Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




Dec 21, 2009

பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா


விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.

வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.
பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.
பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம்.

ஈரோடு வாழ் பதிவர்களால் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.

அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) மெகா திரைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)

தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.

ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.

ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. - 

புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. - 

வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. - 

நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். - 

டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

Dec 14, 2009

கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்

என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு  வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.

ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..  நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?  கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.

ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை  நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்  இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.

மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
  • பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
  • திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
  • கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
  • இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
  • இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு.  'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
  • கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். 
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்  என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.

மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும்  மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.


முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

Nov 24, 2009

விபச்சாரம் - சேவையா - தொழிலா

வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.

புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.

விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,
  • கூடா நட்பு.
  • மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
  • பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
  • போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
  • இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
  • ஊடகங்கள்.
  • வன்புணர்ச்சி.
  • காதல், 'ஓடிப்போதல்'.
  • சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
  • மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
  • பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.
போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.

ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,
  1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?
  2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...
  3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
  4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?
முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.

நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.

ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.

The Immoral Traffic Prevention) Act, 1956

Nov 16, 2009

வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்


இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார்.  இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. 

இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது.  இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது. 

தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா சொல்வதுபோல, '
என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருந்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருந்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வந்தேமாதரம் என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.

இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது.  அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே. 

இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.


ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை எழுதியிருக்கிறார்.  அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். மேலும் வாசிக்க... 

மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...

மேலே அலசப்பட்ட இரண்டு சச்சரவுகளுக்கும் சூத்திரதாரியான, உருவ வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல், இசை வெறுக்கப்பட்டிருக்கிறது.

Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Nov 4, 2009

எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா

நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள்  என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்...
எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் இங்கே கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.

இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.

நண்பர் நர்சிம், கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.

சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப்,  பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

அவிய்ங்க ராசா, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.

பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண்,  ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்.  இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Rukaiya2 Rukaiya1

டிஸ்கி: இது மீள்பதிவு இல்லீங்க... :(

Oct 30, 2009

முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,
  • கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
  • கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும், 
  • கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. 
  • கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
  • இதனாலேயே பெரியாறு கேரளத்தின் உயிர்நாடி ஆறு என்று சொல்லப்படுகிறது.
பெரியாறு உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை - கழுகு பார்வையில் வரலாறு
வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,

ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன பிரச்சனை?
 
அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

நீதிமன்ற வழக்கு

152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

அணை உடையும் அபாயமில்லை என்று தமிழக அரசும், அணை அபாய கட்டத்தில் இருப்பதாக கேரள அரசின் சார்பாக ஐஐடியின் அறிக்கையும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
  • ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
  • வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
  • அட இவ்வளவு ஏன்..  நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.
இத்தகைய வாழ்வுசார் உதவிகள் தமிழ்நாட்டிலிருந்து கிடைப்பதற்கு கைமாறாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நன்றியாக எண்ணி தமிழக தென் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை ஒரளவுக்கேனும் தீர்த்து வைக்க முன்வர வேண்டும்.

தமிழக அரசிற்கு: கேரள அரசு பிரதானமாக முன்வைக்கும், 'அதிக அளவு நீர் தேக்கம் அல்லது சிறிய (4 ரிக்டர் அளவு) நில நடுக்கத்தால் அணை உடைவதால் ஏற்படுவதாக கணிக்கும் உயிர் சேதத்தையும்' கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தை செய்வதாலேயே ஏதாவது சாதகமான நிலை ஏற்படலாம். இயற்கை சீற்றத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் இழப்பது லட்ச கணக்கான உயிர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அணையின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி சொல்வதாலோ அல்லது இரு மாநிலங்களுக்கும் நடுவாக ஏதாவது வெளிநாட்டு அமைப்பைக்கொண்டு அணையை ஆய்வு செய்யச் சொல்வதாலோ கேரளாவோடு கை கோர்க்கலாம். குறைந்தபட்சம் 136 அடியிலேயே நீர்மட்டம் இருக்கச்செய்யலாம். எப்படியாவது புதிய அணை கட்டாது நிலைமையை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி அரசியல் பாராது திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சரத்குமார்களும் இணைந்து செயல்பட்டு தென் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும். இது நடக்குமா?...

Oct 29, 2009

குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்

ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.
நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும்.
Congratulations, it's your lucky day! You've just won $5,000!
இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.  ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,  இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)
இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் இங்கே சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு  அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.cctv-poster
பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் சிசிடிவி  பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.
இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…

Oct 20, 2009

மிஸ் சுப்புலட்சுமி

iniyaal: சுப்புலட்சுமியை ரமேஷ் கொலை செய்துட்டானாம்.
சுப்புலட்சுமி தெரியும்ல.. நம்ம கூட படிச்சாளே...
me:  ஆமாமா தெரியும்.  :( ஏன்.. என்னாச்சு?

