Showing posts with label முஸ்லீம். Show all posts
Showing posts with label முஸ்லீம். Show all posts

Jan 8, 2010

கஃ பா - ஓர் அற்புதம்

முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் க'ஃபா பற்றிய காணொளிப் பகிர்வு. (யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது.)


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. புனித குர்ஆன் 3: 96,97
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - புனிதகுர்ஆன் 2:150



க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு அது என்னுடையதல்ல

Nov 16, 2009

வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்


இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார்.  இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. 

இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது.  இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது. 

தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா சொல்வதுபோல, '
என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருந்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருந்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வந்தேமாதரம் என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.

இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது.  அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே. 

இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.


ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை எழுதியிருக்கிறார்.  அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். மேலும் வாசிக்க... 

மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...

மேலே அலசப்பட்ட இரண்டு சச்சரவுகளுக்கும் சூத்திரதாரியான, உருவ வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல், இசை வெறுக்கப்பட்டிருக்கிறது.

Sep 18, 2009

யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

  • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
  • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
  • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

நன்றி.

Aug 15, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

உண்மைத் தமிழன் அண்ணாச்சி, அவரது அண்ணன் சேரன் இயக்கிய பொக்கிஷம் என்ற திரைப்படத்தை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து, செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் அத்திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார், கூடவே ஒரு சமூகத்தையும்.
அண்ணாச்சி, நீங்கள் திரைவிமர்சனத்தோடு நின்றிருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது. விமர்சனத்தின் இடையிடையே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கம் எதிரான கருத்துகளை தனது வாசகர்கள் மனதில் நாசூக்காக ஏற்ற முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. இஸ்லாத்தை பின்பற்றும் நான், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் குறைகூறி ஏளனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படாதோ / நியாயமில்லையோ, அதைவகையில் நீங்கள் செய்ததும். திரைப்பட விமர்சனத்தில் ஒரு சமூகத்தின் மீது உங்கள் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன அண்ணாச்சி? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. ஒருவர் நம்பிகையில் மற்றவர் குறுக்கிடாதவரை இங்கே எந்த சச்சரவும் எழப்போவதில்லை.
உங்களது கருத்துக்களை மறுத்து விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. நீங்கள் சொல்லியுள்ள,
அந்த பர்தாவை அணிந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடம்கூட நம்மால் நிற்க முடியாது.. எப்படித்தான் அந்தப் பெண்கள் அணிகிறார்களோ தெரியவில்லை.
பர்தா மட்டுமல்ல, இன்னும் பெண்கள் அணியும் பலவற்றை உங்களால் அணியமுடியாது அண்ணாச்சி. அது பெண்களுக்கேயான உடல் அமைப்பிற்கானது, பாதுகாப்பிற்கானது. அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது.
முதலில் பர்தா என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு பெண் தன் முகம் மற்றும் மணிக்கட்டிற்கு கீழான கை ஆகியவை தவிர மறைக்க வேண்டிய பாகங்களை ஆடையால் மறைப்பது. அந்த ஆடை, இறுக்கமானதாகவோ, உடல் பாகங்களை வெளிக்காட்டக்கூடிய மெல்லியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக ஒரு ஆணின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தாத உடையாக இருக்க வேண்டும். அது எந்த நிறத்திலும் இருக்கலாம். எதற்காக இந்த உடை? கண்ணியமான உடை, பெண்களுக்கு, ஆண்களிடத்தில் கண்ணியத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் சீண்டப்பட மாட்டார்கள், தொல்லைகள் படுத்தப்பட மாட்டார்கள். பர்தா அணியும் பெண்களைக் கேட்டால் சொல்லுவார்கள், அது தன் மானத்தை எந்தளவு பாதுகாக்கிறது என்று. பர்தா அணியும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்பதும் அறிந்திருப்பீர்கள்.
கடைவீதியில் நடந்து செல்லும் சம அழகுள்ள இரட்டைப்பிறவி சகோதரிகளில், ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மெல்லிய இறுக்கமான உடை அணிந்திருக்கிறாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது இறுக்கமான உடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக இறுக்கமான உடை அணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றால் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.
உங்கள் அண்ணன் சேரன் தன் காதலியை பாடல் காட்சிகளில் திறந்து காட்டச்சொல்லியிருப்பாரே… அது போதாதா உங்களுக்கு? மறைக்கப்பட வேண்டிய தனது அந்தரங்க பகுதிகளை அந்நியரிடமிருந்து ஒரு பெண் மறைத்துக் கொள்வது தான் ஆணாதிக்கச் சிந்தனையா? உங்கள் பார்வையில் படும் அனைத்து பெண்களும் உங்களுக்கு இடுப்பையும், அந்தரங்க பகுதிகளையும் காட்டிவிட வேண்டுமா. இறுக்கமான, அரைகுறை அடையுடன் கவர்ச்சிப் பொருளாக காட்சித் தரவேண்டும் என்பது தான் உங்கள் சிந்தனையா? அவ்வாறு சிந்திப்பது தான் முற்போக்கு என்று நினைத்தால், மாற்றிக் கொள்ளுங்கள், அதுதான் ஆணாதிக்கப் போக்கு.
இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ஆடை அணிந்தும் அணியாதது போன்றவர்கள் என்று இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம் வீடுங்கிறதால வீட்டுக்குள்ள வெளி ஆளை அனுமதிக்க மாட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு பெரும் உதவி செய்தவர்ங்கிறதால அதையெல்லாம் நான் பார்க்கலை.." என்று சொல்கின்றபோது முஸ்லீம சமுதாயத்தினரின் கட்டுப்பெட்டியான அந்த விதிமுறைகள் மீதிருக்கும் கோபம் தெறிக்கிறது.
எதை ஐயா கட்டுப்பெட்டியான விதிமுறைகள் என்று சொல்கிறீர்கள? பெண்கள் இருக்கும் வீட்டில் வெளி ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பததா?. பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் உங்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கணுமா?
முஸ்லீம் பெண்களுக்குத்தான் எத்தனை, எத்தனை கஷ்டங்கள்..? 'வெளியாட்கள் யாரைப் பார்த்தாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்..' 'உடல் முழுக்க போர்த்திக் கொண்டுதான் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்'. 'வெளி நபர்களிடம் பேசக் கூடாது..' 'பழக்கம் கூடாது' என்று காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை தட்டிக் கேட்கும் வாய்ப்பு அண்ணன் சேரனுக்கு இருந்தும், அவரது ஒரே நோக்கம் 'காதல்'தான் என்பதால் அதனை லேசாகத் தொட்டுப் பார்த்து அகன்றுவிட்டார்.
எது காட்டுமிராண்டித்தனம்? அந்நிய ஆண்களிடம் பேசாமல் இருப்பது காட்டுமிராண்டித்தனமா? வெளியாட்களிடம் முகத்தை காட்டி, உடல் முழுக்க திறந்து கொண்டும், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டும், பழகிக் கொண்டும் இருப்பது தான் நாகரிகத்தின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?
மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக வந்து படுத்திருக்கும் நதீராவின் தாயாரே மிகக் கஷ்டப்பட்டு பேசும் நிலையில் இருக்கும்போது தனக்காகவும், நதீராவுக்காகவும் பேச வருகின்ற காட்சியே இதற்கு சாட்சி. இப்படியொரு சூழல் முஸ்லீம் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.. வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா..? என்று தணியும் இந்தக் கொடுமை..
ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு, உங்கள் அண்ணன் சேரன் அப்படி காட்டிவிட்டார் என்பதற்காக அதுவே சாட்சியாகிவிடுமா? ஐயா, இன்றும் வலையில் எத்தனையோ முஸ்லீம் பெண்கள் எழுதுகிறார்கள். இங்கு எழுதும் பல ஆண்களைக் காட்டிலும் நல்ல எழுத்தாக இருக்கிறது. ஒரு சகோதரி தமிழில், உங்களுக்கும் எனக்கும் தெரியாத கணினி துறை சார்ந்த நுண் விசயங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். ஒருவர் அரசியல் கட்சி தலைவியாகவும் இருந்து வருகிறார். வெளியுலகில் அவரை பர்தா இல்லாமல் பார்க்க முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ள பலரும் பட்டப் படிப்புகள் படித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்ணியமான முறையில் மற்றவருடன் பேசுகிறார்கள் / கண்ணியமான நட்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனது இந்த இடுகையை நீங்களை வாசித்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் எழுத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களிடமிருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். இப்படி அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தாக்குதல் வேண்டாமே, அண்ணாச்சி.
நான் பார்க்காத பொக்கிஷம் சினிமாவை விமர்சிக்கவில்லை, தேவையும் இல்லை. அந்தப்பட விமர்சனத்தின் ஒரு சமூகத் தாங்குதலைத் தான் தவறென்று விளக்கியுள்ளேன்.

Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!

Apr 16, 2009

மனிதநேய மக்கள் கட்சி - என்ன செய்ய வேண்டும்?

மனிதநேய மக்கள் கட்சி ‍ என்ன செய்ய வேண்டும் இனி?

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தனக்கு கொடுக்கப்பட்ட வக்ஃப் வாரிய பணியை செவ்வனே செய்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் செய்தது மிகச்சிறந்த பணி எனலாம். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, முதல் தேர்தலையும் சந்திக்கிறது. சவாலான தேர்தல் தான். திமுக கூட்டணியில் இருந்திருந்தால் இலகுவாக பதவி / அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கும். வெளியே வந்தாகிவிட்டது.

தனித்து போட்டி என்ற முடிவு தான் மனிதநேய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை முஸ்லீம்களிடமும் மாற்று அரசியலை நோக்கி இருப்பவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. தமிழின தலைவனைக்காட்டி கையை பிடித்து கெஞ்சிய போதும் விட்டுக்குடுக்காத மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களின் (கொடுத்தால் ஒன்றுக்கு மேற்மட்ட தொகுதி) உறுதியை பாராட்டவேண்டும். இந்த பிப்ர‌வ‌ரியில் உத‌ய‌மான‌ க‌ட்சி குறுகிய‌ கால‌த்தில் சமூக ஜனநாயக முன்னணிக்கு த‌லைமை தாங்கும் நிலைக்கு உய‌ர்ந்துள்ள‌து பிர‌மிக்க‌வைக்கிற‌து.

