அது நிற்க, வாச்சாத்தி, இருளர் பெண் வன்கொடுமையும், கீழவெண்மணி, தர்மபுரி போன்ற சாதிய வன்கொடுமையும் உலக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. மோடியை வளர்ச்சி நாயகன் என வர்ணித்து இளைய சமுயாத்தை நம்பவைத்திருக்கும் ஊடகத்திற்கு அங்கு நடந்த இனவறுப்பை வெளிக்கொணற வீரமில்லை. வன்கொடுமை யாரால் யார்மீது நிகழ்தப்பட்டாலும் அது வன்கொடுமையே. ஊடகமும் உயர்சாதிப் பேதமும் இவற்றைத் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.
வெறுமனே ஊடகத்தை மட்டுமே குறைசொல்லலாகாது, இவை நிகழ்விற்குப் பிறகான காட்சி மாற்றத்தையே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. வெகு சில சமயங்களிலேயே ஊடகம் குற்ற நிகழ்விற்கு காரணியாகிவிடுகிறது.
தண்டனை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனையினூடே மரண தண்டனைக் கெதிரான பிரச்சாரத்தையும் நம்மால் செய்ய முடிகிறது. எதிரிகளிடமிருந்த நம்மைக் காக்க ஏவுகணையெனில், நம்மை நாமே காத்துக் கொள்ள தண்டனை. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். மரணம் உச்சம்.
என் உயிரை எடுத்தவனுடைய உயிரை எடுப்பதே எனக்கான நீதியாக இருக்க முடியும். எனக்கு அநீதி இழைத்தவனை மன்னிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அவனுக்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் என்னைத்தவிர யாருக்கும் இருக்கக் கூடாது, அது கடவுளாக இருந்தாலும் சரியே. குற்றத்தைக் குறைக்கும் மார்க்கம் தண்டனை, நீதி தண்டனை. இங்கு மலிந்து கிடக்கும் ஊழலே தண்டனை கடுமையாவதையும் பயமுறுத்துகிறது. பணம் கொடுத்து யாரையும் தண்டித்துவிடவோ, தப்பவிடவோ முடியும் என்பதே நம்முடைய சாபக்கேடு.
திருக்குறள் அறத்துப்பால்;தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். - அந்நூர் [24:31]
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. - குறள் 57
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.