Jan 5, 2010
உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?
Dec 21, 2009
பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா
Nov 26, 2009
ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது
2. ஆசைக்குரியவர்: அவுகதான்.
3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி
5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்
6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.
7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.
8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.
10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்
11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை
12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்
13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது
1. A – Available/Single? Available as single
2. B – Best friend? : She..
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : Dark Smiron
5. E – Essential item you use every day? : Easy to use
6. F – Favorite color? : Full Black
7. G – Gummy Bears Or Worms?: ???????
8. H – Hometown? : (HomeVillage) Madurai
9. I – Indulgence?: Intelligence
10. J – January or February? - ???????
11. K – Kids & their names? Kamal Farhan
12. L – Life is incomplete without? – Love
13. M – Marriage date? Month of Dec
14. N – Number of siblings? Not much..
15. O – Oranges or Apples? O..
16. P – Phobias/Fears? - Politics
17. Q – Quote for today? : Quite
19. R – Reason to smile? : Re-tired
20. S - Season? : Shut the door
21. U – Unknown fact about me : Unknown??? me???
22. V – Vegetable you don't like? : Veal
23. W – Worst habit? : Wrong Question
24. X – X-rays you've had? : Xavier's
25. Y – Your favorite food? : Yolk
26. Z – Zodiac sign? - Zoo Zoo
இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.
Nov 25, 2009
அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க
1. கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள். – அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம். இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும். படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள். திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...
Oct 18, 2009
நட்பு என்பது...
நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...
Aug 24, 2009
நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.
பதின்இரண்டு: நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.
பதின்ஒன்று: அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.
பத்து: அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.
ஒன்பது: அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.
எட்டு: அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.
ஆறு: அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.
ஐந்து: அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.
நான்கு: அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.
மூன்று: இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.
இரண்டு: அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.
ஒன்று: அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.
Aug 18, 2009
ஷாருக், அமெரிக்கா, சினிமா - ஜிகர்தண்டா
அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானை 2 மணிநேர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தியது சர்ச்சையாக எழுப்பப்பட்டது.
9/11 க்கு பிறகான அமெரிக்கர்களின் உயிர் பயம் உலகறிந்தது, தன்னைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது. அங்கு எழுதப்படாத சட்டமாக இருக்கலாம். இச்சட்டங்கள் தேவையா என்பது முன்பே விவாதிக்கப்பட்டது என்றாலும், அம்மாதிரி சட்டம் இருக்கும் நாட்டிற்கு சென்று விட்டு, தன்னை சோதனைக்குட்படுத்திவிட்டார்கள் என்று ஊரைக்கூட்டுவது நியாயமற்றது. ஒரு நாட்டின் பாதுகாப்பு சோதனைகளை இத்தனை சர்ச்சைக்குள்ளாக்குவது அர்த்தமற்றது. இங்கு இதுதான் சட்டம் இஷ்டமிருந்தால் வா, என்கிறது அமெரிக்கா. இந்தியாவிலேயே இந்திய முன்னால் முதற்குடிமகனையே சோதனைக்குள்ளாக்கியது அவர்கள் சட்டம். இனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். நல்லது, இனி உங்களை கலைச் சேவை இந்தியாவில் மட்டும் இருந்தால் போதும். ஐங்கரன் DVD யில் மற்றவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
வேறு கோணத்தில் இதை வாசிக்க இங்கே செல்லலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மதுரையின் முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வரவேற்கப்பட வேண்டிய செய்தி. சென்னையில் இச்சட்டம் அமலுக்கு வந்தபோதே நான் நினைத்தேன், அதென்ன சென்னைக்கு மட்டும் ஒரு சட்டம் என்று. இப்போது காதி தேனாய் இனிக்கிறது. இனியாவது நான் சாலையை பார்த்து வாகனம் ஓட்டலாம். ஒரு முறை ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து ராஜ்தூத்தில் வந்த நான், தமிழ்நாடு பாலிடெக்னிக் சுவற்றில் எப்போதும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளை பார்த்தவாறே சாலையை கடக்க, எதிரே பெரியாரில் இருந்து வந்த ஒரு இரு சக்கர வாகனத்துடன் மோத நேரிட்டது. அந்த நேரம், இரண்டு பக்கமிருந்தும் பெரிய வாகனங்களை வராதது அவர் உயிரை காப்பாற்றி, உங்கள் உயிரை எடுக்கிறது. ;)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
காலச்சுவட்டின் வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு – எந்த அளவுக்கு அதில் உண்மையான அனுபவங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமே, குறிப்பாக அனுபவித்து எழுத்தாக்கிய நபர் குறித்தான தகவல்கள் தரப்படா நிலையில் சந்தேகம் வழுக்கிறது. மறுபக்கம், அதில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் ஏற்கும்படியாய் இருந்தாலும், நிகழ்வுகளின் நம்பகத்தன்மையை எடைபொடும் மற்ற தட்டில் சுமை இல்லாததால் உண்மையாக இருக்கலாமோ என்ற எண்ண ஓட்டத்தை மட்டுப்படுத்த முடியவில்லை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பொக்கிஷம் நல்லாயில்லை என்று பலராலும் சொல்லப்படுவதாலேயே, அப்படி என்ன தான் இருக்கிறது அல்லது இல்லை என்று பார்க்கத் தோண்றுகிறது. (பாலா, டவுன்லோட் பண்ணியாச்சா?)