தி மு க‌ கூட்ட‌ணியை விட்டு பிரிந்த‌த‌ற்கு த‌ன்னிலை விள‌க்க‌ம் கொடுத்துள்ளார்க‌ள். http://www.tmmk.in/news/999356.htm

(ஒரு தொகுதி வாங்கி தி மு க கூட்டணியில் சேர்ந்திருந்தாலும் த‌ன்னிலை விள‌க்கம் கொடுத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்) காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,

வெகுசன அரசியலில் வெற்றிபெற இப்பொழுது மனிதநேய மக்கள் கட்சி செய்ய‌வேண்டியது:

1. வாக்கு அர‌சிய‌ல் செய்ய‌ வெண்டும்

2. முய‌லுக்கு மூன்று காலென்றிருக்கும் பி.ஜைனுலாபுதீனுட‌ன் ச‌மாதான‌ பேச்சு ந‌டத்துவதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆத‌ர‌வு திர‌ட்ட‌ வேண்டும். குறைந்த‌ப‌ட்ச‌ம் மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராய் ப‌ணியாற்றுவ‌திலிருந்து அவ‌ர்க‌ளை வில‌கியிருக்க‌ச்சொல்ல‌லாம். பி ஜெ வுக்கென‌ ஒரு ர‌சிக‌ர் கூட்டம் (வாய்ச்சொல் வீரர்கள்) இருப்ப‌து ம‌றுக்க‌ முடியாதது.

3. ஜமாத்தே இஸ்லாமியுட‌னும் பேச்சு வார்த்தை ந‌ட‌த்த‌லாம். அவ‌ர்களுக்கு இராமநாதபுர சுற்று வட்டார மற்றும் பரவலான தென் மாவட்ட கிராமங்களில் வெளியில் திரியாத‌ மக்கள் செல்வாக்கு உள்ளது. 67 வருட பழமை வாய்ந்த ஜமாத்தே இஸ்லாமியும் த‌னிக்க‌ட்சி தொட‌ங்கும் நிலையில் இருப்ப‌தால், ஒரு முன்னோட்ட‌மாக‌ ஆத‌ர‌வு த‌ர‌ வாய்ப்பு அதிக‌ம். கேரளாவிலும் 18 தொகுதிகளில் LDF க்கு ஆதரவு, ஆந்திராவில் 37 நாடாளுமன்ற மற்றும் 267 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கும் குக்க‌ட்ப‌ல்லியில் லோக் ச‌ட்டா பார்ட்டி வேட்பாள‌ர் ஜெய‌ப்ர‌காஷ் நாராய‌ன‌னுக்கும் ஜமாத்தே இஸ்லாமி அதிகார‌ பூர்வ‌ ஆத‌ர‌வு தெரிவித்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

4. S.M.பாக்கர். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிரிந்து வந்த இவர், இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இங்கு ஆள் பலம் குறைவு என்றாலும், ஊடக பலம் கிட்டும்.

5. ஜமாத்துகளில் தனது நிலைப்பாட்டை எடுத்து கூறுதல் மூலம், வேறு யாருக்கும் கிடைத்திராத மிகச்சிறந்த பிரச்சாரமான வெள்ளி மேடையை பயன்படுத்தலாம்.

இதெல்லாவற்றையும் விட களப்பணி மிக முக்கியம். களப்பணிக்கு சற்றும் களைத்தவர்கள் அல்லர் த மு மு க தொண்டர்கள்!!! இந்த சொல்லை நிரூபிக்க அவர்களுக்கு நேரம் வந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறது மனிதநேய மக்கள் கட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

தொகுதிவாரியான அலசல் அடுத்த பதிவில் எழுதப்படலாம்... உங்கள் ஆதரவு இதற்கிருந்தால்...