ஸ்ரீரங்கம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பில்தான் சுப்புலட்சுமி எனக்கு பழக்கம். அதற்கு முன்பு ஆலங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறாள். அவளும் ஆணிமுத்துவும் வயல், தோப்பு, கம்மாய் என ஒன்றாய் சுற்றியிருக்கிறார்கள். பிறகு ஆணிமுத்து கறவை மாடுகளுடன் அதே இடங்களை சுற்ற, கிராம தலையாரி மகளான சுப்புலட்சுமி மேல் படிப்பிற்காக திருச்சி ஸ்ரீநிவாசா நகரிலிருக்கும் தலையாரியின் தங்கை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அதன் பிறகு எப்போதாவது ஆலங்குடி போகும்போது ஆணிமுத்து நேரிட்டால் 'ஹாய் ஆணி.. ஹவ் ஆர் யூ' என்பதோடு சரி. இப்போதெல்லாம் ஆணியை  தீர மறந்துவிட்டாள் போலும். அவன் பற்றிய பேச்சே இல்லை.

இரண்டு வருடங்களில் சுப்புலட்சுமி நிறையவே மாறிவிட்டிருந்தாள்.  கல்லூரியில் சேர்ந்த பிறகு சுப்புலட்சுமி நவமணி என்ற பெயரை சுலக்ஷனா என்பதாக மாற்றிக்கொண்டாள். லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. சுப்புலட்சுமியாக இருந்தபோது கண்டுகொள்ளாத கந்தசாமிகள், சுலக்ஷனாவான பிறகு சும்ம்மா பின்னால் அலைந்தனர், அவளும்தான்.  கந்தசாமிகளில் ஒருவனான ரமேஷிடம் மட்டும் நெருங்கி பழக ஆரம்பிக்க, மற்றவர்கள் ஒதுங்கிவிட்டிருந்தார்கள்.  அவனோடு சேர்ந்து திருச்சியில் அவள் சுற்றாத இடமில்லை. அடிக்கடி இருவரையும் முக்கொம்பு அணைக்கட்டில் பார்த்ததாக இனியவள் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்திலிருந்து லாங்ஜம்ப் தூரம் என்பதால் முக்கொம்பை தெரிவு செய்திருக்கலாம். இருவருக்கும் அசைவ உணவு பிடித்திருந்தது. புகாரியில் வாரம் இருமுறை மதிய உணவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ரமேஷ், சுலக்ஷனாவிற்குள் இருந்த சுப்புலட்சுமியை காதலித்தான். அவளுள் இருந்த கிராமத்து அழகை ரசித்தான். ஆனால், சுலக்ஷனா தான் கிராமத்துக்காரி என்று அறியப்படுவதை வெறுத்தாள். அதை வெளிக்காட்டுவதை அவமானமாக உணர்ந்தாள். அவளுக்கு ரமேஷ் என்ற பெரிய இடத்து பையனைத்தான் பிடித்திருந்தது.  ஒரு வார விடுமுறையில் ஆலங்குடி சென்றுவந்த சுலக்ஷனாவிடம், ரமேஷ் சுவீடனுக்கு சென்றுவிட்டதாக இனியாள்தான் சொல்லியிருக்கிறாள். ஆத்திரமடைந்த சுலக்ஷனா, ரமேஷ் தன்னை ஏமாற்றவிட்டதாக அவனை மட்டுமல்ல மொத்த ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்தாள். அதற்கடுத்த மாதமே ஆஸ்திரியாவில் கிடைத்த இரண்டு வருட ஒப்பந்த வேலைக்கு சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இனியாள் சாட்டில் வந்தாள். சுலக்ஷனா கொலை செய்யப்பட்டுவிட்டாளாம். அவளது சொந்த ஊரான கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியில் வைத்து ரமேஷ் தான் கொலைசெய்திருக்கிறான் என்றும் சாட்டினாள்.

ரமேஷ் பெரிய இடத்து பையன், பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட்.  எனக்கு ரமேஷ் அவ்வளவாக பழக்கமில்லை என்பதால், அவனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இனியாளைக் கேளுங்கள்.

இந்தக்கொலையை ரமேஷ் செய்திருக்கமாட்டான் என்று நம்புகிறேன்.  அவன் அவளை எப்போதும் வெறுத்ததில்லை. கடைசிவரை அவளுடன் நெருக்கமாகவே இருந்திருக்கிறான். ஒரு வேளை ஆணி? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்... 

இப்படிக்கு,
மணிமேகலை.
ஸ்ரீரங்கம்.

Oct 18, 2009

நட்பு என்பது...

நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
 நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
 இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க... 

Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.

Oct 14, 2009

க்ராஸ் டாகிங்

முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.

பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
cross-1
மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.

உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட,  சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.

இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?

1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.
2. க்ராஸ் டாகிங்  முறையை பயன்படுத்தலாம்.

க்ராஸ் டாகிங் - Cross Docking
ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும்.
crossdocking-2
வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில்,  கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
Map
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.

க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.
குறைந்த செலவு.
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.
அவசியமற்ற தளவாட வாடகை.
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.
பரவலான வேலைவாய்ப்பு.
எரி பொருள் சிக்கனம்.
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.

தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…

நன்றி.