Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Sep 21, 2012

உயிரினும் மேலான...!


இஸ்லாமியர்கள் வரலாற்று தவறிழைத்துவிட்டார்கள்.  இவர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தத் திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியவந்தது. அது ஒரு இரண்டாம்தர, மஞ்சள் திரைப்படம். அதை இயக்கியவன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே இருப்பவன். இவர்களுக்கு விளம்பரம் தேடித்தந்திருக்க வேண்டாம். - இவையெல்லாம் தம்மை நடுநிலைவாதி, கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக் கொள்பவர்களின் விமர்சனம். தினமணி ஒருபடி மேலே போய் கூத்தாடி ஷாருக் கானும், சாமியார் அப்துல் கலாமும் அமெரிக்கா சென்ற போது அவமானப்படுத்தப்பட்டார்களே அப்போது நீங்கள் போராடவில்லையே என்று சொல்கிறது.

இவை மேலோட்டமாக கேட்கும் போது நியாயமான அக்கறை போல தோன்றினாலும், அவர்கள் இழிவுபடுத்தியிருப்பது நாம் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபியை (அவர் மீது அமைதி நிலவட்டும்). உயிரினும் மேலாக என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல, நமது உயிரைவிட அவர் மீது மதிப்பு வைத்துள்ளோம் என்பதைச் சரியாக புரிந்துகொண்ட மேற்கத்தீய சக்திகள் முஸ்லிம்களின் உணர்சியை தூண்டிவிட தவறான இடத்தில் கல்லடித்துள்ளனர். 9/11க்குப் பிறகான இஸ்லாத்தின் வளர்ச்சி வேகம் இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கலாம். அதனாலேயே ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்கள் மீதான இவர்களின் காழ்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறார்கள்.இப்போது ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் கார்டூனும் இதற்குச் சான்று. இது இன்னசன்ஸ் முஸ்லிகளை கொதிப்படையச் செய்து, கலவரத்தை உண்டுபண்ணச் செய்யும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

முஸ்லிம்கள் கலகக்கார்கள் அல்ல, அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்ட அறவழிப்போராட்டம் மேற்கொண்டாலும், இவர்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தீவிரவாதத் சுவர் இவர்களை தீவிரவாதிகளாகவே வெளிக்காட்ட வேண்டும என்பதில் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் இஸ்லாம் ஒருபோதும் தன்னுடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதுதான். இஸ்லாமினுடைய உண்மையான அமைதி முகம் வெளித்தெரிகையில் இவர்கள் மீது இத்தனை நாளாக கட்டி எழுப்ப முற்படும் தீவிரவாத முகத்திரை பொய்த்துவிடும் என்பது இயல்பான பயம்.

சமீபத்தில் நடந்துவரும் ஏனைய போராட்டங்களின் போது காவல்துறை அத்துமீறலை, அடக்குமுறையை கண்டித்த பலரும், இந்தப் போராட்டத்தில் இன்னசன்ஸ் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். மாமியார் உடைத்தால் மண்குடமாம். அமெரிக்க நாடுகளில் கூலி வாங்கும் பலரும் அவர்களுக்கு விசுவாசமாகவே இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. 

வெள்ளையர்களைச் சுட்டு வீழ்த்திய கட்டபொம்மனையும், பகத்சிங்கையும், சுபாஷ் சந்திர போஸையும் இந்திய  விடுதலைப் போராட்ட வீரர்களாக, தியாகிகளாக ஏற்றுக் கொள்ளும் நாம், சதாம் உசைனையும், ஒசாமாவையும் தீவிரவாதிகள் என சட்டென முத்திரை குத்திவிட்டோம். திப்பு சுல்தான் கோயில்களை கொள்ளையடித்தான் என்று சொல்லப்படுவதையும் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் இவர்களுடைய வரலாறுகளையாவது படித்துப் பார்த்திருந்திருக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. 

