Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Dec 29, 2012

புனிதம் காப்போம்

பெண்களைப் புனிதங்களாகச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று எழுதிவைத்து முழக்கமிட்டாலும், எம்பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை மறுக்கவியலாது. இப்போற்றலே இவர்கள் புனிதங்கள் என்பதையும் நமக்கு புரியவைக்கும். இப்புனிதங்களைப் பாதுகாக்கவே, தனிப் பேருந்து, தனியாக இரயில் பெட்டி, குற்றங்களை விசாரிக்க தனிக்காவல் நிலையம், தனியான சட்டங்கள் என்ற தனிமைப்படுத்தல்கள். தனிச் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதற்கு இவர்களுடைய இயற்கையான உடலமைப்பே காரணம். உடற்கூற்றளவில் ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக முடியாது. பெண்கள் கண்ணியமாக ஒரு படி மேலே வைத்து போற்றப்பட வேண்டியவர்கள், புனிதமானவர்கள்.

பல நூறு பேரைக் கொன்றவனுக்குக்கூட மரண தண்டனை கூடாது என்று பலமாக எதிர்த்த ஆர்வலர்கள் பெண் வன்கொடுமை விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள். இதற்கு உணர்ச்சிநிலை மட்டுமே காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. நேற்று புதுவருடப் பிறப்பை எந்த மதுக்கடையில் கொண்டாடலாம் என்று அறிவுரை சொன்னவர்கள் இன்று மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். நாளை மீண்டும் மதுக்கடை வாசலில் வரிசைக் கட்டலாம். இத்தகைய ஒருநாள் பிரச்சாரத்திற்கும் பெண்கள் மீதிருக்கும் கருணைப் பார்வையே காரணமாகிறது. இதுவே புனிதத்தின் வெளிப்பாடு, சிலருக்கு கடவுளை நினைத்ததும் தவறு செய்ய மனம் தடுப்பதைப் போல, வேறு சிலருக்கு காதலோ, கணவனோ, தாயோ புனிதமாகிப்போவதுண்டு,
எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்பது போல ஊடகங்களுக்கு ஏதாவதொரு தீனி தேவைப்படுகிறது. இவைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப இவ்விளைய சமுதாயத்தைச் சூடேற்ற தீனி தேவைப்படுகிறது. ஹஜாரேவோ, மோடியோ, அப்சல் குருவோ சூழலுக்கேற்றவாறு சூடாக்கப்படுகிறார்கள். முந்தைய விடயம் குளிர்விட்டுப்போனால் முரணாக முல்லைப்பெரியாறும், அணுவும் அவ்வப்போது உலையில் ஏற்றப்படுகிறது. சில சமயம் உணர்வுப்பூர்வமான புனிதங்களான மதம், இனம், கற்பு இம்முறை பெண்.

முன்னெப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக வரும் செய்திகள், இந்திய ஆண்கள் அனைவரும் எதிரே வரும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதையே குலத்தொழிலாகக் கொண்டவர்கள் என்பது போன்ற தோற்ற பிம்பத்தை உண்டாக்குகிறது. அதுவும் சில நிலைத்தகவல்கள் ஆண்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்காத வன்கொடுமையாளர்கள் என்கிற தொனியில் பரப்புரையாற்றுகிறது. இவற்றில் ஊடகங்களின் பங்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. தினம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருவரை அழைத்து பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு என்ன காரணம் என்ற விவாதம் நடத்தி அன்றைய தினத்திற்கான 24 மணிநேரத்தை கடத்திவிடுகிறது.
 
அது நிற்க, வாச்சாத்தி, இருளர் பெண் வன்கொடுமையும், கீழவெண்மணி, தர்மபுரி போன்ற சாதிய வன்கொடுமையும் உலக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. மோடியை வளர்ச்சி நாயகன் என வர்ணித்து இளைய சமுயாத்தை நம்பவைத்திருக்கும் ஊடகத்திற்கு அங்கு நடந்த இனவறுப்பை வெளிக்கொணற வீரமில்லை. வன்கொடுமை யாரால் யார்மீது நிகழ்தப்பட்டாலும் அது வன்கொடுமையே. ஊடகமும் உயர்சாதிப் பேதமும் இவற்றைத் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.

வெறுமனே ஊடகத்தை மட்டுமே குறைசொல்லலாகாது, இவை நிகழ்விற்குப் பிறகான காட்சி மாற்றத்தையே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. வெகு சில சமயங்களிலேயே ஊடகம் குற்ற நிகழ்விற்கு காரணியாகிவிடுகிறது.

தண்டனை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனையினூடே மரண தண்டனைக் கெதிரான பிரச்சாரத்தையும் நம்மால் செய்ய முடிகிறது. எதிரிகளிடமிருந்த நம்மைக் காக்க ஏவுகணையெனில், நம்மை நாமே காத்துக் கொள்ள தண்டனை. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். மரணம் உச்சம்.