Jan 25, 2009

Bush Failures and Successes - போ! மறுமையில் சந்திப்போம்

எட்டு ஆண்டுகள்! எத்தனை மனிதர்கள்.இந்த மண்ணில் பிறந்து அதன் அழுக்கைக் கூட ரசித்து வாழப் பிறந்தவர்களை உன் ஆயுதங்களால் அழித்தாய். அதற்காக உன்னை ஆண்டவனே அனுப்பியதாகவும் அறிவித்தாய்!உன் அத்தனைத் திமிரையும் ஒரு செருப்பு அடக்கியதே! அந்த நேரம் கூட செத்து விடுவோம் என்று நீ பதை பதைத்தாயே! ஆனால்... எத்தனை பச்சிளம் குழந்தைகள் உன் குண்டுகளுக்கு இரையாகி துடிதுடித்து இறந்தது. எத்தனை குழந்தைகள் தன் சொந்தங்களைப் பிரிந்து அனாதையாகிவிட்டது. விதவையாகிய பெண்கள் எத்தனை? துணையை இழந்த ஆண்கள் எத்தனை? தள்ளதாத வயதில் வீல் செயரில் தள்ளிச் செல்லக்கூட ஒரு உறவினர் இல்லாத எத்தனையோ முதியவர்கள்? பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை! பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லை! ஒரு உறவுக்கு மறு உறவு இல்லை என நீ துண்டாடியது எத்தனை பேர்?சொந்தங்கள் எத்தனை சொத்துக்கள் எத்தனை என்று அத்தனையும் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு சிறிய பங்கு உன் செல்ல மகளுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாயா?இத்தனை நாள் செய்ததினால் ஏற்பட்ட விரக்தியில் மனமுளைச்சலாகி பகலிலும் கனவிலும் உன்னை நீயே கொல்லத்தான் போகின்றாய்.நேற்றுவரை உன்னை நேசித்தவர்கள் நாளை எப்படி பேசப்போகின்றார்கள் ஏசப்போகின்றார்கள் என்றும் பார்க்கத்தான் போகின்றாய்.உலகம் முழுக்க உனக்கு கிடைத்ததை மரியாதை என்று மாற்று வார்த்தையாகவல்லவா பார்த்து வந்தாய். கொன்றால் கோடி முறை கொன்று விடுவார்கள் என்று பயந்ததனாலல்லவா இரும்புக் கோட்டையை கட்டி நடமாடினாய்.ஊடகம் ஒரு ஆயுதம் என்று கேட்டிருக்கின்றோம். அது மெய்யா பொய்யா என்பதுவல்ல. ஆனால் அந்த ஊடகத்துறையிலிருந்த ஒருவன் தன் கால் செருப்பையே ஆயுதமாக்கி உன்னை அனுப்பியனானல்லவா, அதுவே பெரிய ஆயுதம்.இதற்கு மேலுமா வேண்டும் உனக்கு மரியாதை? வேட்டி மடித்து நடப்பவர்கள் தெருநாயைப் பார்க்கையில் மடிப்பை அவிழ்த்து விடுவார்கள். அது அது நாயை மரியாதை செய்வதற்காக அல்ல! கடித்து குதறிவிடும் என்ற பயத்தினால்தான். அதைப் போன்று உன் காட்டேறித் தனம் பாயாமல் இருப்பதற்காக தன்னை பாதுகாத்துக் கொண்ட நிகழ்வைத்தான் நீ மரியாதை என்று கருதினாய். எம்மைப் பொறுத்தமட்டில் இரண்டும் ஒன்றே!உன் நாக்கில் உமிழ் நீர் இருந்ததோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகள்தான் இருந்தது. உலகில் யாரும் பயங்கரவாதம் செய்யக் கூடாது என்று நீ ஓலமிட்டபோதெல்லாம் அதில் நிறைந்திருந்து மறைந்திருந்த வார்த்தைகள் இன்று புரிகின்றது.பயங்கரவாதியாக நான் ஒருவனிருக்க உலகில் வேறு பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது என்றுதானே நீ ஓலமிட்டாய். அதிலும் கூட பல பயங்கரவாதிகள் இருப்பதாக நீ காட்டியதும் பெரும் பொய்யல்லவா?உயிரியல் ஆயுதம் என்று கூறி நீ பறித்த உயிர்கள்தான் எத்தனை? ஆனால் பின்னர் ஒரு மயிர் அளவு கூட உன்னால் அதை காட்ட முடியாததும் நீ பொய்யர் சக்கரவர்த்தி என்ற மணி மகுடத்தை சூட்டி உன்னை நீ இழிவு படுத்தியதும் உயிருள்ள ஒரு மனிதனால் சுமக்க முடியாதல்லவா? அதனால்தான் வெட்கம் கெட்டவனாகிய நீ சுமந்து திரிந்தாயோ?பால் குடிக்கும் பாலகர்கள் பரிதவிக்கும் மாதர்கள் துணையிழந்த கணவர்கள் துயரம் தின்னும் பெரியவர்கள் என்ற பெரும் பட்டியல்கள் உன்மீது கேட்டுவைத்த சாபங்கள் உன்னை சும்மா விடாது. இன்று சொல்லப்படுவதைப்போல் ஒரு செருப்பால் முடிந்துவிடாது.போர் போர் போர் என்று நீ செய்ததெல்லாம் அமைதிக்காக என்று காரணம் கூறிய கொடுங்கோலனே. உன் அகராதியில் அமைதிக்குப் போர் என்பது கன்னித்துவத்திற்கு கற்பழிப்பு என்ற வாதத்திற்கும் எள்ளளவும் வித்தியசம் தெரியவில்லையே!அதனால்தான் அஃப்கானிலும் இராக்கிலும் இன்ன பிற அப்பாவி நாடுகளிலும் சென்று உன் ஆட்கொல்லி உருவங்கள் கொலை நடத்தியதுடன் கற்பழிப்புகளும் நடத்தியதா? என்ன கிடைத்தது உனக்கு? எண்ணை கிடைத்தது! அப்படித்தானே.நீ அமைதியை நாடியிருந்தால் எத்தனையோ நாடுகள் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி உறங்க ஒர் உறவிடமின்றி தவிக்கின்றதே அதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ஒரு வேளை சோறு போடுவதால் உன் ஆயுதம் விற்றுத் தீர்ந்துவிடாது என்பது தெரியாமலிருக்க நீ மடையன் ஒன்றும் அல்ல! அப்படித்தானே?அமைதியை விரும்பும் நீ முதலில் ஆயுதத்தை தவிர். ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கு! அதையே உலகமயக் கொள்கையாக்கு! இதைச் செய்தால் நீ அமைதியை விரும்புபவன் எனலாம். ஆனால் நீயோ அண்டை நாடுகளில் சிண்டு முடிந்துவிட்டு அங்கும் இங்குமாய் ஆயுதம் விற்று அப்பாவிகளின் இரத்தத்தையல்லவா உணவாகப் பருகுகின்றாய்.உனக்கு அடிமையாக வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் அறிவாளிகள் எனப்படுவோர் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களும் உன் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி ஆயுதம் வாங்கிக் குவிப்பது உன் வெற்றி என்று கருதுகின்றாய். அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும்!அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் என்ற பெயரில் இன்னும் சில மணித்துளிகள் கூட அதன் சுகம் அனுபவித்துச் செல்லும் உன்னால் ஏற்பட்ட சோகம் ஏராளம். நீ மட்டும் தான் இப்படி எனவில்லை. உன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை இது. அதில் நீ கூடுதல் கவனம் செலுத்தி கூடுதல் இரத்தம் குடித்தாய் அவ்வளவே!இனிவரும் அதிபர் பாரபட்சமில்லாமல் பலருக்கும் பணியாற்றியதைக் கேட்டிருக்கின்றறோம். அவன் இரத்தத்தில் அது ஊறிக் கிடந்தால் இனியும் அது ஊற இருந்தால் ஒரு சில காலங்கள் உலகம் சற்று அமைதியாகும்.உன்னைப் போன்றல்ல இறைவன். அவன் நாடியதைச் செய்வான். செய்ததன் காரணங்கள் மறுமையில் கிடைக்கும். அதில் எந்த பொய்யும் இருக்காது. அந்த நாளில் நீயும் உன் அப்பன் புஷ்ஷும் அள்ளி வீசிய குண்டுகள் உன்னைத் திருப்பித் தாக்கும். அந்த மறுமை நிச்சயம். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி இல்லாமல் இல்லை!ஆம்! உன் இதயம் தூய்மையுற்றால், உன் பாவங்களுக்கு பரிகாரமாய் இறைவனிடம் இன்றே நீ கேட்டுவிட்டால் கருணையுள்ள இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்
நன்றி; எங்கோ வாசித்தது