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மென் அட் ஒர்க் என்ற ஆங்கில நகைச்சுவைப்படம் பார்த்தேன். (முழுக்க
சினிமா நிரப்பப்பட்ட 120 GB HD உபயம், பாலா. நன்றி) படம் முடியும் வரை ஹீரோ இடத்தில் கமலை வைத்து பார்த்ததை தவிர்க்க முடியவில்லை. அதே போல ஹீரோவின் நண்பனாக மாதவன். கூட வரும் இன்னொருவர் பசுபதி. நாயகி மனிஷா. சினிமாவை முழுக்க மும்பை எக்ஸ்பிரஸ் வகை தமிழ்த் திரைப்படமாக உணர்ந்தேன். எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. எனவே, படத்தின் பெயரில் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மீண்டும் அமெரிக்கா, தன் வீட்டுக்கதவை திறக்கும் முயற்சியில் கூச்சலிட்டு அண்டை வீட்டுக்காரர்களை தொந்தரவு செய்ததாக கருப்பின அமெரிக்க பேராசிரியர் ஒருவர், வெள்ளையின போலீஸால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஒபாமா, ‘இன்னமும் அமெரிக்காவில் நாம் நிறத்தால் அடையாளப்படுத்தப்படுகிறோம்’ என்பது போல கருத்து சொல்லப்போக, அதிபர் இவ்வாறு பேசியது விவகாரமானது. பின்னர் இருவருக்கும் ஒபாமா பீர் விருந்து கொடுத்து, நிலைமையை சமாளித்தாராம்.
எனக்கு பீர் குடிக்கும் பழக்கமில்லை. மோர்?
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குவைத்தில் எண்ணைக் கிணறுகளை தகர்க்க வந்த சிலர் பிடிபட்டனராம்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது, போற வார வழியெல்லாம் செக் பண்றாங்க. வீட்டுக் கதவை திறந்து ஒண்ணுக்கு அடிக்க வெளிய வந்தாலும் அடையாள அட்டை இல்லாம வராதீங்க, குவைத்தில் வாழும் எந்தமிழ் மக்கா. உள்ள தூக்கி போட்டா, ஐஆம் சாரி…எங்க அண்ணனை இதுக்கெல்லாம் அழைத்து தொந்தரவு பண்ண முடியாது.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சென்றவாரம் நான் விரும்பி வாசித்த இடுகை, அண்ணன் ஜமாலன் அவர்கள் (சொல்லித் தெரிய வேண்டியதில்லை) உடலரசியல் பதிவில் எழுதியிருக்கும், குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2 . இது மதுவிற்கும் மதத்திற்கும் உண்டான தொடர்பை அலசுகிறது.
ஆழ்ந்த விமர்சனம், நேரமிருப்பவர்கள் வாசித்து பாருங்கள்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பன்றிக்காய்சல் நமக்கு தொற்றியுள்ளதா என்பதை எளிதில் அறிய, தினமும் காலை கண்ணாடியில் முகம் பார்க்கவும். கீழே இருக்கும் இந்தப்படத்தில் இருப்பது போல முகம் தெரிந்தால், ஊரை விட்டு ஒதுங்கி விடலாம்.
இப்பல்லாம் கண்ணாடி பார்க்கவே பயமாயிருக்கு…
Aug 16, 2009
மொக்கையும் நிஜமும் – பயோகிராஃபி
பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : அதிகமில்லை ஜென்டில்மென், (ரொம்ப கம்மி பியூட்டிஃபுல் லேடீஸ்)
தொழில் : அரிப்புக்கு சொறிதல் (தனக்கும் பிறருக்கும்) உபதொழில் : முதுகு புண்ணுக்கு மருந்திடல் (மற்றும் விளம்பரம்)
நண்பர்கள் : ஆமாஞ்சாமி போடும் அனைவரும் எதிரிகள் : அதை மறுக்கும் அனைவரும்
குணம் : எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது குடும்பம் : தனிமனித தாக்குதல் வேண்டாமே... அய்ய்ய்.
பிடித்த வேலை : எல்லோரையும் ஓட்டுவது. பிடிக்காத வேலை : யாருக்கும் ஓட்டு போடுவது.
பிடித்த திரட்டி : தன்னை தலையில் வைக்கும் அனைத்தும். பிடிக்காத திரட்டி : மதிக்காதது
பிடித்த பதிவு : சொறிந்துவிடும் அனைத்தும் பிடிக்காத பதிவு : சொறியச் சொல்லும் அனைத்தும்.
விரும்புவது : ஹிட்ஸ் விரும்பாதது : குட்ஸ்
பொழுதுபோக்கு : இதைவிட்டா வேற என்ன இருக்கு?
சமீபத்திய எரிச்சல் : மொக்கைகள் குறைந்தது. நீண்டகால எரிச்சல் : மொக்கைகள் அதிகமானது.
