என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், '
தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது.
சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.
ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி.. நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா? கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், '
நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.
ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில் இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.
மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
- பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
- திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
- கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
- இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
- இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு. 'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
- கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.
மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும் மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.
முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.