Oct 4, 2008

துஆக்களின் அற்புத பலன்கள் - நூல் விமர்சனம்

துஆக்களின் அற்புத பலன்கள் - நூல் விமர்சனம் இது உர்துவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்.
துஆ வுடன் தொடங்கும் எந்த ஒரு செயலுக்கும் நிச்சியம் பலன் உண்டு என்கிறார் ஆசிரியர் மௌலானா முஹம்மது இல்யாஸ் நத்வி பட்கலீ . அதற்கு தன்னுடைய வாழ்விலேருந்தே பல உண்மை சம்பவங்களை எடுத்து சொல்கிறார், படிப்பவர்கள் தன் நடைமுறை வாழ்வில் நிச்சயம் துஆ வையும் இணைத்து கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழில்: மௌலவி செயத் அப்துர் ரஹ்மான் உமரி (மொழி இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும், மௌலவி

வெளியீடு: அஹத் பப்ளிஷர்ஸ், மதுரை. +91 9345055666.

பயனுள்ள நல்ல நூல். தரமான புத்தகக்கட்டு. புத்தகத்திலிருந்து ஒரு சம்பவம், எல்லாவகையான சோதனைகளும் விலகிப்போகும் இஃஜாஸ் இறையச்சமுள்ள நல்லமனிதர். வாழ்க்கையில் எல்லாவகையான வசதிகளையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். குடும்பத் தொழில் அல்லாது தனி தொழில், தனி வீடு என்று என்று வாழ்க்கையில் வளமாக அவர் செட்டில் ஆகியிருந்தார். ஏழைகளை ஆதரிப்பது, ஆதவற்றவர்களை உபசரிப்பது போன்ற அருங்குணங்கள் சிறுவயதிலிருந்தே அவரிடம் இயற்கையாக அமைந்திருந்தன. அதன் காரணமாக எல்ோருடைய நேசத்திற்கும் பாசத்திற்கம் உரித்தானவராக இருந்தார். அதிய்யா பதூல்!. இஃஜாஸுடைய மூத்தமகள். ஆளை அசரவைக்கும் அழகும் சௌந்தர்யமும் ஒருங்கேபெற்ற பேரழகு இளம்பெண். இஸ்லாமிய ஒழுக்கத்தின்படி வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற பக்குவத்தை இயல்பிலேயே பெற்றவள். மெட்ரிக் பள்ளித்தேர்வில் முதலிடத்தை வென்றிருந்தாலும் இருபாலரும் கலந்து கற்கும் கல்லூரிக்கு செல்லவிரும்பாமல் அதே ஊரிலிருந்த ஓர் இஸ்லாமியப் பாடசாலையில் மூன்றாண்டு இஸ்லலாமியப் பட்டப்படிப்பில் சேர்ந்துகொண்டாள். பண்பும் படிப்பும் அழகும் அருங்குணமும் கொண்ட அதிய்யா தங்கள் வீட்டு மருமகளாக வரமாட்டாளா என்று அவ்வூரிலுள்ள அனைத்து தாய்மார்களும் ஏங்கலாயினர். இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே நல்லதோர் இடத்தில் இஃஜாஸ் சம்பந்தமும் பேசி முடித்திருந்தார். மூன்றாமாண்டு படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. நாட்கள்தாம் எவ்வளவு வேகமாக நகருகின்றன!. இதோ கல்யாண தேதி வெகுவிரைவில் வந்துவிடும். தன்னுடைய மூத்தபெண் செல்வமகளுடைய திருமண தேதியை வெகுஆர்வமாக இஃஜாஸ் எதிர்பார்த்திருந்தார். வீடே கல்யாணக்களை கட்டியிருந்தது. மணப்பெண்ணுக்கான நகைகள், புத்தாடைகள் என்று தினமும் வீட்டுப்பெண்கள் ஷாப்பிங் செய்தவாறு இருந்தனர். திடீரென்று ஒருநாள் அதிய்யாவின் உடல்நிலை சீர்கெட்டது. தாங்கமுடியாத வயிற்றுவலி. நிறுத்தாமல் வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தாள். குடும்ப டாக்டரை அழைத்துக் காட்டினார்கள். மருந்து மாத்திரை கொடுத்தும் நிற்கிறபாடில்லை. பக்கத்திலுள்ள மாநகருக்கு கூட்டிக்கொண்டுபோகலாம் என்று டாக்டர் சொன்னதன் பேரில் பெரிய ஹாஸ்பிடல் ஒன்றில் அட்மிட் செய்தார்கள். ஸ்கேன் எடுக்கப்பட்டது; லாபராட்டரியில் இரத்தம், சிறுநீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரிஸல்ட் வந்ததும் இஃஜாஸுடைய நிம்மதி முற்றிலும் குலைந்துவிட்டது; அவருடைய மனக்கோட்டைகள், கனவுகள் எல்லாம் தகர்ந்துவிட்டன. பூமி அதே இடத்தில் பிளந்து அவரை விழுங்கிவிடும் போலிருந்தது. பதூலுக்கு புற்றுநோய் பீடித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று டாக்டர் சொன்னவுடன் அவருடைய உள்ளம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. ஹதாமதிக்காதீர்கள்! தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து. உடனடியாக நல்லதொரு கேன்ஸர் ஸ்பெஷசலிஸ்ட் யாரிடமாவது போய்க் காட்டுங்கள்' என்று டாக்டர்கள் விரைவு படுத்தினார்கள். தன்னுடைய ரிபோர்ட் என்னவாகயிருக்கும் என்று தெரிந்துகொள்ள பதூலுக்கும் ஆவலாக இருந்தது. சோகத்தில் மூழ்கிப்போய் தொங்கிப்போன முகத்தோடு அப்பா தன்னுடைய அறைக்குள் நுழைவதைக் கண்ட பதூலுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ நெகடிவ் ரிசல்ட் வந்திருக்கின்றது என்று மட்டும் புரிந்தது. பலமுறை கேட்டும் அப்பா