என் உயிரை எடுத்தவனுடைய உயிரை எடுப்பதே எனக்கான நீதியாக இருக்க முடியும். எனக்கு அநீதி இழைத்தவனை மன்னிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அவனுக்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் என்னைத்தவிர யாருக்கும் இருக்கக் கூடாது, அது கடவுளாக இருந்தாலும் சரியே. குற்றத்தைக் குறைக்கும் மார்க்கம் தண்டனை, நீதி தண்டனை. இங்கு மலிந்து கிடக்கும் ஊழலே தண்டனை கடுமையாவதையும் பயமுறுத்துகிறது. பணம் கொடுத்து யாரையும் தண்டித்துவிடவோ, தப்பவிடவோ முடியும் என்பதே நம்முடைய சாபக்கேடு.

கடுந்தண்டனைத் தவிர்த்து நம்மிடையே சுய பரிசோதனையும் அவசியமாகிறது. நமது உடை, நடை அலங்காரம் பொன்றவற்றை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண் அலங்காரம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். - அந்நூர் [24:31]
திருக்குறள் அறத்துப்பால்;
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. - குறள் 57
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
சிலருக்கு கடவுளும், காதலும் புனிதமாகிக் குற்ற நிகழ்வைத் தடுப்பது போல, பலருக்கு தண்டனை புனிதமாகப்பட வேண்டும். இப்புனிதங்களே நம்மிடமிருந்து நம்மைக் காக்கும். 

புனிதம் காக்கும்.

Aug 20, 2009

கழிவறை நீதி - வள்ளுவன்

உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

என்கிறார்.

இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

இதை,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

என்பதாகச் சொல்கிறார்.

கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

என்று கேட்கிறார்.

கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

என்கிறார்.

கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

இறுதியாக,

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

நன்றி!!!

Jul 21, 2009

சுவாரஸ்ய பதிவு விருது

ஒளிஒருவற் உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். - குறள்

கலைஞர் விளக்கம்; ஒருவரின் வாழ்வில் ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.

மு.வ விளக்கம்; ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

award_interesting.2e2avjzomu

செந்தழல் ரவி ஆரம்பித்த தொடர் விருது, இன்று நண்பர் மணிகண்டன் மூலமாக எனக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை நான், சுவாரஸ்ய பதிவு என நினைக்கும் 6 பதிவுகளுக்கு வழங்க வேண்டும். (ரவி, ஒரு சந்தேகம், இது சுவாரஸ்ய பதிவு விருதா? அல்லது சுவாரஸ்ய பதிவர் விருதா?)

விருதின் நோக்கம், அது வழங்கப்படுபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே. அவ்வகையில் இந்த சுவாரஸ்ய பதிவு விருதானது, பதிவர்களுக்கு ஊக்கத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

எனது வாசிப்பனுபவத்தை அதிகரிக்கவே ‘ஜெய்ஹிந்துபுரம்’ என்ற இந்த வலைப்பூவை தொடங்கினேன். பின்னர் பிற பதிவுகளில் பின்னூட்டம் இடவேண்டி எழுத்துப் பயிற்சிக்காகவே இங்கு எழுதவும் ஆரம்பித்தேன். இப்போது விருதும் வழங்கப்பட்டுள்ளது, இது என்னை ஊக்கப்படுத்துவதுடன், எனக்கிருக்கும் பொறுப்பையும் அதிகரித்துள்ளது. இனியாவது ஏதேனும் எழுத வேண்டும், வாசிக்கும்படியாய் எழுத வேண்டும் என்ற அச்சமும் கூடவே…

நன்றி மணி, (என்னையும் ஜீப்புல ஏத்திவிட்டீங்க :))

விருது வழங்கும் விழா;

செந்தழல் ரவி இந்த விருது விழாவை தொங்கிவைத்த போது அவரிடம் மொக்கையாக கேட்டிருந்தேன், ‘இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கணுமா, ரவி?’ என்று. (அவர் பதில் சொல்லவில்லை… பிரபலபதிவராச்சே…;)) விருது கொடுக்கப்படும் தகுதியே எனக்கு இருக்கிறதா என்று சந்தேகத்தில் இருக்கும் போது விருது கொடுக்கும் தகுதி எனக்கிருக்கிறதா என்று நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் எனக்கு பிடித்த சுவாரஸ்ய பதிவுகள் / பதிவர்கள் ஏராளம். அனைவருக்கும் கொடுக்கமுடியாதவாறு சட்டச்சிக்கல் இருப்பதால், ஆறு பேருக்கு மட்டும்.

மகா நக்கல் பேர்வழி. இரண்டு தனிநபர் பதிவுகளுக்கு சொந்தகாரர். இம்சையை கூட்டும் இம்சைக்கு விருது வழங்குகிறேன். செந்தழல் ரவி; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

பங்கு சந்தை நிலவரத்தையும் உலக நடப்புகளை முக்கியமாக நிதி நிலைகளையும் ஆலோசனைகளையும் மும்பையில் இருந்து எளிய தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதுகிறார். அவ்வப்போது சுவாரஸ்ய நிகழ்வுகளையும் எழுதும் இவர் சுரவாரஸ்யப் பதிவர். அண்ணன் சந்தைநிலவரம் பதிவர் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

நல்லவர், அன்பானவர், எனக்கு ஊக்கமளித்து வருபவர். என் மண்ணின் மைந்தர் தோழர் கார்த்திகைப் பாண்டியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