சமீபத்திய சாதனை : சுனாமிகள் தொழிலில் பிஸியாகியிருப்பது நீண்டகால சாதனை : கத்துக்குட்டிகள் ஆட்டம்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : கல்தோன்றி மண் தோன்றா காலத்தே....
தொழில் : தமிழ் வளர்ப்பது உபதொழில் : தமிழர்களையும் சேர்த்து
நண்பர்கள் : முகம் காணா பதிவர்கள் எதிரிகள் : முகம் மறைக்கும் பதிவர்கள்
குணம் : வந்தாரை வாழ்த்தி வரவேற்பது குடும்பம் : தமிழன் உணர்வுள்ள அனைவரும்.
பிடித்த வேலை : இலக்கியம், மொக்கைகள். (எழுத்தும், வாசிப்பும்) பிடிக்காத வேலை : பதிவுக்கு கரு கிடைக்காமல், இப்படி காப்பி, எடிட் செய்வது.
பிடித்த திரட்டி : பதிவை பரவலாக்கும் அனைத்தும் பிடிக்காத திரட்டி : அப்படி ஏதும் இருக்கா?
பிடித்த பதிவு : படிக்காமலேயே புரிவது. பிடிக்காத பதிவு : பத்து முறை படித்தாலும் புரியாதது.
விரும்புவது : அங்கீகாரம் விரும்பாதது : ஏளனம்
பொழுதுபோக்கு : இதைத்தவிர அனைத்தும்.
சமீபத்திய எரிச்சல் : சீரியஸ் விவாதங்கள் நீண்டகால எரிச்சல் : அரசியல்
சமீபத்திய சாதனை : உயிருக்கு போராடும் சக பதிவருக்கு உலகலாவிய உதவி. நீண்டகால சாதனை : எதற்கும் தயாராயிருப்பது.
Jul 11, 2009
நமக்காகத்தான் இந்த குறள்
(18+) தப்பா நினைக்காதிங்க...
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.
மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,
அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.
மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’
‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...
மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '
‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. - குறள்<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
(16+) மறுபடியும் தப்பா நினைக்காதீங்க
ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் – குறள்.<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
(60+) பதிவுலக பிரபலம்
ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன், ஒரு பதிவுலக பிரபலம் மூவரும் இறந்த பின்பு நரகம் செல்கின்றனர். (பிறகு இவர்களுக்கெல்லாம் சொர்கமா கிடைக்கும்)
அரசியல்வாதி நரக வரவேற்பு பெண்ணிடம் வந்து, 'நான் என் நாட்டையும், நாட்டு மக்களையும், என் தொண்டர்களையும் இழந்து மிகவும் தவிக்கிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லி 10 நிமிடம் தொலைபேசுகிறார்.
பேசி முடித்தவுடன் வரவேற்பு பெண் பில் தருகிறார் ‘பத்தாயிரம் ரூபாய்.’
இதைப்பார்த்த திருடனும் பேச வேண்டும் என்று 20 நிமிடம் தொலை பேசுகிறான், அவனுக்கு இருபதாயிரம் பில் வருகிறது.
நம்ம பதிவுலக பிரபலம், இவருக்கு தான் யார் எது செய்தாலும் உடனே அதுக்கு எதிரா ஏதாவது செய்தாகனுமே, அவரும் பதிவுலக சகாக்களிடம் பேச ஆசைப்படுகிறார். ஒரு மணி நேரம் கிசு கிசு, எதிர் கவிதை, எதிர் கடிதம், யார் செய்தது தவறு சரி இன்னபிற பிற பிற தொலை பேசிவிட்டு, பில்லுக்காக காத்திருக்கிறார்.
அப்போ அந்தப்பெண் சொன்னாராம், 'லோக்கல் கால் இலவசம், நீ போகலாம்'
இதை ஒரு குறளில் அடக்கிவிட முடியுமா, என்ன…
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பொருள் அறிந்து பொருத்துக.
பொருத்தியதை பொருந்தியதோடு பொருத்திப்பார்க்க வேண்டியது அவரவர் பொறுப்பு.
| எண் | குறள் | யாருக்கு |
| 1 | பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். | வஜ்ராயுதம் |
| 2 | எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. | பக்கவாத்தியங்கள் |
| 3 | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அசொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. | வாதி |
| 4 | அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையரிந்த தூய்மை யவர். | பிரதிவாதி |
| 5 | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு. | நமக்கு |
| 6 | தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட டொழுகப்பெறின். | எனக்கு |
| 7 | நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. | நடுவர் |
குறள் உரை
1. இனிமையாக பழகி நட்புறவை தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்கு புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
2. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடமையாகும்
3. இந்தச்சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.
4. ஒவ்வொர் சொல்லின் தன்மையை உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், (அவையையும்) அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
5. ஒருவர் எதைக்காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
6. பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
7. அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1 = 5 2 = 25 3 = 125 4 = 625 5 = ?
சுவற்றில் எறிந்த பந்து, சேற்றில் வீசிய கல்.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நன்றி!
Jul 7, 2009
ருசித்ததும் ரசித்ததும்
இம்முறை ஊரில் இருந்த போது நான் ரசித்தவற்றையும் ருசித்தவற்றையும் இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வாருங்கள் முருகனில் இருந்து ஆரம்பிப்போம்.
