Sep 21, 2012
உயிரினும் மேலான...!
Aug 18, 2010
உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்
- சுடுகாட்டு ஊழலை வெளிக்கொணர்ந்த...
- திருவாரூர் மாவட்டத்தை திறம்பட நிர்வகித்த...
- கேபிள் டிவிசுரண்டலை எதிர்த்த...
Dec 14, 2009
கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில் இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.
மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
- பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
- திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
- கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
- இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
- இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு. 'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
- கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.
முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
Nov 16, 2009
வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்
என்னை பொறுத்த வரையில் இன்னொருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயஙகளை கொச்சை படுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது தஸ்லிமாவாக இருந்தாலும் சரி, ஹூசஸைனாக இருந்தாலும் சரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.
இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.
முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.
2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...
Oct 6, 2009
பாலியல்புவனா, கேரளமண், கிழக்கு - ஜிகர்தண்டா
ஜார்கண்ட் நக்சல் தீவிரவாதிகள், காவல்துறை அதிகாரி ஃப்ரான்ஸிஸை கடத்தி கொண்டுபோய் தலை துண்டித்து கொலை செய்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸிஸ் குடும்பத்தாருக்கு அஞ்சலிகள். தீவிரவாதத்திற்கு கடும் கண்டனங்கள்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்த ஆற்றுமணல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கேரளாவில், ரூபாய் பத்து ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மணல், தற்போது நாற்பத்துஐந்து ஆயிரம் ரூபாயாம். கட்டுமானப்பணிகள் தடைபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்வரை, இங்கிருந்து மணல் அனுப்பப்படாது என்பது காரணமாம். தேசிய அரசியலை கழுகாய் பார்த்தால், இது சரியா என்பது எனக்குத்தெரியவில்லை. ஆனால், தமிழக அரசியலில் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகப்படுகிறது.
பாலியல் தொழிலாளி கம் நடிகை புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை தினமலரில் படித்தேன். சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டே எழுதியிருந்தார்கள். இப்படி நேரடியாக பெயர் குறிப்பிடுவதால் ஏதும் பிரச்சனை வராதா என்று ட்விட்டரிலும் கேட்டிருந்தேன். நினைத்த மாதிரியே நடிகர் சங்கத்துகாரர்கள் பிரச்சனை செய்துவிட்டார்கள். நினைத்த மாதிரியே பிரச்சனைக்கு அந்த நடிகைகளும் வந்திருந்தார்கள். நினைத்த மாதிரியே கோவியாரும் பதிவு போட்டுவிட்டார்... நினைத்த மாதிரியே மீ த எஸ்கேப்பு...
நடிகை பூமிகா சாவ்லா, மார்பக புற்று நோய் விழிப்புணர்விற்காக நடை பயணம் மேற்கொண்டாராம். நடிகைகளின் பப்ளிசிட்டியை சோப்பு சீப்பிற்கு மட்டுமல்லாது, இந்த மாதிரி சமூக விழிப்புணப்புணர்வு விளம்பரங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாராவாரம் ஆஹா எஃப்எம்மில் கிழக்கு பதிப்பகத்தார் நடத்தும் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கிறது. வியாபார நுணுக்கம் அனைத்தும் தெரிந்திருக்கிறார்கள். இது வாஷிங் பவுடர் நிர்மாவை விட நல்ல விளம்பரம் என்பதில் சந்தேகம் இல்லை. வீடு வீடாக சென்று சாம்பிள் பேக் கொடுப்பதை போல, ஒலிப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளும் ஒலிபரப்பப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகத்திலிருந்தே கேள்விகளை கேட்டு புத்தகத்தையே பதிலாக சொல்வது.. எல்லாமே அருமை. ஆனால், பேட்டி எடுப்பவர் கிட்டத்தட்ட அனைத்து பேட்டியிலும், 'அதாவது... நான் உங்க புத்தகத்தில படிச்சேன், இந்த மாதிரி சொல்லியிருக்கீங்கல்லையா... இதப்பத்தி என்ன சொல்றீங்க' என்பது டிபிகல் நாடகத்தனமாக இருக்கிறது. கொஞ்சமா மாத்தி மாத்தி யோசிங்க... மேடம்.
ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர்கிடையே ஏற்பட்ட தகராறில் பயணிகள் அதிருப்தி. இந்த நேரத்தில், நான் அனுபவித்த விமான சேவையின் தரத்தை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குவைத் ஏர்லைன்ஸ், சௌதியா - அவர்கள் தருவதுதான் சேவை, விருப்பமிருந்தால் வா என்கிற தோணி. ஏர் இந்தியா - சொல்லவேண்டாம், சில நேரங்களில் கொசு அடிக்க வேண்டியிருக்கும், சிலநேரங்களில் எலி(புலி வராத வரை பாதகமில்லை). அல்ஜஸீரா, ஏர் அரேபியா - பட்ஜட் ஏர்லைன்ஸாம், குடிக்க தண்ணீர் கூடத்தர மாட்டார்கள். அல்ஜஸீராவில், குவைத்-மும்பை ஒரு தினாருக்கும் டிக்கெட் விற்கப்பட்டதுண்டு. ஏர் அரேபியா, இப்போது குவைத்-சென்னை 3780 ரூபாய். ஸ்ரீலங்கன், எமரேட்ஸ் - நான் அனுபவித்ததில் நல்லதாகப்பட்டது.
தனித்தமிழ், விக்கி-தமிழ் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் பதில்கள் யோசிக்கவைக்கிறது. ஜெர்மனியை செர்மனி என்றும், ஸ்பெயினை எசுப்பானியா என்று எழுதுவதையும் விமர்சிக்கிறார். வாசித்து பாருங்கள்...
என் ஒரே மகன் ஃபர்ஹான் நேற்றைக்கு முந்தின நாளோடு பதின்இரண்டு மாதம் நிறைவு செய்து, நேற்று முதல் வயதில் நான்கு அடி எடுத்துவைத்திருக்கிறான். அவன் வயதை எப்படி சொல்வது. இப்போது அவனுக்கு ஒரு வயதா? இரண்டு வயதா? Promil வாங்கும் போது, 1 முதல் 3 வயது வரை என்று போட்டிருக்கிறார்களே... 12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா? தெரிந்தவர்கள் விளக்கவும். பிறந்தநாளான நேற்று, ஜட்டிகூட போடாமல் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தானாம். ஷேம் ஷேம்.. நோ பி'டே பார்ட்டீஸ்...
Sep 28, 2009
இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்
Sep 22, 2009
மொ போல் ஒருவன்
- 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)
- வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.
- மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.
- 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)
- ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?
- எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?
- எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?
- எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?
- எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?
- வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?
- ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?
- வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா? ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.
May 11, 2009
கருணாநிதி, மோடி, ஜெயலலிதா - ஜிகர்தண்டா
வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது - கருணாநிதி.
ஆமாங்கையா உங்க தெற்கு நல்லாவே தேறுது.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது – மோடி
பிணந்தின்னி நாயே, 2002 குஜராத்தை பார்த்து உலகமே கண்ணீர் விட்டதை நீ மறைத்தாலும எங்களால் மறக்க முடியாதடா. தேர்தலுக்காக மலம் தின்னச் சொன்னாலும் தின்னுவாய் நீ.
ஆம், பிணம் தின்ன உனக்கு மலம் எம்மாத்திரம்.
ஆமா...அம்மா வீட்ல தின்ன வரலையா, சோறு?
ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து தேர்தல் பரப்புரை –
இதைத்தான் ஜெயலலிதா பிரதமர் கனவில் மிதக்கிறார் என்று சொல்கிறார்களோ...
கலைஞர் தொலைக்காட்சியில் வரும தேர்தல் விளம்பரங்களில் ஒன்று,
ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை, நகைகள் வாங்கிவந்த தந்தை மாறடைப்பால் கீழே விழுகிறார். நலம் விசாரிக்க வந்த ஒருவர், "கவலைப்பட வேண்டாம்.. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கு. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு செய்து கொடுத்திருக்கார்" என்று சொல்வதாக வருகிறது,
ஆமா... அரசு ஊழியர் உசிரு மட்டும் தான் உசிரா... அப்ப எங்க உசிரெல்லாம்..........
ஆனாலும் அந்த பெண் கேட்பதற்காக வேண்டுமானால் போடலாம், ஓட்டு... உதயசூரியனுக்கு.
ஹி ஹி ஹி.. நமக்குத்தான் இளகிய மனமாச்சே...
மற்றொரு விளம்பரம், ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று. சகிக்கல... எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் அனுதாப ஓட்டுதான் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா? இறந்து போன முரசொலி மாறனைக்காட்டி...
மாறனின் பிள்ளைகளும் ஓட்டுக்காக எதைவேண்டுமானாலும் காட்டத் துணிந்துவிட்டாரகள். பாவம்.