அதே இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்தான் சென்னையில் மய்யப் பகுதியில் வரலாறு காணாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப்  பெருக்கக் கூடிவந்து பேருந்து ஒன்றையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் எரித்தார்கள் என்பதை நம்ப வைக்கிறது. உயிரினும் மேலான முஹம்மது நபியை இழிவுபடுத்திய அமெரிக்கர்களை எதிர்க்க உணர்ச்சிப் பெருக்கில் அமெரிக்க தூதரகம் மீது கல்லெரிந்தாலும் (இதை நான் ஆதரிக்கவில்லை) அருகில் இருக்கும் வேறெந்த சொத்திற்கும் சேதம் விளைவிக்கவில்லை. காவல் துறையினரை திருப்பி அடிக்கவில்லை. அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்த சமுதாயம், இப்பவும் அடிவாங்கியவாறே ஓடிக் கலைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் கூடங்குளத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து முதலில் சென்னையில் மறியலில் ஈடுபட்டு கைதாகியது ஒரு முஸ்லிம் அமைப்பு. 

இத்தகைய அறவழிப்போராட்டம் நடந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு சென்னையில் இத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதே அதிர்சியாக இருக்கிறதாம். சிலருக்கு இனி அமெரிக்க விசா கிடைப்பது சிரமமாகிவிடும் என்ற கவலை. இன்னும் சிலர், அமெரிக்காகாரன் படமெடுத்தால் அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுக்கையிட வேண்டும் என்ற கோபம். 

இவையெல்லாவற்றையும் விட இணையப் போராளிகளின் அக்கறை புல்லரிக்க வைக்கிறது. அலுவலகத்தில் நேரம் போக்க ஃபேஸ் புக், ட்விட்டர், கூகள்+ல் தினம் போராட்டம் நடத்துகிறது இந்தக்கூட்டம். ஒரே போராட்டத்திற்கு தினமும் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் தினம் தினம் புதிய அவலை தேடி அலைகிறார்கள். ஈழம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு, ஹஜாரே, டீஸல், டி20 என இவர்களது சமூக ஆர்வம் பரந்து விரிந்தது. ராஜபக்சே மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் எழுதும்போது கூடங்குளத்தில் அணுஉலை ஆபத்தானது என்று ஃபேஸ்புக்கில் எழுதுவார்கள். கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், அண்டை மாநிலத்துக்கு கொடுக்கக்கூடாது என்று கூகள்+ல் எழுதினால், காவிரி நீரில் நமக்கு முழு உரிமை உள்ளதென ப்ளாக்கில் எழுதுவார்கள். இலங்கை சுற்றுலா பயணிகளை அடித்து விரட்டியதை வெல்டன் என் எழுதிய கை, தூதரக சன்னல் கண்ணாடி உடைந்ததை அந்தோ பரிதாபம் என்று எழுதுகிறது.

கட்டிட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தூதரின் குடும்பத்திற்கு அழ்ந்த அனுதாபங்கள். அது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செயல், குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோலவே,  இப்பிரச்னையில் சற்றும் தொடர்பில்லாத மாநகரப் பேருந்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுக்கு தாராள உரிமை இருக்கிறது, இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. 

முஹம்மது நபியை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்தப் அறப்போராட்டம். ஆம், நம் உயிரினும் மேலாக!

Oct 29, 2009

குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்

ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.
நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும்.
Congratulations, it's your lucky day! You've just won $5,000!
இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.  ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,  இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)
இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் இங்கே சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு  அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.cctv-poster
பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் சிசிடிவி  பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.
இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…

Oct 14, 2009

க்ராஸ் டாகிங்

முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.

பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
cross-1
மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.

உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட,  சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.

இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?

1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.
2. க்ராஸ் டாகிங்  முறையை பயன்படுத்தலாம்.

க்ராஸ் டாகிங் - Cross Docking
ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும்.
crossdocking-2
வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில்,  கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
Map
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.

க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.
குறைந்த செலவு.
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.
அவசியமற்ற தளவாட வாடகை.
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.
பரவலான வேலைவாய்ப்பு.
எரி பொருள் சிக்கனம்.
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.

தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…

நன்றி.

Sep 28, 2009

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

"அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

k1057276
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!

May 3, 2009

அத்வானி, பன்றிக்காய்சல், இலங்கை - ஜிகர்தண்டா

செய்தி; இந்தியாவிலும் பன்றிக்காய்சல். லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேரில் 5 பேருக்கு பன்றி காய்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரதுறை செயலர் தெரிவித்துள்ளார்.