எனக்கு முருகன் இட்லிகடை இட்லி எப்போதும் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. இந்த முறை சுவைக்கும் வரை, முன்பெல்லாம் தினமும் நாலு முருகன் இட்லி உள்ளே போகவில்லை என்றால் உறக்கம் வராது. இப்போது ஒரே ஒரு நாள் சென்றும் ஏன் சென்றோம் என்றாகிவிட்டது. இட்லியின் சுவை குறைந்துவிட்டது. சாம்பாரும் நாலு வகை சட்னியும் சற்று தேவலாம். ஆனால் அங்கு எப்போதும் சேவை அவ்வளவு சிறப்பானதாக இருந்தது இல்லை. இப்போது மிகவும் மோசமான சேவை. கிட்டத்தட்ட அன்னதான முறையில் தான் சப்ளை செய்கிறார்கள். இப்படித்தான் கிடைக்கும், விருப்பமிருந்தால் வா என்பது போல, வெறுத்துவிட்டேன்.
அதேபோல டவுன்ஹால் ரோடு தாஜ் உணவகம், நண்பர்களுடன் மதிய உணவருந்திவிட்டு வீட்டிற்கும் வாங்கிச் சென்றேன். அன்று தாஜ் பிரியாணி உண்ட எங்கள் அனைவருக்கும் வயிறு கேடானது. ஃபுட் பாய்ஸன்? மற்றபடி அவர்கள் சேவையை குறை சொல்வதற்கில்லை.
டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் தெற்குத்தெருவிற்கு எதிர் தெருவில் (பெயர் நினைவில்லை) இருக்கும் மூகாம்பிகை மெஸ்ஸில் மதிய சாப்பாடு சுவை அப்படியே வீட்டு சமையலைப்போலிருக்கும். அண்ணன் தம்பி அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்து சமைப்பார்கள். வெண்டிக்காய் கூட்டும் நல்ல சுவையாக இருக்கும். ஆணி அதிகமென்றால் வீட்டிற்குச் செல்லாமல் மூகாம்பிகை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம், நானும் எனது ஒரு நண்பரும். விலை குறைவைக்காட்டிலும் வீட்டுச்சுவை தான் அங்கு இழுத்துச் செல்லும். இப்போதும் ஒருநாள் அங்கு சென்ற போது இருக்கை காலி இல்லை. திரும்பி வரவேண்டிதாகிவிட்டது. பிறகுதான் அறிந்தேன் கூட்டுக்குடும்பம் பிரிந்த பிறகு சுவையும் அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாக.
காளவாசல் பெல் ரெஸ்டரண்ட், கேட்டரிங் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படுவதால் நல்ல சேவையும் சுமாரான சுவையும் கிடைக்கிறது. ஒரு முறை சுவைக்கலாம். இரண்டாவது முறையாக சுவைத்தேன். பரவாயில்லை.
பைபாஸ் ரோட்டிலிருக்கும் அழகப்பச்செட்டி அசைவ உணவகத்தில் நாட்டுக் கோழி குழம்பு நல்ல சுவையாக இருக்கும். சுவைக்க நேரம் இல்லை.
பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சுல்தான் உணவகத்திலும், மேல மாசி தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் புகாரியிலும் புரோட்டா நன்றாக இருக்கும். எப்படியாவது ஒரு இரவு உணவு அங்கு அமைந்துவிடுகிறது, நண்பர்களுடன் சுற்றுவதால்.
குற்றாலம் சென்றிருந்த போது, தென்காசி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரஹ்மத் புரோட்டா கடையில் புரோட்டா சால்னா அடித்தேன். சும்மாச் சொல்லக்கூடாது. அருமை.
அனைத்தையும் விட, தென்காசியில் என் மாமாவுடைய தோப்பில் குடித்த இளநீர். இதைச் சொல்லவில்லை என்றால் நான் ருசித்த பட்டியல் பூர்த்தி அடையாது. முதல் முறையாக மரத்திலிருந்து வெட்டிய உடன் இளநீர் குடித்தேன். என்ன சுவை, விறு விறுவென்று உள்ளே இறங்கியது. ஒரே நேரத்தில் ஐந்து இளநீர் வெட்ட வெட்ட குடித்தேன். அன்று இரவு வயிறு என்னை அடித்ததை பொறுட்டாகக் கொள்ளவில்லை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
சிகரெட்
சிறிது புகையிலை சுற்றப்பட்ட ஒரு பேப்பரின் ஒரு முனையில் பத்தவைக்கப்பட்ட நெருப்பும் மறு முனையில் முட்டாளும்.
காதல்
கிரிக்கெட்டைப் போல, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் சர்வதேச போட்டிகள் பிரபலம்.
திருமணம்
ஒரு ஒப்பந்தம், இங்கு ஆண் தனது பேச்சுலர் டிகிரியை இழக்கிறான் பெண் தனது மாஸ்டர் டிகிரியை பெறுகிறாள்.
விவாகரத்து
திருமணத்தின் எதிர்காலப்பதம்.
சமாதானம்
தனக்கு கிடைத்ததுதான் பெரிய துண்டு என் அனைவரும் எண்ணும்படி கேக் வெட்டும் கலை போன்றது.