இதற்காகவே அவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.
கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் - ஆதாரம் நகைச்சுவையாக
அண்மையில் ஐ.நா சபையில் நடந்த ஒரு சம்பவம்.
கஷ்மீர் விடயமாக பேசுவதற்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சார்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல நேரம் வழங்கப்பட்டிருந்தது.
முதலில் இந்தியப் பிரதிநிதி ஆரம்பிக்கிறார், 'நான் எனது உரையை ஆரம்பம் செய்யும் முன்பு, கஷ்மீர் என்று பெயர் வைத்த ரிஷி கஷ்யாப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் ஒரு நாள், ஒரு பாறையில் தட்டுகிறார். அப்போது அங்கிருந்து நீரூற்று கிளம்பி நல்ல சுவையான தண்ணீர் வழிந்தோடுகிறது. அதைக்கண்டதும் அவருக்கு குளிக்கலாம் என்ற ஆசை வந்துவிடுகிறது. தனது உடைகளை களைந்து, பாறையில் இருந்து சற்று தூரமாக வைத்துவிட்டு குளிக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்க்கும் போது, அவரது உடைகளை காணவில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடிக்கொண்டு போயிருந்தார்' என்று சொல்லும் போது, பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டு, 'அப்போது அங்கு பாகிஸ்தானி இருக்கவில்லை' எனகிறார். உடனே நம்மாள், 'இதைத்தான் எதிர்பார்த்தேன், இப்போது எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்' என்றாராம்.
தொலைபேசி கோப்பில் நம் பெயர் இடம் பிடிப்பது எளிது,
ஒருவரின் மனதில் இடம் பிடிப்பது கடினம்.
அடுத்தவரின் தவறுகளை மதிப்பிடுவது எளிது,
நம் சொந்த தவறுகளை புரிந்துகொள்வது கடினம்.
பிரியமானவரின் மனதை காயப்படுத்துவது எளிது,
அம்மனதின் காயம் ஆற்றுவது கடினம்.
மற்றவரை மன்னிப்பது எளிது,
மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது கடினம்.
வெற்றியை காட்டுவது எளிது,
தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம்.
சவுதியில் ஆல்கஹால் பாவித்தால் 20 கசையடி தண்டனை.
இந்த செய்தியைவைத்து இச்சம்பவம் கட்டப்பட்டது.
ஒரு நாள் பெங்காலி, பாகிஸ்தானி மற்றும் சந்தேகமில்லாமல் நம் இந்தியன் ஆகிய மூவரும் ஆல்கஹால் பாவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு மன்னர் முன் அழைத்துவரப்படுகிறார்கள். மன்னர் கேட்கிறார், 'சொல்லுங்கள், கசையடிக்கு முன் உங்கள் ஆசை என்ன?' என்று.
பெங்காலி, 'எனது முதுகில் ஒரு தலையனை கட்டிவிடுங்கள்'
அவ்வாறே செய்யப்படுகிறது, ஆனால் 10 அடிகளில் தலையனை பிய்ந்துவிட்டது. மீதி 10 அடி வெற்றுடம்பில் கிடைக்கிறது.
பாகிஸ்தானி 'என் முதுகில் 2 தலையனை கட்டிவிடுங்கள்'
அவ்வாறே கட்டப்பட்டது. 15 அடிகளில் தலையனை பிய்ந்துவிட, 5 வெற்றுடம்பில் கிடைக்கிறது.
நம்ம இந்தியனிடம் மன்னர் சொல்கிறார், 'எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். மன்மோகன் சிங் எனது நாட்டிற்கு நிதி ஆலோசனை வழங்கியுள்ளார். நீ 2 ஆசைகளை சொல்லலாம்' என்று.
நம்மாள் சொல்ல வேண்டுமா என்ன, (கேப்பு கிடைத்தால் காற்று அடிப்போம். காற்றே கிடைத்தால் பறந்துவிட மாட்டோமா), மன்னரிடம், 'நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள நன்மதிப்பை காப்பற்றுவோம், நான் செய்த தவற்றை உணர்ந்துவிட்டேன். எனக்கு 20 அல்ல 40 கசையடி தாருங்கள், இது தான் முதல் ஆசை' என்கிறான்.
மன்னர், 'இந்தியர்கள் வீரமானவர்கள் என்று கேள்விப்பட்டதுண்டு, இன்றுதான் காண்கிறேன், சொல் உனது இரண்டாவது ஆசை என்ன' என்று கேட்கிறார்.
