Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...

Nov 24, 2009

விபச்சாரம் - சேவையா - தொழிலா

வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.

புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.

விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,
  • கூடா நட்பு.
  • மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
  • பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
  • போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
  • இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
  • ஊடகங்கள்.
  • வன்புணர்ச்சி.
  • காதல், 'ஓடிப்போதல்'.
  • சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
  • மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
  • பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.
போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.

ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,
  1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?
  2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...
  3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
  4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?
முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.

நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.

ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.

The Immoral Traffic Prevention) Act, 1956

Nov 16, 2009

வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்


இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார்.  இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. 

இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது.  இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது. 

தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா சொல்வதுபோல, '
என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருந்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருந்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வந்தேமாதரம் என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.

இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது.  அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே. 

இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.


ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை எழுதியிருக்கிறார்.  அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். மேலும் வாசிக்க... 

மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...

மேலே அலசப்பட்ட இரண்டு சச்சரவுகளுக்கும் சூத்திரதாரியான, உருவ வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல், இசை வெறுக்கப்பட்டிருக்கிறது.

Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Nov 4, 2009

எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா

நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள்  என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்...
எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் இங்கே கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.

இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.

நண்பர் நர்சிம், கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.

சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப்,  பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

அவிய்ங்க ராசா, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.

பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண்,  ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்.  இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Rukaiya2 Rukaiya1

டிஸ்கி: இது மீள்பதிவு இல்லீங்க... :(