ஆங்கில அகராதி
இங்கு மட்டும் தான் திருமணத்திற்கு முன்பே விவாகரத்து வந்துவிடும்.
புன்னகை
சிறு வளைவால் பல கோணல்கள் நேராக்கப்படலாம்.
அலுவலகம்
கடுமையான குடும்ப வாழ்விற்குப்பிறகு ஓய்வெடுக்கும் இடம்.
கமிட்டி
ஒன்றுமே செய்ய இயலாத தனிமனிதர்கள் ஒன்றுகூடி இருக்கும் ஒரே இடம்.
அனுபவம்
முந்தைய தவறுகளுக்கு மனிதன் இடும் பெயர்.
அரசியல்வாதி
தேர்தலுக்கு முன்பு நமது கைகளையும், பின்பு நமது நம்பிக்கையையும் குலுக்குபவன்.
May 11, 2009
கருணாநிதி, மோடி, ஜெயலலிதா - ஜிகர்தண்டா
வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது - கருணாநிதி.
ஆமாங்கையா உங்க தெற்கு நல்லாவே தேறுது.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது – மோடி
பிணந்தின்னி நாயே, 2002 குஜராத்தை பார்த்து உலகமே கண்ணீர் விட்டதை நீ மறைத்தாலும எங்களால் மறக்க முடியாதடா. தேர்தலுக்காக மலம் தின்னச் சொன்னாலும் தின்னுவாய் நீ.
ஆம், பிணம் தின்ன உனக்கு மலம் எம்மாத்திரம்.
ஆமா...அம்மா வீட்ல தின்ன வரலையா, சோறு?
ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து தேர்தல் பரப்புரை –
இதைத்தான் ஜெயலலிதா பிரதமர் கனவில் மிதக்கிறார் என்று சொல்கிறார்களோ...
கலைஞர் தொலைக்காட்சியில் வரும தேர்தல் விளம்பரங்களில் ஒன்று,
ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை, நகைகள் வாங்கிவந்த தந்தை மாறடைப்பால் கீழே விழுகிறார். நலம் விசாரிக்க வந்த ஒருவர், "கவலைப்பட வேண்டாம்.. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கு. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு செய்து கொடுத்திருக்கார்" என்று சொல்வதாக வருகிறது,
ஆமா... அரசு ஊழியர் உசிரு மட்டும் தான் உசிரா... அப்ப எங்க உசிரெல்லாம்..........
ஆனாலும் அந்த பெண் கேட்பதற்காக வேண்டுமானால் போடலாம், ஓட்டு... உதயசூரியனுக்கு.
ஹி ஹி ஹி.. நமக்குத்தான் இளகிய மனமாச்சே...
மற்றொரு விளம்பரம், ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று. சகிக்கல... எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் அனுதாப ஓட்டுதான் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா? இறந்து போன முரசொலி மாறனைக்காட்டி...
மாறனின் பிள்ளைகளும் ஓட்டுக்காக எதைவேண்டுமானாலும் காட்டத் துணிந்துவிட்டாரகள். பாவம்.
இதற்காகவே அவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.
கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் - ஆதாரம் நகைச்சுவையாக
அண்மையில் ஐ.நா சபையில் நடந்த ஒரு சம்பவம்.
கஷ்மீர் விடயமாக பேசுவதற்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சார்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல நேரம் வழங்கப்பட்டிருந்தது.
முதலில் இந்தியப் பிரதிநிதி ஆரம்பிக்கிறார், 'நான் எனது உரையை ஆரம்பம் செய்யும் முன்பு, கஷ்மீர் என்று பெயர் வைத்த ரிஷி கஷ்யாப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் ஒரு நாள், ஒரு பாறையில் தட்டுகிறார். அப்போது அங்கிருந்து நீரூற்று கிளம்பி நல்ல சுவையான தண்ணீர் வழிந்தோடுகிறது. அதைக்கண்டதும் அவருக்கு குளிக்கலாம் என்ற ஆசை வந்துவிடுகிறது. தனது உடைகளை களைந்து, பாறையில் இருந்து சற்று தூரமாக வைத்துவிட்டு குளிக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்க்கும் போது, அவரது உடைகளை காணவில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடிக்கொண்டு போயிருந்தார்' என்று சொல்லும் போது, பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டு, 'அப்போது அங்கு பாகிஸ்தானி இருக்கவில்லை' எனகிறார். உடனே நம்மாள், 'இதைத்தான் எதிர்பார்த்தேன், இப்போது எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்' என்றாராம்.
தொலைபேசி கோப்பில் நம் பெயர் இடம் பிடிப்பது எளிது,
ஒருவரின் மனதில் இடம் பிடிப்பது கடினம்.
அடுத்தவரின் தவறுகளை மதிப்பிடுவது எளிது,
நம் சொந்த தவறுகளை புரிந்துகொள்வது கடினம்.
பிரியமானவரின் மனதை காயப்படுத்துவது எளிது,
அம்மனதின் காயம் ஆற்றுவது கடினம்.
மற்றவரை மன்னிப்பது எளிது,
மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது கடினம்.
வெற்றியை காட்டுவது எளிது,
தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம்.
சவுதியில் ஆல்கஹால் பாவித்தால் 20 கசையடி தண்டனை.