நல்லா செக் பண்ணுங்கப்பா… கோட்டை சண்டைல இத கோட்ட விட்றாதீங்க…

பன்றி காய்சல் பற்றிய எனது முந்தைய பதிவை வாசிக்க இங்கே செல்லவும்.

செய்தி; ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல். இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்வதாக சந்தேகம் எழுந்ததால், கோவையில் இந்திய ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.

சாலைமறியல் போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ராணுவ வாகனம் தாக்குதல் கொஞ்சம் ஓவராயிடுச்சோ?

செய்தி; முதல்வர் கருணாநிதி கடும் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

என்ன காய்சல் னு பார்த்து, அவர ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா… ரெஸ்ட் இன் பீஸ்.

செய்தி; இந்தியா உடனடியாக அணுகுண்டு தயாரிக்க வேண்டும் – அத்வானி.

ராஜபக் ஷே ட்டருந்து எத்தன கிலோவுக்கு பர்சஸ் ஆர்டர் வந்திருக்கு?

ஒரு திருமணமாகாத பெண் தன் அம்மாவிடம் தான் கருவுற்றிருக்கதாக சொல்கிறாள். அவளுடைய அம்மா காச் மூச் என்று கத்திவிட்டு,'யார் அந்த கருப்பாடுன்னாவது தெரியுமான்னு' கேட்க, உடனே அந்த பெண் மொபைல எடுத்து SMS அனுப்பினாளாம். அடுத்த 5 நிமிசத்துல ஒரு BMW வாசல்ல வந்து நிக்குது, அதிலருந்து நம்ம ___________(யார் பேரையாவது போட்டுக்குங்கப்பா) மாதிரி ஒருத்தர் இறங்கி வீட்டுக்குள்ள வந்து, ஜென்டில்மென் அக்ரிமென்ட் போடுகிறார்.

நடந்தது நடந்து போச்சு, உங்க பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், '50 லட்ச ரூபாய் பேங்ல டெபாசிட் பண்றேன். பெண் குழந்தைன்னா, 1 கோடி. ரெட்டைக்குழந்தை பிறந்தால், ஒவ்வொறுத்தர் பேர்லயும் 50 லட்சமும் அம்பத்தூர்ல இருக்குர என்னோட ஒரு பேக்டரியும் சேர்த்து தருகிறேன். ஆனால், இடையிலேயே அபார்ஷன் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க' என்று கேட்க..

அவ்வளவு நேரமா அமைதியா இருந்த அந்தப்பெண்ணுடைய அப்பா, 'இன்னொரு தடவ முயற்சி பண்ணுங்கன்னு' சொன்னாறாம்.

Chill: better luck next time.

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

பன்றி காய்சல் அபாயம்

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus)

SIV என்று சொல்லப்படக்கூடிய ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus) தமிழில் பன்றி காய்சல் என்பது, ஐரோப்பிய நாடுகளிலிருந்து உலகம் முழுக்க பரவுவதற்கு சாத்தியமுள்ள நச்சுக்கிருமியாகும். (Swine Flu) பன்றி காய்சலானது (Birds Flu) பறவை காய்சலிலிருந்து மாறுபட்டு, மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது.

2009 ல் முதல் பன்றி காய்சலின் திடீர் கிளர்ச்சியானது உடைந்த H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலிருந்து வெடித்ததாக மெக்ஸிக்கோ பொது சுகாதார நிறுவனத்தால் மார்ச் 2009 ல் கண்டறியப்பட்டது. அதன் தொடற்சியாக, மெக்ஸிகோவின் எல்லைக்கு அருகாமையிலிருக்கும் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது, கனடா,ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகளிலும் இதன் பாதிப்பு சுமார் 1800 நோயாளிகளுக்கு இருக்குமென்று அறியப்படுள்ளது.

பன்றி காய்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஸ்வைன் ஃப்ளு எனப்படுகிற பன்றி காய்சலானது, அதிகப்படியான ஸ்வைன் A(H1N1) வைரஸிலிருந்து மூர்கத்தனமாக பன்றிகளுக்கு தொற்றிக்கொண்டு அவற்றை செயலிலக்கச்செய்யும் ஒரு நுண் கிருமி ஆகும். இக்கிருமியின் பாதிப்பால் பன்றிகளுக்கு திடீர் நலக்குறைவு உண்டாகுமே தவிர அதிகமான பன்றிகள் கொல்லப்படுவதில்லை

இதே H1N1 வைரஸ் தான் மனித H1N1 வைரஸா?