எதுவுமே சொல்லவில்லை. கவலைப்பட ஒன்றுமில்லை! எல்லாம் சரியாகிவிடும் என்றுமட்டும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் நீ கவலைப்படாதே! காலிகட்டில் வயிற்றுவலிக்கான நிபுணர் ஒருத்தர் இருக்கிறாராம். அவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் எல்லாம் நலமாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்' என்று பலதையும் இஃஜாஸ் சொல்லியவாறு இருந்தார். ஹஇங்கே பாருங்கப்பா! ரிசல்ட் என்னவென்று எனக்கு முழுவதையும் சொல்லியாகவேண்டும். இல்லையென்றால் நான் மருந்தையும் சாப்பிடமாட்டேன்; சிகிச்சையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். நோயைக் கொடுத்தவன் இறைவன்தான். அதற்கான மருந்தையும் அவனால்தான் கொடுக்கமுடியும். ஏதேனும் சிக்கல் என்றால் அவனிடம் கையேந்தி மன்றாடுவோம். அதைவிட்டுவிட்டு இப்படி சோகமாக நின்றுகொண்டிருந்தால் எப்படி?' என்று ஒரேயடியாக பதூல் சொன்னதும் வேறுவழியேதும் தெரியவில்லை. டாக்டர் சொன்னதையெல்லாம் சொல்லியாகவேண்டிய கட்டாயத்துக்கு இஃஜாஸ் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் சொன்னார். இஃஜாஸ் சொல்லிமுடித்ததும் அடுத்தநொடியில் பதூலின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. ஹஎனக்கு வேறு என்ன வியாதிவேண்டுமானாலும் வரலாம். ஆனால், கேன்ஸர் மட்டும் வரவே வராது!' இஃஜாஸுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. ஹஎன்னம்மா, சொல்றே கண்ணு! டாக்டர்கள் எல்லாவகையான டெஸ்ட்டையும் எடுத்தபிறகுதான் இந்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள். நீயென்னடான்னா எடுத்த உடனேயே இல்லைன்னு மறுக்கிறாயே!' பதூல் சொல்லத் தொடங்கினாள்: ஹஅப்பா! நான் ஒரு ஹதீதை படித்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஹஏதேனும் கஷ்டமான நோயில் அல்லது ஏதேனும் கடும் ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளவரைப் பார்த்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அத்தகைய நோயிலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியுள்ளான் அல்லவா? அவ்வாறு அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்தினால் அந்த நோய் உங்களுக்கு வரவே வராது!'. எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் உலகத்திலேயே கஷ்டமான நோய் புற்றுநோய்தான் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். புற்று நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நோய் வந்தவர்கள் படும் துன்பத்தை யாராலும் பார்க்க சகிக்காது என்றும் சொல்கிறார்கள். இந்த ஹதீதை கேள்விப்பட்ட நாளில் இருந்து கேன்ஸரைப் பற்றிக் கேள்விப்பட்டாலோ புத்தகங்களில் படித்தாலோ உடனே நான் அந்த துஆவை ஓதிக்கொள்ளுவேன். அந்த நோயாளிகளுக்காகவும் துஆ செய்வேன். அந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக என்னால் முடிந்தளவு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவேன். அந்த துஆ இதுதான்... அல்ஹம்து லில்லாஹில்லதீ, ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹி, வ ஃபழ்ழளனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக்க தஃப்ழீலா! ஹஇவரைப் பீடித்துள்ள இந்த நோயில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லா{ஹக்கே புகழ் அனைத்தும்!. அவன் படைத்த எத்தனையோ படைப்பினங்களைவிட எனக்கு சிறப்பை அளித்துள்ளான்!' என்பது இந்தத் துஆவின் பொருள். இந்த துஆவை ஓதிவந்தால் கண்டிப்பாக அந்த வியாதி ஓதியவர்களுக்கு வரவேவராது என்று இறைத்தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறியுள்ளார்கள். நானும் அதை அப்படியே மனப்பூர்வமாக நம்பி ஓதி வந்துள்ளேன். தனக்கு நன்றி செலுத்திய அடியானை அந்த அல்லாஹ் காப்பாற்ற மாட்டானா? அதனால்தான் அடித்துச் சொல்கிறேன். எனக்கு வேறு எந்த வியாதி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கேன்ஸர் மட்டும் வரவே வராது!. உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் வேறு ஏதேனும் தலைசிறந்த டாக்டரிடம் போய்ப் பார்ப்போம். அவர் சொல்வதைச் செய்வோம். கடைசியில் நான் சொன்னபடிதான் ரிஸல்ட் வரும்!'