நம்மாள், 'என் முதுகில் பாகிஸ்தானியை கட்டிவிடுங்கள்' என்கிறான்.
பணக்கார கைப்புள்ள இரண்டு நச்சல்குளம் கட்டுகிறார். ஒன்று அவருக்காகவும் மற்றொன்று பொதுநலன் (அடுத்த தேர்தலில் போட்டியிட உத்தேசம்) கருதி மக்களுக்காகவும்.
ஆனால் அவருக்கான குளத்தில் ஒருபோதும் தண்ணீர் நிரப்பியதில்லை.
வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'
கைப்புள்ள, 'எனக்குத்தான் நீச்சல் தெரியாதேடா'
கைப்புள்ள அவர் மகன் படிக்கும் பள்ளியின் ஆசிரியையிடம் சென்று, 'மிஸ், நீங்க நேத்து எனக்கு போன் பண்ணியிருந்தீங்களா?'
மிஸ், 'இல்லையே, ஏன் கேக்குறீங்க?'
கைப்புள்ள, 'இல்ல, என் மொபைல்ல பார்த்தேன், 1 மிஸ் கால்டு ன்னு இருந்தது'
May 3, 2009
அத்வானி, பன்றிக்காய்சல், இலங்கை - ஜிகர்தண்டா
செய்தி; இந்தியாவிலும் பன்றிக்காய்சல். லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேரில் 5 பேருக்கு பன்றி காய்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரதுறை செயலர் தெரிவித்துள்ளார்.
நல்லா செக் பண்ணுங்கப்பா… கோட்டை சண்டைல இத கோட்ட விட்றாதீங்க…
பன்றி காய்சல் பற்றிய எனது முந்தைய பதிவை வாசிக்க இங்கே செல்லவும்.
செய்தி; ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல். இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்வதாக சந்தேகம் எழுந்ததால், கோவையில் இந்திய ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.
சாலைமறியல் போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ராணுவ வாகனம் தாக்குதல் கொஞ்சம் ஓவராயிடுச்சோ?
செய்தி; முதல்வர் கருணாநிதி கடும் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
என்ன காய்சல் னு பார்த்து, அவர ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா… ரெஸ்ட் இன் பீஸ்.
செய்தி; இந்தியா உடனடியாக அணுகுண்டு தயாரிக்க வேண்டும் – அத்வானி.
ராஜபக் ஷே ட்டருந்து எத்தன கிலோவுக்கு பர்சஸ் ஆர்டர் வந்திருக்கு?
ஒரு திருமணமாகாத பெண் தன் அம்மாவிடம் தான் கருவுற்றிருக்கதாக சொல்கிறாள். அவளுடைய அம்மா காச் மூச் என்று கத்திவிட்டு,'யார் அந்த கருப்பாடுன்னாவது தெரியுமான்னு' கேட்க, உடனே அந்த பெண் மொபைல எடுத்து SMS அனுப்பினாளாம். அடுத்த 5 நிமிசத்துல ஒரு BMW வாசல்ல வந்து நிக்குது, அதிலருந்து நம்ம ___________(யார் பேரையாவது போட்டுக்குங்கப்பா) மாதிரி ஒருத்தர் இறங்கி வீட்டுக்குள்ள வந்து, ஜென்டில்மென் அக்ரிமென்ட் போடுகிறார்.
நடந்தது நடந்து போச்சு, உங்க பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், '50 லட்ச ரூபாய் பேங்ல டெபாசிட் பண்றேன். பெண் குழந்தைன்னா, 1 கோடி. ரெட்டைக்குழந்தை பிறந்தால், ஒவ்வொறுத்தர் பேர்லயும் 50 லட்சமும் அம்பத்தூர்ல இருக்குர என்னோட ஒரு பேக்டரியும் சேர்த்து தருகிறேன். ஆனால், இடையிலேயே அபார்ஷன் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க' என்று கேட்க..
அவ்வளவு நேரமா அமைதியா இருந்த அந்தப்பெண்ணுடைய அப்பா, 'இன்னொரு தடவ முயற்சி பண்ணுங்கன்னு' சொன்னாறாம்.
Chill: better luck next time.
Jan 25, 2009
Bush Failures and Successes - போ! மறுமையில் சந்திப்போம்
Dec 24, 2008
நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும், டென்மார்க்.


























