May 4, 2009

அம்மா

நான் மழையில் நனைந்துவந்த ஒரு நாள், அண்ணன் அதட்டுகிறான், ‘ ஏன் குடை கொண்டுபோகவில்லை?’ அக்கா அறிவுருத்துகிறாள், ‘மழை நின்ற பிறகு வந்திருக்கலாமே?’ தந்தை திட்டுகிறார், ‘உடம்புக்கு ஏதாவது ஆன பிறகுதான் அறிவுவரும்’ அம்மா மட்டும்தான்,’என் தலை துவட்டியவாறே, அறிவுகெட்ட மழை… என் மகன் வீடு வரும் வரை பொறுத்திருக்க கூடாதா?’ என்றாள். அதுதான் அம்மா… **************************************************** Chill: அம்மான்னா அப்டித்தான் யோசிக்கணுமோ? **************************************************** அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

5 comments:

  1. நல்லாருக்கு..!

    ReplyDelete
  2. அருமையாக இருந்தது வாழ்த்துகள்

    ReplyDelete
  3. @ டக்லஸ்..... நன்றி,

    @ முத்தன், நன்றி முத்தன்...

    ReplyDelete
  4. பல இடங்களில் கேட்டது என்றாலும்,
    வலையில் படிக்கும்போது இன்னும் சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete
  5. பெத்த மனசு.. அதுதான் நண்பா அம்மாவோட அருமை

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.