. பதூலுடைய வார்த்தைகளைக் கேட்கக்கேட்க இஃஜாஸுடைய உள்ளத்தில் மெதுவாக நம்பிக்கைக் கதிர் ஒன்று உதயமானது. தன்னுடைய அண்ணனையும் அவர் சந்தித்துப் பேசினார். டாக்டர்கள் சொன்னதையும் பதூல் சொன்னதையும் அவரிடம் கூறினார். இரண்டுபேரும் ஆலோசனை செய்தார்கள். ஹஎதற்கும் ஒருமுறை சோதித்துப் பார்த்துவிடுவோமே! புற்றுநோய் மருத்துவத்தில் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனமான டாடா புற்றுநோய் ஆய்வு மையம் மும்பையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கருவிகள் அங்கு உள்ளன. மிகவும் திறமையாக அங்கு நோய்க்கான சிகிச்சை அளிக்கப் படுகின்றது. அல்லா{ஹத்தஆலா வேண்டுமளவுக்கு உனக்கு வசதியையும் கொடுத்துள்ளான். ஆகையால். தாமதிக்காமல் ஒருமுறை அங்குபோய் சிகிச்சை செய்து பார்த்துவிடுவோம்' என்ற முடிவிற்கு வந்தார்கள். அடுத்தநாள் விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்கள். பதூல் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். விளக்கமான ரிபோர்ட் உங்களுக்கு வேண்டுமென்றால் இரண்டு நாள் தங்கி எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்துப் பார்த்துவிடுங்கள் என்று டாக்டர்கள் ஆலோசனை தந்தார்கள். அவை அனைத்தும் காஸ்ட்லியான சோதனைகளாக இருந்தன. ஏராளமான பணம் செலவானது. இஃஜாஸ் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் அல்லாஹ்விடம் துஆ செய்துகொண்டே இருந்தார். வீட்டினர் அனைவரும் ரிஸல்ட்டை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். நான்காவது நாள் தன்னைப் பார்க்கவருமாறு தலைமை டாக்டர் இஃஜாஸை வரவழைத்தார். ஹயா அல்லாஹ்! எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டோம். இனிமேல் நி கருணை காட்டினால்தான் உண்டு!' என்று மனதிற்கள் இஃஜாஸ் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார். நல்லசெய்தி வரவேண்டுமே என்று அவருடைய மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் உட்கார்ந்திருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தவாறே இஃஜாஸ் அறைக்குள் நுழைந்தார். டாக்டருடைய முகத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றவா என்று துலாவினார். தூரத்தில் இருந்தே புன்னகைத்தவாறு டாக்டர் இஃஜாஸைப் பார்த்தார். இஃஜாஸுக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. டாக்டர் தன்னருகில் உட்காருமாறு கூறிவிட்டு பேசத் தொடங்கினார். ஹமிஸ்டர் இஃஜாஸ்! ஓர் ஆச்சரியமான விஷயத்தை சொல்லப்போகிறேன். மருத்துவம் சொல்கின்ற படி எல்லாவகையான டேஸ்ட்டுகளையும் நாங்கள் செய்துவிட்டோம். புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவம் கூறும் எல்லா அறிகுறிகளும் உங்கள் மகளிடம் காணப்படுகின்றன. ஆனால், மருத்துவக் கல்விக்கு எதிராக ரிஸல்ட் வந்துள்ளது. நோய் தாக்கவில்லை! மனித சக்திக்கு மீறிய ஏதோ ஒரு சக்தி செயல்படுகின்றது என்றுதான் இதற்கு காரணம் கூறவேண்டும். ஆயிரக்கணக்கான பேஷன்டுகளில் யாரேனும் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான ரிஸல்ட் வரும். இந்த ரிஸல்ட்டைப் பார்த்ததும் உங்களைக் கேட்காமல் நாங்களாகவே வேறு பல டெஸ்ட்டுகளையும் செய்துபார்த்தோம். எல்லா டெஸ்ட்டுகளிலும் இதே போலத்தான் ரிஸல்ட் வந்தது!'. பொலபொலவென்று இஃஜாஸுடைய கண்களில் இருந்து கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்ற அவர் மனதுக்குள் அரற்றிக் கொண்டிருந்தார். டாக்டருடைய கைகளைப் பிடித்து அவர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஹஎனக்கு எதற்காக நன்றி சொல்கிறீர்கள்? எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்' என்றார் டாக்டர். உடனே ஓடோடி வந்து பதூலுடைய அறைக்குள் நுழைந்தார். டாக்டர் சொன்னதை வேகவேகமாகச் சொன்னார். பதூலுடைய முகத்தில் எந்த ஆச்சரியமும் தென்படவில்லை. அப்படியா என்று சாதாரணமாக அவள் கேட்டுக்கொண்டாள். ஹநான் அல்லாஹ்வையும் நம்புகிறேன்; அல்லாஹ்வுடைய தூதரையும் நம்புகிறேன். எனக்கு புற்றுநோய் வராது என்பது எனக்கு முன்பே தெரியுமே!' என்று அதற்கான காரணத்தையும் அவள் கூறினாள். பதூலுடைய வீட்டில் வருத்த மேகங்கள் விலகி நம்பிக்கை வெளிச்சம் பளீரென்று அடித்தது. அந்தநாள் அவர்களுக்கு பண்டிகை நாள். சந்தோஷம் எல்லோருடைய முகங்களிலும் தவழ்ந்தது. பதூலுடைய கல்யாணமும் அதே வருடம் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்!.

