May 6, 2009

மன உளைச்சல்

மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்றுங்கள்.

உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையா?

உங்களுக்கு எப்போதும் மனக்கவலையா?

உங்கள் கை நடுக்கம் மற்றும் உள்ளங்கை வியர்வை சுரக்கிறதா?

இவை எல்லாம் மன உளைச்சலுக்கான அறிகுறிகள்.

மன உளைச்சலை கட்டுப்படுத்த முடியும், அது உங்களை கட்டுப்படுத்தும்முன்.

மன உளைச்சல் என்றால் என்ன?

அன்றாட வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் நம் உடலின் பதில் தான் மன உளைச்சல் என்பது. இதில் ஹார்மோன்கள் மற்றும் அட்ரினாலின் வெளிப்பாடும் அடங்கும். அட்ரினாலின் சுரப்பியின் விளையாக இருதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த சக்கரை அளவு கூடுகிறது. மேலும் இது, இரத்த ஓட்டத்தை செரிமான அமைப்பிலிருந்து தசைகளுக்கு மாற்றுகிறது.

மட்டுமல்லாது அதிக நாட்கள் மன உளைச்சலுடன் வாழ்வது, நமது உடல் ஆரோக்கியம், உறவு மற்றும் சந்தோசங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதும் மறுக்க முடியாதது.

மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன?

நேர் மறையான மற்றும் எதிர் மறையான நிகழ்வுகள் இரண்டுமே மன உளைச்சலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது.

பொதுவான காரணங்களாக கருதப்படுபவை;

பெரும்பாலும் வாழ்க்கை மாற்றங்கள்:

அன்புக்குறியோரின் மரணம்.

விபத்து.

சட்டப்பிரச்சனை,

இடமாற்றம்

கடன்,

உடல் நலக்குறைவு,

திருமணம்,

கர்பம்,

புதிய பணி,

விவாகரத்து,

பணியின்மை.

சுற்றுச்சூழல் நிகழ்வு;

அதிகப்படியான ஒலி,

போக்குவரத்து நெரிசல்,

நேர அழுத்தம்,

போட்டி,

தொற்று நோய்,

மன உளைச்சலின் பாதிப்புகள் என்ன?

உடலியல் பாதிப்புகள்;

தலை மற்றும் வயிற்று வலி,

தசை அழுத்தம்,

வேகமான இருதயத்துடிப்பு,

தூக்கமின்மை,

பசியின்மை அல்லது அதிக பசி,

உள்ளங்கை வியர்வை,

உணர்வியல் பாதிப்புகள்;

பதட்டம்,

எளிதில் உணர்ச்சிவசப்படுதல்,

அதிகப்படியான கவலை,

துன்பம்,

பற்றாமை எண்ணம்,

மனவியல் பாதிப்புகள்;

கவனமின்மை,

மறதி,

நம்பிக்கையின்மை

மன உளைச்சலை கட்டுப்படுத்துவது எப்படி?

சிலர் எதிர் மறையான நடவடிக்கைகளான புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலை சமாளிக்க முற்படுவர். இது மன உளைச்சலை கட்டுப்படுத்தியதாக முகமூடியை தந்து இவர்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமல்லாது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இத்தகைய பழக்கங்கள் முற்றிலும் தவறு மற்றும் தவிர்கப்படவேண்டியதாகும்.

மன உளைச்சலை தகர்த்தெரிய;

நேரத்தை சரியாக திட்டமிடுதல்.

தினசரி திட்டமிடல் அவசியம். மிக முக்கியமான செயல்களுக்கு முக்கியத்துவம், பெரிய தேவைகளை உடைத்து சமாளிக்க முடிந்த சிறியவைகளாக ஆக்குதல், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

செய்வதை நேர்மையாய் செய்தல்.

நமக்கு தகுதியான மற்றும் விருப்பமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல். நம்மால் செய்ய முடிந்த வேலைக்கான திட்டமிடல் மற்றும் உற்றுநோக்குதல்.

முக்கியமான வாழ்க்கை மாற்றங்களை பிரித்தல்.

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொறு மாற்றத்திற்கும் போதிய இடைவெளி, அதாவது ஒரே சமயத்தில் பணி மாற்றம், புது வீடு வாகனம் வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல்.

நமக்கிருக்கும பிரச்சனைகளை பற்றி யாரிடமாவது பேசுதல்.

உதவிகோருதல் என்பது இயலாமையின் வெளிப்பாடாகிவிடாது. நமது பிரச்சனைகளை குடும்பத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, மேற்பார்வையாளரிடமோ அல்லது மதத்தலைவரிடமோ மனம்விட்டு பேசுவதன் மூலம் உணர்ச்சிவசப்படுவது குறையும் மற்றும் உளவியல் ரீதியாக ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றியிருத்தல்.

குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நம் வாழ்க்கையின் அங்கம், அவர்களே நமக்கு அன்பு, பாசம், நட்பு மற்றும் தேவையானபோது ஆதரவு தருபவர்கள்.

நம்மை நாமே விரும்ப கற்றுக்கொள்ளுதல்.

நம்மை கண்டு நாம் முதலில் சந்தோசப்படவேண்டும். மற்றவர் முன்னிலையில் நாம் எப்படி தோன்றமளிக்கின்றோம் என்பதில் கவலை கொள்ளாமல், நம் தோற்றத்தில் மகிழ்தல். நேர் எண்ணங்களின் வகையாதல் மிக முக்கியம். அது நமக்கு காட்டித்தரும், நம்மால் எதை மாற்ற முடியும் எதை நமது வாழ்வின் மிகச்சிறந்ததாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை.