இந்த செய்தியைவைத்து இச்சம்பவம் கட்டப்பட்டது.
ஒரு நாள் பெங்காலி, பாகிஸ்தானி மற்றும் சந்தேகமில்லாமல் நம் இந்தியன் ஆகிய மூவரும் ஆல்கஹால் பாவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு மன்னர் முன் அழைத்துவரப்படுகிறார்கள். மன்னர் கேட்கிறார், 'சொல்லுங்கள், கசையடிக்கு முன் உங்கள் ஆசை என்ன?' என்று.
பெங்காலி, 'எனது முதுகில் ஒரு தலையனை கட்டிவிடுங்கள்'
அவ்வாறே செய்யப்படுகிறது, ஆனால் 10 அடிகளில் தலையனை பிய்ந்துவிட்டது. மீதி 10 அடி வெற்றுடம்பில் கிடைக்கிறது.
பாகிஸ்தானி 'என் முதுகில் 2 தலையனை கட்டிவிடுங்கள்'
அவ்வாறே கட்டப்பட்டது. 15 அடிகளில் தலையனை பிய்ந்துவிட, 5 வெற்றுடம்பில் கிடைக்கிறது.
நம்ம இந்தியனிடம் மன்னர் சொல்கிறார், 'எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். மன்மோகன் சிங் எனது நாட்டிற்கு நிதி ஆலோசனை வழங்கியுள்ளார். நீ 2 ஆசைகளை சொல்லலாம்' என்று.
நம்மாள் சொல்ல வேண்டுமா என்ன, (கேப்பு கிடைத்தால் காற்று அடிப்போம். காற்றே கிடைத்தால் பறந்துவிட மாட்டோமா), மன்னரிடம், 'நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள நன்மதிப்பை காப்பற்றுவோம், நான் செய்த தவற்றை உணர்ந்துவிட்டேன். எனக்கு 20 அல்ல 40 கசையடி தாருங்கள், இது தான் முதல் ஆசை' என்கிறான்.
மன்னர், 'இந்தியர்கள் வீரமானவர்கள் என்று கேள்விப்பட்டதுண்டு, இன்றுதான் காண்கிறேன், சொல் உனது இரண்டாவது ஆசை என்ன' என்று கேட்கிறார்.
நம்மாள், 'என் முதுகில் பாகிஸ்தானியை கட்டிவிடுங்கள்' என்கிறான்.
பணக்கார கைப்புள்ள இரண்டு நச்சல்குளம் கட்டுகிறார். ஒன்று அவருக்காகவும் மற்றொன்று பொதுநலன் (அடுத்த தேர்தலில் போட்டியிட உத்தேசம்) கருதி மக்களுக்காகவும்.
ஆனால் அவருக்கான குளத்தில் ஒருபோதும் தண்ணீர் நிரப்பியதில்லை.
வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'
கைப்புள்ள, 'எனக்குத்தான் நீச்சல் தெரியாதேடா'
கைப்புள்ள அவர் மகன் படிக்கும் பள்ளியின் ஆசிரியையிடம் சென்று, 'மிஸ், நீங்க நேத்து எனக்கு போன் பண்ணியிருந்தீங்களா?'
மிஸ், 'இல்லையே, ஏன் கேக்குறீங்க?'
கைப்புள்ள, 'இல்ல, என் மொபைல்ல பார்த்தேன், 1 மிஸ் கால்டு ன்னு இருந்தது'
May 3, 2009
அத்வானி, பன்றிக்காய்சல், இலங்கை - ஜிகர்தண்டா
செய்தி; இந்தியாவிலும் பன்றிக்காய்சல். லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேரில் 5 பேருக்கு பன்றி காய்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரதுறை செயலர் தெரிவித்துள்ளார்.
நல்லா செக் பண்ணுங்கப்பா… கோட்டை சண்டைல இத கோட்ட விட்றாதீங்க…
பன்றி காய்சல் பற்றிய எனது முந்தைய பதிவை வாசிக்க இங்கே செல்லவும்.
செய்தி; ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல். இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்வதாக சந்தேகம் எழுந்ததால், கோவையில் இந்திய ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.
சாலைமறியல் போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ராணுவ வாகனம் தாக்குதல் கொஞ்சம் ஓவராயிடுச்சோ?
செய்தி; முதல்வர் கருணாநிதி கடும் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
என்ன காய்சல் னு பார்த்து, அவர ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா… ரெஸ்ட் இன் பீஸ்.
செய்தி; இந்தியா உடனடியாக அணுகுண்டு தயாரிக்க வேண்டும் – அத்வானி.
ராஜபக் ஷே ட்டருந்து எத்தன கிலோவுக்கு பர்சஸ் ஆர்டர் வந்திருக்கு?
ஒரு திருமணமாகாத பெண் தன் அம்மாவிடம் தான் கருவுற்றிருக்கதாக சொல்கிறாள். அவளுடைய அம்மா காச் மூச் என்று கத்திவிட்டு,'யார் அந்த கருப்பாடுன்னாவது தெரியுமான்னு' கேட்க, உடனே அந்த பெண் மொபைல எடுத்து SMS அனுப்பினாளாம். அடுத்த 5 நிமிசத்துல ஒரு BMW வாசல்ல வந்து நிக்குது, அதிலருந்து நம்ம ___________(யார் பேரையாவது போட்டுக்குங்கப்பா) மாதிரி ஒருத்தர் இறங்கி வீட்டுக்குள்ள வந்து, ஜென்டில்மென் அக்ரிமென்ட் போடுகிறார்.
