Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.