இல்லை இந்த H1N1 ஆனது முற்றிலும் மாறுபட்டது, எனவே மனித H1N1 வைரஸிற்கான மருந்தானது இவற்றிக்கு பாதுகாப்பளிக்காது.

மனிதற்களுக்கு இந்நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளதா?

பன்றி காய்சலானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனினும் சில சந்தர்பங்களில் பன்றி காய்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய தொழிலாளர் போன்றோருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

அவ்வாறு தொற்றிக்கொண்டால் அதன் அறிகுறிகள் என்ன?

காய்சல், இருமல், சோர்வு, பசியின்மை, தொண்டை புண், உடல் வலி, தலை வலி சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்படலாம்

இதே வகையான (ஸ்வைன் ஃப்ளு) பன்றி காய்சல் தான் மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தொற்றிக்கொண்டுள்ளதா?

மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பாதிப்படைந்த நோயாளிகளின் கிருமி மாதிரி ஒரே வகையானது என்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த கிருமியானது வட அமெரிக்காவிலிருந்து மனித கிருமி மற்றும் பறவை கிருமியும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆசிய நாடுகளின் பன்றி கிருமியும் சேர்ந்த கலவையாகும். அதாவது மிக்ஸ் வைரஸ்.

இதற்கு நிவாரண மருந்து?

டாமிஃப்ளு (TamiFlu) மாதிரியான 4 வகை மருந்துகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது, எனினும் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகிலுள்ள மருத்துவமனையை அனுகுவது நல்லது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் வாழ்பவர்களுக்கு ப்ரத்யேகமாக ஏதாவது?

நோய் பரவுவதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க; அடிக்கடி கைகழுவுதல், இருமல் அல்லது தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர் நீங்களாயிருந்தால் வீட்டிலேயே இருக்கவும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

இது அனைத்து நாட்டினருக்குமான பொது அறிவுரையாகவே தோன்றுகிறது

நாடு

உறுதி

செய்யப்பட்டது

மற்ற

வாய்ப்பிருப்பது

இறப்பு

தொடுப்பு

மெக்ஸிக்கோ (details)

26

1,995

149 (20)

[1][2]

அமெரிக்கா (details)

48

212+

0

[3][2][4]

கனடா (details)

6

28+

0

[2][5]

ஐக்கிய நாடுகள் (details)

2

21

0

[6]

ஸ்பெயின் (details)

1

35

0

[7][8]

நியுஸிலாந்து

0

56

0

[9]

ஆஸ்திரேலியா

0

19

0

[10][11]

கொலம்பியா

0

12

0

[12]

பிரேசில்

0

11

0

[13][14]

ஸ்விசர்லாந்து

0

5

0

[15]

டென்மார்க்

0

4

0

[16]

ஐயர்லாந்து

0

4

0

[17]

செக் குடியரசு

0

3

0

[18]

போலந்து

0

3

0

[19]

பிரான்ஸ்

0

3

0

[20]

கவுட்மாலா

0

3

0

[21]

இஸ்ரேல்

0

2

0

[22]

அர்ஜன்டீனா

0

1

0

[23]

கொஸ்டாரிகா

0

1

0

[24]

பெரு

0

1

0

[25]

ரஷ்யா

0

1

0

[26]

தென் கொரியா

0

1

0

[27]

மொத்தம்

83

2,443+

149 (20)

* Not all cases have been confirmed as being due to this strain. Possible cases are cases of influenza-like illness (ILI) that have not been confirmed through testing to be due to this strain. ‡ Deaths with confirmed presence of virus in parentheses.

இந்த தகவல்கள் யாவும் பொதுநலன் கருதி கீழே குறிப்பிட்டுள்ள வலைகளில் இருந்து திரப்பட்டது.

www.cdc.gov/travel

http://www.who.int/

http://www.mayoclinic.com/

http://en.wikipedia.org/wiki/2009_swine_flu_outbreak_in_Mexico