நடந்தது நடந்து போச்சு, உங்க பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், '50 லட்ச ரூபாய் பேங்ல டெபாசிட் பண்றேன். பெண் குழந்தைன்னா, 1 கோடி. ரெட்டைக்குழந்தை பிறந்தால், ஒவ்வொறுத்தர் பேர்லயும் 50 லட்சமும் அம்பத்தூர்ல இருக்குர என்னோட ஒரு பேக்டரியும் சேர்த்து தருகிறேன். ஆனால், இடையிலேயே அபார்ஷன் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க' என்று கேட்க..
அவ்வளவு நேரமா அமைதியா இருந்த அந்தப்பெண்ணுடைய அப்பா, 'இன்னொரு தடவ முயற்சி பண்ணுங்கன்னு' சொன்னாறாம்.
Chill: better luck next time.
May 2, 2009
த்ரிஷா இடுப்பு எனக்கு பிடிக்கும் - ஜிகர்தண்டா©
ஜிகர்தண்டா தெரியாத மதுரைக்காரர்கள் இருக்க முடியாது. மற்றயாருக்கும தெரியாது என்று சொல்வதற்கில்லை. தெரியாதவர்களுக்காக சிறிய முன்னுரை, ஜிகர்தண்டா என்பது பாலாடை, ஐஸ்க்ரீம், கடல்பாசி (ஒருவகை தாவரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறதாம், ஆங்கிலத்தில் ChinaGrass என்று சொல்கிறார்கள்) போன்றவற்றின் கலவை தான் ஜிகர்தண்டா என்பது. அதன் சரியான சுவையை ருசிக்க மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள ஃபேமஸ் ஜிகர்தண்டாவுக்கு (இவர்களுக்கு வேறு கிளைகள் கிடையாதாம்) செல்லலாம். ஜிகர்தண்டாவுக்கு பெயர் காரணமாக அவர்கள் சொல்வது, ஹிந்தியில் (जिगर) ஜிகர் என்றால் இதயம், (ठंडा) தண்டா= குளிர், அதாவது ஜிகர் தண்டா = இதயத்திற்கு குளிர்ச்சி. (ஜிகர் க்கு அவர்கள் சொல்லாத தைரியம் என்ற ஒரு அர்த்தமும் ஹிந்தியில் உண்டாம் . நான் புரிந்துகொண்டது, தைரியம் இருந்தால் வந்து குடித்துப்பார், குளிர்ச்சியாவாய் என்பது).
அதெல்லாஞ்சரி... வெளக்குத்தூண் ஜிகர்தண்டாவுக்கு வெளம்பரஞ்செய்யத்தான் இன்னிக்கி கட திறந்தியான்னு நீங்க கேட்டா, இல்லங்க இல்ல...சத்தியமா இல்ல. கஸ்டமர கவர்பண்றதுக்காக, எங்க கடையிலையும் ஆன்லைன்ல ஜிகர்தண்டா விக்க ஆரம்பிச்சாச்சு. அட.. அதாங்க கொத்துபுரோட்டா, அவியல், குவியல், புவியல், வரலாறு, கிச்சடி, பச்சடி அந்த வரிசையில் ஜிகர்தண்டா©.
அதென்ன ஜிகர்தண்டா க்கு பக்கத்ல ©?
காபி ரைட் வாங்கிட்டோம்ல..
யார்ட வாங்ன?
யார்டயோ...
அடிவாங்க போறடா... டேய்....
எங்களுக்கேவா... நாங்கல்லாம்... மதுரக்காரங்ஞ, தெரியும்ல... எங்களுக்கு இல்லாம வேற யாருக்கு இந்த பேரு... யார் வந்தாலும் பாத்துக்குவோம்ல...
இந்த வாய்சவடாலுக்கு மட்டும் எந்த கொறச்சலும் இல்ல, மொதல்ல விசயத்துக்கு வாடா….
இந்தா வந்துட்டேங்க..
நேற்று வெள்ளி வார விடுமுறை அறைக்குள் பொழுதுபோகவில்லை என வலைக்குள் வந்தால்... (உழைப்பாளர் அனைவரும் குவாட்டர் அடிச்சுட்டு குப்புர படுத்துட்டாங்க போல) வெகு சிலரே பதிவிட்டிருந்தார்கள் அவர்களிடமும் புன்னகைத்துவிட்டு வந்தேன். என்ன செய்யலாம்... டிவி பார்த்து நாட்களாகிவிட்டிருந்தது, ரிமோட்டை தேடியெடுத்து டிவி ஆன் செய்தால்... என்ன கொடுமைங்க இது, கலைஞர் மட்டும்தான் காட்சிதந்தார். அதில் தலயும் சதாவும் அசாதரணமாக ஆடிக்கொண்டிருந்தனர். இந்த பசங்கல்லாம் தல தலன்னு அடிச்சுகிறாங்களே... அவருக்கு இன்று பிறந்தநாள் வேறு... சரி தல படம் பார்க்கலாமென்று ஜிஞ்சர் டீயுடன் வந்தமர்ந்தேன். படம் பெயர் திருப்பதியாம், இயக்கம் பேரரசு (நீ போர் அரசு). தல பஞ்ச் டயலாக் , 'நான் எறங்கி போறவன் இல்லடா, ஏறிப்போறவன்' நல்லா ஏறிப்போங்க எங்க தல...
