது.

மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது.

இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக)

-------------

சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம்.

அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.

Jan 11, 2010

புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா

புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.
சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,  பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.
நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்  இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?
இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.
இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.
நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?).  ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.

ரைட்டர் பேயோன் (http://twitter.com/writerpayon) ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய உறுப்பினர். அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)

அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.

Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




Dec 21, 2009

பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா


விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.

வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.
பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.
பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம்.

ஈரோடு வாழ் பதிவர்களால் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.

அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) மெகா திரைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)

தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.

ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.

ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. - 

புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. - 

வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. - 

நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். - 

டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

Dec 14, 2009

கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்

என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு  வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.

ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..  நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?  கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.

ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை  நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்  இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.

மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
  • பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
  • திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
  • கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
  • இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
  • இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு.  'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
  • கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். 
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்  என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.

மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும்  மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.


முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.

Oct 14, 2009

க்ராஸ் டாகிங்

முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.

பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
cross-1
மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.

உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட,  சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.

இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?

1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.
2. க்ராஸ் டாகிங்  முறையை பயன்படுத்தலாம்.

க்ராஸ் டாகிங் - Cross Docking
ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும்.
crossdocking-2
வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில்,  கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
Map
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.

க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.
குறைந்த செலவு.
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.
அவசியமற்ற தளவாட வாடகை.
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.
பரவலான வேலைவாய்ப்பு.
எரி பொருள் சிக்கனம்.
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.

தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…

நன்றி.

Oct 12, 2009

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.

அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...  நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.
  • தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.
  • சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.
  • தேக்கடியில் படகு கவிழ்ந்தது.
  • சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.
  • திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.
  • பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.
  • தமிழில் கிரந்தம் தேவையா?
  • புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.
  • பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.
  • அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா?
  • சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.
  • அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?
  • வெண்பாம்... 
இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.

யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே. என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம்.

ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி? 

http://twitter.com/ நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.  உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, http://twitter.com/PeerMhd சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
Follow
இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும்.
உங்கள் ட்விட்டர் தளத்தின் Home  சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும்.
twitting
பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)

ட்விட்டர் ட்ரிக்ஸ்...
  • ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd
  • ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)
  • ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel
இவற்றை  செய்யலாம்..
  • எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம் 
  • உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.
  • அடிக்கடி ட்விட்டுங்க..
  • இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..
  • ஆசுவாசமா இருங்க..
  • ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க.. 
  • ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..
  • பீக் அவர்ல ட்விட்டுங்க..
  • நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..
  • எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..
  • ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.
  • சுட்டிகளை பரிமாறலாம்,
  • நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.
  • கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..
  • என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..
  • நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும்,
இவற்றை தவிர்க்கலாம்...
  • உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம். 
  •  யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம். 
  •  ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம். 
  •  140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.
சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?
  • ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும். 
  •  மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம் 
  •  சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம். 
  •  வலைப்பக்கத்தின் தரம் உயரும். 
  •  வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும் 
  •  மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.
  •  ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும். 
  •  ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.
Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் http://twitterfox.net/ Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

echo

http://www.tweetdeck.com/beta/ இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது.
TwitterDeck
    ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள http://tweetstats.com/ செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.
    tweetstats
    tweetstats1 tweetstats2

    ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,
    http://twitter.com/PeerMhd – பீர் | Peer [Its Me… :-)]

    http://twitter.com/BarackObama – ஒபாமா
    http://twitter.com/schwarzenegger - அர்னால்ட்
    http://twitter.com/mrskutcher – டெமிமூர்
    http://twitter.com/britneyspears – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

    http://twitter.com/SMKrishnaCong – எஸ்.எம். கிருஷ்ணா
    http://twitter.com/ShashiTharoor – சசி தரூர்
    http://twitter.com/chetan_bhagat – சேட்டன் பகத்
    http://twitter.com/PrabhuChawla – பிரபு சாவ்லா
    http://twitter.com/MallyaMan – விஜய் மல்லையா
    http://twitter.com/heshpathi – மகேஷ் பூபதி
    http://twitter.com/mdhoni – ம. சிங் தோனி
    http://twitter.com/Aamir_Khan – ஆமிர்கான்
    http://twitter.com/amitabh_bachan – அமிதாப் பச்சன்
    http://twitter.com/preityzinta – ப்ரீதி ஜிந்தா
    http://twitter.com/DuttaLara லாரா தத்தா
    http://twitter.com/arrahman – ஏ ஆர் ரஹ்மான்
    http://twitter.com/aishwarya_rai - ஐஷ்வர்யாராய்
    http://twitter.com/Shahrukh_Khan – ஷாருக்கான்
    http://twitter.com/R_Khanna – ராகுல் கண்ணா
    http://twitter.com/konkonas – கொங்கனா சென்
    http://twitter.com/priyankachopra – ப்ரியங்கா சொப்ரா
    http://twitter.com/MallikaLA – மல்லிகா ஷெராவத்
    http://twitter.com/Neha_Dhupia – நேஹா தூபியா
    http://twitter.com/kunal_deshmukh – குனால் தேஷ்முக்
    http://twitter.com/emraanhashmi – இம்ரான் ஹாஷ்மி
    http://twitter.com/Asin_Thottumkal – அசின்
    http://twitter.com/chinmayi – சின்மயி
    http://twitter.com/shrutihaasan – ஷ்ருதிஹாசன்
    http://twitter.com/shreyaghoshal – ஷ்ரேயா கோஸல்
     
    http://twitter.com/nramind – ஹிந்து ராம்
    http://twitter.com/maalan – மாலன்
    http://twitter.com/writerpara – பா.ராகவன்
    http://twitter.com/nchokkan - சொக்கன்
    http://twitter.com/luckykrishna – யுவகிருஷ்ணா
    http://twitter.com/snapjudge – பாஸ்டன் பாலா
    http://twitter.com/NagoerRumi – நாகூர் ரூமி
    http://twitter.com/orupakkam – ஒருபக்கம்
    http://twitter.com/bseshadri – கிழக்கு பத்ரி
    http://twitter.com/spinesurgeon – புருனோ
    http://twitter.com/ivansivan – இவன்சிவன்
    http://twitter.com/dynobuoy – டைனோ
    http://twitter.com/jyovramsundar - ஜ்யோவ்ராம்
    http://twitter.com/rozavasanth – ரோஸாவசந்த்
    http://twitter.com/athisha – அதிஷா
    http://twitter.com/elavasam -  இலவசகொத்தனார்

    http://twitter.com/bbcbreaking – பிபிசி
    http://twitter.com/the_hindu – தி ஹிந்து
    http://twitter.com/vikatan - விகடன்
    http://twitter.com/youthfulvikatan – யூத் விகடன்
    http://twitter.com/dinamalarweb - தினமலர்
    ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு.
    நன்றி.