இவரும் எங்கள் மண்ணுக்குச் சொந்தகாரர். சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவதில் மட்டுமல்ல பேசுவதிலும் வல்லவர். அனுபவஸ்தர் அண்ணன் ஸ்ரீ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சமகால பிரச்சனைகளை இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது என்பதை குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரத்துடன் எழுதுகிறார். அனைவரும் விளங்கும் எளிய நடை. அண்ணன் சுவனப்பிரியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

டக்ளஸ் என்ற புனைப் பெயரில் இருந்து ராஜூ என்ற சொந்த பெயருக்கு மாறியிருக்கிறார். எனக்கு நல்லது கெட்டது சொல்லும் பாசக்கார ஊர்காரர். ரொம்ப நல்லவர். நண்பர் ராஜூ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

எப்போதும் எனக்கு பிடித்த பதிவர், கருத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத பிடிவாதக்காரர். ஏற்கனவே விருது வழங்கப்பட்டவர். அண்ணன் சிங்கை சிங்கம் கோவி. கண்ணன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சகாக்களே இனி பந்து உங்கள் முற்றத்தில்… ஆறு பேருக்கு வீசுங்கள், ஆயிரம் பேரை சென்றடையட்டும்.

நன்றி!!!

Jul 11, 2009

நமக்காகத்தான் இந்த குறள்

(18+) தப்பா நினைக்காதிங்க...

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.

மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,

அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.

மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’

‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '

‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. - குறள்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(16+) மறுபடியும் தப்பா நினைக்காதீங்க

ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் – குறள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(60+) பதிவுலக பிரபலம்

ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன், ஒரு பதிவுலக பிரபலம் மூவரும் இறந்த பின்பு நரகம் செல்கின்றனர். (பிறகு இவர்களுக்கெல்லாம் சொர்கமா கிடைக்கும்)

அரசியல்வாதி நரக வரவேற்பு பெண்ணிடம் வந்து, 'நான் என் நாட்டையும், நாட்டு மக்களையும், என் தொண்டர்களையும் இழந்து மிகவும் தவிக்கிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லி 10 நிமிடம் தொலைபேசுகிறார்.

பேசி முடித்தவுடன் வரவேற்பு பெண் பில் தருகிறார் ‘பத்தாயிரம் ரூபாய்.’

இதைப்பார்த்த திருடனும் பேச வேண்டும் என்று 20 நிமிடம் தொலை பேசுகிறான், அவனுக்கு இருபதாயிரம் பில் வருகிறது.

நம்ம பதிவுலக பிரபலம், இவருக்கு தான் யார் எது செய்தாலும் உடனே அதுக்கு எதிரா ஏதாவது செய்தாகனுமே, அவரும் பதிவுலக சகாக்களிடம் பேச ஆசைப்படுகிறார். ஒரு மணி நேரம் கிசு கிசு, எதிர் கவிதை, எதிர் கடிதம், யார் செய்தது தவறு சரி இன்னபிற பிற பிற தொலை பேசிவிட்டு, பில்லுக்காக காத்திருக்கிறார்.

அப்போ அந்தப்பெண் சொன்னாராம், 'லோக்கல் கால் இலவசம், நீ போகலாம்'

இதை ஒரு குறளில் அடக்கிவிட முடியுமா, என்ன…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பொருள் அறிந்து பொருத்துக.

பொருத்தியதை பொருந்தியதோடு பொருத்திப்பார்க்க வேண்டியது அவரவர் பொறுப்பு.

எண்

குறள்

யாருக்கு

1

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

வஜ்ராயுதம்

2

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.

பக்கவாத்தியங்கள்

3

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அசொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

வாதி

4

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையரிந்த தூய்மை யவர்.

பிரதிவாதி

5

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.

நமக்கு

6

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட டொழுகப்பெறின்.

எனக்கு

7

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.

நடுவர்

குறள் உரை

1. இனிமையாக பழகி நட்புறவை தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்கு புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

2. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடமையாகும்

3. இந்தச்சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொர் சொல்லின் தன்மையை உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், (அவையையும்) அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

5. ஒருவர் எதைக்காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

6. பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

7. அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

1 = 5 2 = 25 3 = 125 4 = 625 5 = ?

சுவற்றில் எறிந்த பந்து, சேற்றில் வீசிய கல்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நன்றி!

Apr 26, 2009

அழகிக்கு நேர்ந்த அவமானம்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங்கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்பட வேண்டியது அடக்கமாகும். அடக்கத்தை விட ஆக்கம் தரக்கூடியது வேறொன்றுமில்லை.

ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாக போற்றப்படுகிறது.

-திருக்குறள்

*************************************************************

வேறென்ன சொல்ல....

Feb 20, 2009

ஈகை

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது A help rendered in hour of need though small is greater than the world. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும் Knowing wisdom who lives controlled name and fame seek him untold. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை தன் மீது குழி பறிப்போரை தாங்குகின்ற பூமியை போல தம்மை இகழ்ந்து பேசுகின்றவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் As earth bears up with diggers too to bear revilers is prime virtue - குறள்