அடுத்துவந்த அரைமணி ஹாரிஸ் ஜெயராஜுக்கு, பரவாயில்லை. அதன்பிறகு வந்தார் ஆதி... தளபதி. (அடப்பாவிங்களா... அதுக்குள்ள அடுத்த படமா...) இயக்குனர் ரமணா, திரைக்கதை நல்ல வேகம். தளபதியும் டயலாக் பேசினார்... ஒன்றும் மனதில் நிற்கவில்லை. புல்லட் விவேக், சும்மா சொல்லக்கூடாது... அருமை. மறுபடியும் தளபதி டயலாக் பேசவந்த போது டிவி யை மியூட்டில் போட்டுவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்.
கண்விழித்தால், ப்ரகாஷ் ராஜும் ப்ரியதர்ஷினியும்(உங்களுக்கு எப்போ டீன் ஏஜ் முடியும் மேடம்?) சைகையில் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க பாவமாயிருந்தது. போனால் போகட்டுமென்று அவர்களுக்கு பேச்சு அருள் கொடுத்தேன். நன்றாகத்தான் பேசினார்கள்.
ப்ரியதர்ஷினி; அபியும் நானும் படத்ல த்ரிஷாவ கொஞ்சம் கூட கிளாமர் இல்லாம காட்டியிருந்தத பத்தி?
ப்ரகாஷ் ராஜ்; அந்த படத்ல அபியா நடிகறதுக்கு எனக்கு முன்னனி நடிகை தேவைப்படல... ஆனாலும் த்ரிஷா இருக்கட்டுமேன்னு புக் பண்ணினோம். எல்லோருக்கும் அவ அபியாதான் தெரியணுமே த்ரிஷாவா தெரியக்கூடாதுங்றதில கவனமாயிருந்தோம். ஒரே ஒரு ஊரு... பாட்டுல ஒரு சீன் த்ரிஷா கைய மேல தூக்கி ஆடுற மாதிரி வரும். அப்டி ஆடும் போது த்ரிஷா இடுப்பு கொஞ்சம் தெரிஞ்சது. நானும் ராதாவும் ஓடுப்போயி 'த்ரிஷா, நீ கை தூக்கி ஆடும் போது, உன் இடுப்ப தெரியுது. நீ ஏதாவது கருப்பு இன்னர் போட்டுக்கோயேன்னு' சொன்னோம். அதுக்கு த்ரிஷா சொன்னா, 'ஏன் சார், எல்லாரும் என் இடுப்ப காட்ட சொல்வாங்க. என் இடுப்ப மறைக்க சொன்ன முதல் ஆள் நீங்கதான்.' அதுக்கு நான் சொன்னேன், அம்மா த்ரிஷா, உன் இடுப்பு எனக்கு பிடிக்கும், ஆனா அபி இடுப்பு காட்ட மாட்டான்னு.
இது எனக்கு மிகவும் பிடித்தது.
செய்தி; தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தைவிதி மீறல், தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக தேர்தல் ஆணையர் குப்தா சொல்லியிருக்கிறாராம். நேரு அண்ணே உடனே, 'அப்டியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு' விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐயா... கட்டணம் குறைத்தால் தான் என்னன்னு கேட்கிறேன்.
செய்தி; மதுரையில் கட்டு கட்டாக பணம் ஸ்கார்பியோ டிக்கியில் இருந்தது பிடிபட்டது.
எங்க வீட்ல ஸாலிடா 10 ஓட்டு இருக்கு... யாருக்காவது வேணும்னா எனக்கு மடலிடலாம்
ஒருத்தர் வீட்ல நைட்டு திருட்டு போயிடுச்சாம். அவர் உடனே போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, திருடனும் பிடிக்கப்பட்டான். அவர் போலிஸ்ட கேட்டாராம், 'சார் நான் அவன்ட கொஞ்சம் பேசணும்' 'அதெல்லாம் முடியாது, எதுனாலும் கோட்ல பேசிக்கலாம்' னு போலீஸ் சொல்ல, அதுக்கு அவர், 'சார் வேற ஒண்ணும் இல்ல, என் மனைவி தூங்கிட்ருக்கப்ப, அவ எழுந்திரிக்காம எப்டி வீட்டுக்குள்ள வந்தான்னு மட்டும் கேட்டுக்கிறேன். நான் ரொம்ப நாளா முயற்சி பண்ணி மாட்டிக்கிறேன்.' அப்டின்னு சொன்னாராம்.
ஒரு குட்டிப்பொண்ணு கடவுளிடம்; எனக்கு தம்பி பாப்பா குடுத்ததுக்கு நன்றி கடவுளே, ஆனா நான் உன்ட நாய் குட்டிதான வேணும்னு கேட்டேன்.