Jul 16, 2011

மேரிக்குண்டொரு குஞ்ஞாடு

மிகவும் பிரமாதம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒற்றைவரிக் கதை என்றாலும், நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே திலீபுக்கு பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறாக அமைந்துவிடுகிறது. 'எண்ட ஜோஸட்டன்' என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கையில் திலீப் நிற்கிறார். எடிஸனின் விதிப்படி அங்கு காதலி வந்ததும் அவருடன் பாடலும் வந்திருக்க வேண்டும், நான் கவனிக்கவில்லை. காதலி அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் பெயர் பாவனா. மொத்தமாக இரண்டு நாட்கள் தான் சூட்டிங் வந்திருப்பார். முதல் நாள் நடிக்கவும், இரண்டாவது நாள் குறை கலையவும், இரண்டாவது நாளை உபயோகிக்கவில்லை போலும்.


திரையில் கதை ஏன் இவ்வாறு தொடங்க வேண்டும் என நினைத்திருக்கையில், அங்குதான் திரையை இறக்கி சுபம் இடவும் உத்தி வகுக்கப்படுவது பின்னால் தெரியவருகிறது.


மஞ்சப்பையை கையில் சுற்றி பேருந்திலிருந்து இறங்கும் போது பிஜூ மேனன், சாதாரண ஒரு வில்லன் அறிமுகத்தை நினைவு படுத்தினாலும் பிறகு உடல் மொழியால் அசத்துகிறார். ஆழக் குழிதோண்டி அதிலே வாழைக்கன்று நடுவதும், 'இங்க ஒரு மாமரம் இருந்துச்சே என்னாச்சு' என்று கேட்பதும் வீணாகவில்லை. வீணான காட்சிகளை விட்டு வெளியே வர நமது சினிமாக்களை எதிர்பார்க்கிறேன்.


ஊரில் ஒரு இழவு விழுந்தால் உள்ளூர மட்டுமின்றி சந்தோஷப்படும் சலீம் குமாரின் நூற்றுக்கும் மேலான சினிமாக்களின் முதிர்ச்சி தெரிகிறது. (ரொம்ப மெலிந்து இருக்கிறாரே, ஏன்?)


'என் அப்பா சினிமாக்களில் காமெடி ரோல் செய்தாலும் நிஜத்தில் மிகவும் கண்டிப்பானவர்' என்று ஜெகதி ஸ்ரீகுமாருடைய மகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏனோ இந்த சினிமாவில் ஜெகதியை பார்க்கும் போதல்லாம் நினைவில் வந்தது. ஒரு காமெடிக் கதையில் ஜெகதி காமெடியன் அல்ல.


பொதுவாக ஒரு மதத்தை கதைக்கலனாகக் கொண்டு எடுக்கப்படும் (காமெடியோ, க்ரைமோ) சினிமாக்களில் யாரையோ திருப்திபடுத்த சாமான்ய பார்வையாளனின் முகம் சுளிக்க வைப்பது எப்போதும் எரிச்சல் தரும் ஒன்று. மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, தலைப்பும் கதையும் கிருத்துவர்களை சுற்றி நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள் மனம் நோகாத கதையமைப்பு.


இவையெல்லாம் தான் தமிழுக்குமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை ஷாஃபியால் தர முடிகிறது.


இதையும் சொல்லியாக வேண்டும்; தொன்று தொட்ட வழக்கப்படி, ஊருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டி ட்விஸ்ட் கொண்டு வருகிறார். பணம் வைத்திருப்பவர்கள் இங்கும் வில்லன்களாவே இருக்கிறார்கள்.
  • மனதில் தொன்றியதை அப்படியே எழுத்தில் தட்டி வெளியிடுகிறேன். எடிட் செய்யவென்று கிடப்பில் போட்ட பல பதிவுகள் காலாவதியாகிவிட்டது.
  • நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பதிவு, அதுவும் சினிமாவைப் பற்றியதாகிப்போனதில் சிறு வருத்தமே. #சேர்க்கை சரியில்லை.