Apr 15, 2009

சிரிங்க சிரிங்க...கடிங்க கடிங்க...

சிரிங்க சிரிங்க...கடிங்க கடிங்க...

மெகானிக்கல் இன்ஜினியர் மெகானிக் ஆகலாம், ஸாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸாஃப்ட்வேர் ஆகமுடியாது.

மெழுக வச்சு மெழுகுவத்தி செய்யலாம், கொசுவ வச்சு கொசுவத்தி செய்யமுடியாது.

பஸ் ஸ்டாப்ல நின்னா பஸ் வரும், ஃபுல் ஸ்டாப்ல நின்னா ஃபுல் வருமா?

எத்தனால் குடிச்சா நீ டான்ஸ் ஆடுவ, மெத்தனால் குடிச்சா உனக்காக டான்ஸ் ஆடுவாங்க.

நீ ஏர் டெல் வச்சிருந்தாலும் ஏர் செல் வச்சிருந்தாலும் தும்முனா ஹட்ச் னு தான் சத்தம் வரும்.

நீ எவ்லோதான் படிச்சு சர்டிஃபிகேட் வச்சிருந்தாலும், உன் டெத் சர்டிஃபிகேட்ட உன்னால வாங்க முடியாது.

பல்லு வலினா பல்ல புடுங்கலாம், காது வலினா காத புடுங்க முடியுமா?

நாம கோவில் மணியை அடிச்சா சத்தம் வரும், கோவில் மணி நம்மல அடிச்சா ரத்தம் தான் வரும்.

காசு இருந்தால் கால் டாக்ஸி, காசு இல்லனா கால் தான் டாக்ஸி.

நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

என்ன தான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிடணும்.

ஆயிரம் தான் இருந்தாலும் அயிரத்தி ஒன்னு தான் பெருசு.

என்னதான் நாய் நன்றியுள்ளதா இருந்தாலும் அதால நன்றி சொல்ல முடியாது.

நீ எவ்லோ பெரிய படிப்பாளியா இருந்தாலும், தேர்வு அறைல போய் படிக்க முடியாது.

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், இரத்த டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது.

4 comments:

  1. எப்டி இப்டிஎல்லாம்???????எந்த வரியை particularise பண்றதுன்னே தெரியல...அத்தனையும் கலக்கல்ஸ்!!!

    ReplyDelete
  2. //நீ எவ்லோ பெரிய படிப்பாளியா இருந்தாலும், தேர்வு அறைல போய் படிக்க முடியாது.
    //

    ஐயோ ஐயோ... காதுக்குள்ளே கசியிற மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  3. நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, தோழர் கோவி.கண்ணன்,
    நன்றி, தோழர் Sasirekha Ramachandran,

    ReplyDelete
  4. செளத்லே நார்த்தங்கா கிடக்கும் நார்த்லே செளத்தங்கா கிடைக்குமா?

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.