Sep 26, 2008

பிறை

ஒரே பிறை ஒரே பிறையைத்தான் இருவரும் பார்க்கிறோம் களங்கம் அதிலில்லை தோழா காணும் நம் கண்களில்; செடிகளின் பசுமை உனக்குப் பிடிக்கிறது; நான் உடுத்திக்கொண்டால் தீண்டா நிறம் உனக்கு வெடி வெடித்தவன் தலையில் குல்லாவும் தாடையில் தாடியும் இருந்தால் நாங்கள் அனைவரும் மொட்டை போட்டு முகத்தில் முழுச்சவரம் செய்ய வேண்டுமா? பிடித்த நடிகன் முதல் விளையாட்டு வீரன் வரை 'கான்'களின் காலெண்டர் உன் வரவேற்பறையில்; என்னை வரவேற்க மட்டும் என் கடவுளோ உன் கடவுளோ குறுக்கே நிற்கிறார் எதிர் வீட்டில் என்னாரை (NRI) அண்டை வீட்டில் அமெரிக்கன் என்று பெருமைப் படுகிறாய் அருகில் என்னை மட்டும் அண்டவிடாமல் செய்கிறாய் எங்கள் இல்லங்களில் வெடிகுண்டு தயாரிப்பது குடிசைத் தொழிலென்று எண்ணுகின்றாய் போலும் குண்டுகளுக்கு மதமில்லை அவைகள் எல்லா உடல்களையும் சிதறடிக்கும் என்றுனக்குத் தெரியாதா? நீயொன்றும் மதவெறியனன்று; நீ 'ஹாப்பி கிறிஸ்மஸ்' பாடுவதைப் பார்த்திருக்கிறேன் நானும் தான் நண்பா 'கணபதி பப்பா மோரியா' என்றேன் நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும் 'ஈத் முபாரக்' என்று. நன்றி; எங்கோ வாசித்தது

Sep 15, 2008

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன் தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ? எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ? இதைத் தெரிந்து கொள்ள அந்த நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் என் நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஊஹூம்...! அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றிரண்டு வரும்; அவ்வளவுதான்' என்று சொல்லி வருந்தினார். முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார். விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார். இந்த விமர்சனம் சரிதானா ? வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். - சிராஜுல் ஹஸன் பொறுப்பாசிரியர், சமரசம் www.samarasam.com www.iftchennai.org samarasam12@gmail.com 16-30 செப் 2008 சமரசம் இதழிலிருந்து