ஆரோக்கியமான வாழ்க்கை.

உடற்பயிற்சியின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு உட்கொள்ளுதலும், அளவான உறக்கமும் மிக அவசியம்.

நமக்காக நேரம் ஒதுக்குதல்.

நமக்கு விருப்பமானவற்றை செய்ய நேரம் ஒதுக்குதல், பாட்டு, நடனம், ஓவியம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் நமக்கு விருப்பமானவற்றை செய்தல். சோர்வாகும் போது சிறிது ஓய்வெடுத்தல்.

இளைப்பாற கற்றுக்கொள்ளுதல்

ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல்.

ஆழ்ந்த சுவாசம் பயிற்சி.

  1. ஒலிபெருக்கியில் மெல்லிய இசையை ஓடவிடுங்கள்.
  2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
  3. வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள்.
  4. கண்களை மூடிக்கொண்டு ஒரு கையை வயிற்றில் வைக்கவும்.
  5. மெதுவாக சுவாசத்தை மூக்கினூடாய் உள்ளிழுக்கவும்,
  6. பின்பு மெதுவாக வாய்வழியே வெளியிடவும்.
  7. இதே பயிற்சியை 4-5 முறை 5-10 நிமிடங்கள் செய்யவும், நீங்கள் ஆசுவாசப்படும்வரை.

விழிசார் கற்பனை பயிற்சி.

இந்த பயிற்சிக்கு 10-15 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நேரமிருந்தால் ஆழ்ந்த சுவாசப்பயிற்சியை தொடர்ந்து இதை செய்யலாம்.

  1. வசதியான இடத்தில் நல்ல அமைதியான மெல்லிசையை ஒலிபெருக்கியில் ஓட விடுங்கள்.
  2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
  3. வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
  4. கண்களை மூடிக்கொள்ளுங்கள். கவலைகளை ஒரு ஓரமாக மூட்டைகட்டி வையுங்கள்.
  5. மெதுவாக சுவாசிக்கவும்.
  6. நீங்கள் பச்சை புல்வெளியில் நடந்துகொண்டிருக்கிறீர்கள், சுற்றிலும் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது, பறவைகளின் ரீங்காரம் கேட்பதாக கற்பனை செய்யுங்கள்
  7. தென்றல் உங்களை தழுவுவதாகவும் உணருங்கள்.
  8. நடைபாதையின் முடிவில் வெள்ளை மணல் கடற்கரையும், சூரிய உதயத்தையும் பாருங்கள்.
  9. நீங்கள் ஆசுவாசப்படும்வரை இந்த பயிற்சியை தொடருங்கள்.

இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பது உங்கள் மீது கடமையாகிறது...

16 comments:

  1. சூப்பர் தல..
    அருமையான பதிவு..!

    ReplyDelete
  2. ஒரு நிமிஷம் டாக்டர் ருத்ரனோட பக்கத்தை தெரியாம திறந்துட்டேனோன்னு பயம் வந்துருச்சு.. ஏன் இப்படி திடீர்னு?

    ReplyDelete
  3. நன்றி டக்லஸ்...

    @ கார்த்திகைப் பாண்டியன், அனுபவித்திருக்கிறேன் நண்பா அந்த கொடுமையை...

    ReplyDelete
  4. தமிழ்மண ஓட்டு போட்டுட்டேன் :))) நல்லா இருந்ததால்

    ReplyDelete
  5. அருமையான பதிவு, யூத்பூல் விகடனுக்கு அனுப்புங்கள் கண்டிப்பா போடுவாங்க

    அப்புறம் இனி நான் உங்களுடன் பதிவுலகத்தில் பயணிப்பேன் பாலோவர் :-)

    வாழ்த்துகள் நல்ல பதிவு

    ReplyDelete
  6. அனுபவம் பேசுதா
    அருமையான அவசியமான பதிவு

    ReplyDelete
  7. அருமையான பதிவு..

    கருத்து பெட்டகத்தில் சேகரித்து வைப்பது போல என்னுடைய வலைப்பூவிலும் இந்த தகவலை பதித்துள்ளேன்.

    ReplyDelete
  8. சிந்தனையூட்டும் நல்ல பதிவு நண்பா.
    வாழ்த்துக்கள்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  9. நன்றி கார்க்கி,


    நன்றி சுரேஷ், அனுப்பிட்டேன். மீண்டும் நன்றி, நம்பி தொடர்வதற்கு.


    நன்றி J, ஆமாம் அனுபவமும் பேசுது.


    நன்றி ராஜா, முதல் வருகைக்கும் கருத்திற்கும். உங்கள் வலைப்பூவில் பதித்திருப்பதற்கும்.


    நன்றி “அகநாழிகை“ பொன்.வாசுதேவன் அண்ணே, முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  10. ரொம்ப பயனுள்ள பதிவு பாஸ்..

    ReplyDelete
  11. \\ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல்.\\

    மன உளைச்சல் போகின்ற இடம் தெரியாது!!!

    தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. அருமையான பதிவு. நன்றி! தொடர்ந்து உங்களிடம் இதைப் போன்ற பதிவை
    எதிர்பார்கிறோம்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.